மேலும் அறிய

குற்றவாளிகள் மற்றும் காணாமல் போனவர்களை கண்டறியும் மென்பொருள்- திருச்சியில் அடுத்த வாரம் அறிமுகம்

’’குற்றவாளிகள் மற்றும் காணமல்போனவர்களை கண்டறிய உதவும் மென்பொருளானது திருச்சியில் அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்’’

தமிழக காவல்துறையில் முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து  திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை தொடர்ந்து பழிக்கு பழி வாங்கும் கொலை சம்பவங்கள், திருட்டு சம்பவங்கள், போதை பொருள் விற்பனை போன்ற பல குற்ற சம்பவங்கள், அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிர சோதனையிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்படை அமைத்து தொடர்ந்து பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மேலும் குற்றவாளிகளை சுலபமாக பிடிப்பதற்கு முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் திட்டம் திருச்சியில் இன்னும் ஒரு வாரத்தில் அமல்படுத்தப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


குற்றவாளிகள் மற்றும் காணாமல் போனவர்களை கண்டறியும் மென்பொருள்- திருச்சியில் அடுத்த வாரம் அறிமுகம்

மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்த விவரங்கள் காவல்துறை பதிவேட்டில் பதிவு செய்யப்படும். குற்றவாளிகளின் முகம், கைரேகை, ஆதார் கார்டு, கண்விழிகள், உள்ளிட்டவை ஆவணப்படுத்தப்பட்டது. இந்த ஆவணங்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று தலைமறைவானவர்கள் மற்றும் தப்பியவர்களை காவல்துறையால் விரைவில் அடையாளம் கண்டுவிட முடியாது. இவர்களை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளும் விதமாக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் திட்டம் சென்னையில் நேற்று நேற்று முன்தினம் ஆணையர் கார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் கூறியது..முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் திருச்சிக்கு வந்துள்ளது காணாமல் போனவர்களையும் இந்த மென்பொருள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்றார்.


குற்றவாளிகள் மற்றும் காணாமல் போனவர்களை கண்டறியும் மென்பொருள்- திருச்சியில் அடுத்த வாரம் அறிமுகம்

மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவல் அலுவலர்கள், ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர், வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர், இந்த மென்பொருளை பயன்படுத்துவார்கள் இதன் மூலம் சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கும் போது அவர்கள் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு  நிலுவையில் உள்ளதா என்பது குறித்தும் தெரிந்துகொள்ள முடியும். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் இந்த மென்பொருளை பயன்படுத்தி குற்றவாளிகள் ஊடுருவல் உள்ளதா என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். இந்த புதிய மென்பொருள் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களில் எப்படி முறையாக பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சிக்காக சென்னையிலிருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் மாநகர காவல் துறைக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்படும். பின்பு  புதிய மென்பொருள் திருச்சி மாநகர காவல் துறையினரிடம் அடுத்தவாரம் முதல் அமல்படுத்தப்படும் என்றார் மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன்.

தலைப்பு செய்திகள்

Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
Embed widget