மேலும் அறிய

குற்றவாளிகள் மற்றும் காணாமல் போனவர்களை கண்டறியும் மென்பொருள்- திருச்சியில் அடுத்த வாரம் அறிமுகம்

’’குற்றவாளிகள் மற்றும் காணமல்போனவர்களை கண்டறிய உதவும் மென்பொருளானது திருச்சியில் அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்’’

தமிழக காவல்துறையில் முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து  திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை தொடர்ந்து பழிக்கு பழி வாங்கும் கொலை சம்பவங்கள், திருட்டு சம்பவங்கள், போதை பொருள் விற்பனை போன்ற பல குற்ற சம்பவங்கள், அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிர சோதனையிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்படை அமைத்து தொடர்ந்து பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மேலும் குற்றவாளிகளை சுலபமாக பிடிப்பதற்கு முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் திட்டம் திருச்சியில் இன்னும் ஒரு வாரத்தில் அமல்படுத்தப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


குற்றவாளிகள் மற்றும் காணாமல் போனவர்களை கண்டறியும் மென்பொருள்- திருச்சியில் அடுத்த வாரம் அறிமுகம்

மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்த விவரங்கள் காவல்துறை பதிவேட்டில் பதிவு செய்யப்படும். குற்றவாளிகளின் முகம், கைரேகை, ஆதார் கார்டு, கண்விழிகள், உள்ளிட்டவை ஆவணப்படுத்தப்பட்டது. இந்த ஆவணங்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று தலைமறைவானவர்கள் மற்றும் தப்பியவர்களை காவல்துறையால் விரைவில் அடையாளம் கண்டுவிட முடியாது. இவர்களை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளும் விதமாக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் திட்டம் சென்னையில் நேற்று நேற்று முன்தினம் ஆணையர் கார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் கூறியது..முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் திருச்சிக்கு வந்துள்ளது காணாமல் போனவர்களையும் இந்த மென்பொருள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்றார்.


குற்றவாளிகள் மற்றும் காணாமல் போனவர்களை கண்டறியும் மென்பொருள்- திருச்சியில் அடுத்த வாரம் அறிமுகம்

மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவல் அலுவலர்கள், ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர், வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர், இந்த மென்பொருளை பயன்படுத்துவார்கள் இதன் மூலம் சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கும் போது அவர்கள் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு  நிலுவையில் உள்ளதா என்பது குறித்தும் தெரிந்துகொள்ள முடியும். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் இந்த மென்பொருளை பயன்படுத்தி குற்றவாளிகள் ஊடுருவல் உள்ளதா என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். இந்த புதிய மென்பொருள் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களில் எப்படி முறையாக பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சிக்காக சென்னையிலிருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் மாநகர காவல் துறைக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்படும். பின்பு  புதிய மென்பொருள் திருச்சி மாநகர காவல் துறையினரிடம் அடுத்தவாரம் முதல் அமல்படுத்தப்படும் என்றார் மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன்.

தலைப்பு செய்திகள்

திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலை: ₹3.6 கோடியில் புதிய விபத்தில்லா ஒளிவட்டம்! என்ன தெரியுங்களா?
திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலை: ₹3.6 கோடியில் புதிய விபத்தில்லா ஒளிவட்டம்! என்ன தெரியுங்களா?
திருச்சி ஜங்ஷன் புதிய மேம்பாலம்: 6 மாதத்தில் திறப்பு: நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பணிகள் தீவிரம்
திருச்சி ஜங்ஷன் புதிய மேம்பாலம்: 6 மாதத்தில் திறப்பு: நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பணிகள் தீவிரம்
திருச்சி மாநகரத்தின் இதயப் பகுதியில் 'மரணக் குழிகள்':  சாலைகளின் அவலத்தால் பொதுமக்கள் ஆவேசம்!
திருச்சி மாநகரத்தின் இதயப் பகுதியில் 'மரணக் குழிகள்':  சாலைகளின் அவலத்தால் பொதுமக்கள் ஆவேசம்!
நதிகளின் மடியில் நந்தவனம்: திருச்சியின் நீர்நிலைகளை மீட்க மாநகராட்சியின் 'பசுமைப் புரட்சி'!
நதிகளின் மடியில் நந்தவனம்: திருச்சியின் நீர்நிலைகளை மீட்க மாநகராட்சியின் 'பசுமைப் புரட்சி'!

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Thiruma.: ‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ADMK To TVK : நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
Chennai Power Cut: சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
New Tata Altroz Turbo CNG: நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
Embed widget