மேலும் அறிய

வயல்வெளி வழியாக சடலத்தை எடுத்து செல்ல மறுப்பு - இறந்த பெண்ணின் உடலை ஒரு மணி நேரம் தோளில் சுமந்த உறவினர்கள்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் பகுதியில் இறந்த பெண்ணின் உடலை தோளில் சுமந்தவாறு சாலையில் உறவினர்கள் காத்திருந்த அவலம்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் தனவேல். இவரது மனைவி விஜயலட்சுமி (65). இவர் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இறுதிச்சடங்குக்காக அவரது உறவினர்கள் விஜயலட்சுமியின் உடலை சுமந்துகொண்டு மயானத்திற்கு சென்றனர். தா.பழூர்- இடங்கண்ணி சாலையில் இருந்து மயானம் வரை செல்வதற்கு பாதை இல்லாததால், சிலரது வயல்வெளி வழியாக இறந்தவர் உடலை சுமந்து செல்வதை அப்பகுதி மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்போது நில உரிமையாளர்கள் தங்கள் வயல்வெளி வழியாக உடலை எடுத்துச் செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்துவது கடந்த காலங்களில் நிகழ்ந்து வந்தது. அதேபோல் நேற்று விஜயலட்சுமியின் உடலை அவரது உறவினர்கள் சுமந்து சென்றபோது, அப்பகுதியில் வயல்கள் வைத்துள்ள சில நபர்கள் உடலை கொண்டு செல்ல வழிவிட மறுத்துள்ளனர். இதனால் தோளில் உடலை சுமந்தபடி உறவினர்கள் சாலையிலேயே காத்திருந்தனர். பாதை தடுக்கப்பட்டு இருந்ததால் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
 

வயல்வெளி வழியாக சடலத்தை எடுத்து செல்ல மறுப்பு - இறந்த பெண்ணின் உடலை ஒரு மணி நேரம் தோளில் சுமந்த உறவினர்கள்
 
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தா.பழூர் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் ஆகியோர் நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பல ஆண்டுகளாக தங்கள் வயல்வெளி வழியாக பிள்ளையார்குளம் பகுதி மக்கள், இறந்தவர் உடலை எடுத்துச் செல்வதாகவும், அப்போது தங்கள் வயல்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சவ ஊர்வலத்தில் வருபவர்கள் மிதிப்பதால் அதிக அளவு பயிர்கள் சேதம் அடைவதாகவும், இதனால் ஒவ்வொரு முறையும் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.மேலும் ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உடலை கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதோடு பிரச்சினை முடிந்து விடுகிறது. ஆனால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசு துறைகள் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. பிள்ளையார்குளம் பகுதி மக்கள், தங்களுக்கு நிரந்தர மயான பாதையை அரசிடம் பேசி பெற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் வயல்வெளி வழியாக அவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறினர். இதனால் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 

வயல்வெளி வழியாக சடலத்தை எடுத்து செல்ல மறுப்பு - இறந்த பெண்ணின் உடலை ஒரு மணி நேரம் தோளில் சுமந்த உறவினர்கள்
 
அதே நேரத்தில் சாலையில் உடலுடன் உறவினர்கள் காத்திருந்ததால் தா.பழூரில் இருந்து அண்ணங்காரம்பேட்டை சாலையின் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்கள், வேன்கள், லாரிகள், அண்ணங்காரம்பேட்டை அரசு பேருந்து ஆகியவை ஸ்தம்பித்து நின்றன. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நில உரிமையாளர்களிடம், இந்த பிரச்சினைக்கு வருவாய் துறையினருடன் சேர்ந்து விரைவில் சுமூகமான நடவடிக்கை எடுக்க அரசு துறைகளுக்கு பரிந்துரை செய்து ஆவண செய்வதாக சப்-இன்ஸ்பெக்டர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் வாக்குறுதி கொடுத்தனர். இதனையடுத்து நில உரிமையாளர்கள் அந்த வழியாக உடலை எடுத்துச் செல்ல அனுமதித்தனர். பின்னர் அமைதியான முறையில் விஜயலட்சுமியின் உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  தகனம் செய்யப்பட்டது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் சென்னையில் போராட்டம்! வெற்றி பெறுமா ? அன்புமணியின் திட்டம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் போராட்டம்! வெற்றி பெறுமா அன்புமணியின் திட்டம்?
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
JOB ALERT: ஒரே நாளில் கொத்தாக 50,000 வேலைவாய்ப்பு.! இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- அசத்தல் அறிவிப்பு
ஒரே நாளில் கொத்தாக 50,000 வேலைவாய்ப்பு.! இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- அசத்தல் அறிவிப்பு
Embed widget