மேலும் அறிய

ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை... முதல் கட்டமாக 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முதல் கட்டமாக 6 பேருக்கு மருத்துவ பரிசோதனைக்கு மேற்கொள்ளபட்டது.

தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி மர்ம நபர்களால் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தமிழகம் முழுவதும் 1,500 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின் அடிப்படையில் சந்தேகப்படும் நபர்கள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர். இது தொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதில் ஆட்சேபனை இருந்தால் அதை கோர்ட்டில் தெரிவிக்கலாம் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி சந்தேக நபர்களான சத்யராஜ், திலீப் என்ற லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்ற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து, தென்கோவன் என்ற சண்முகம், மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 13 பேரும் கடந்த 1-ந் தேதி திருச்சி 6-வது ஜே.எம். கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர். வழக்கு விசாரணையில் எதிர்தரப்பு வக்கீல்கள் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் போலீஸ் சூப்பிரண்டு மனு தாக்கல் செய்ய முடியும் என்று கோரிக்கை வைத்த நிலையில், அந்த மனு மீதான விசாரணையை நவம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.


ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை... முதல் கட்டமாக 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை

இதையடுத்து அன்று சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் புதிதாக மனு தாக்கல் செய்தார். அப்போது ஆஜரான 13 பேரின் வக்கீல்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்ததால் விசாரணை 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 14-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது சத்யராஜ், திலீப் என்ற லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்ற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் மாஜிஸ்திரேட்டு முன் ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். தென்கோவன் என்ற சண்முகம் மட்டும் தன்னிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்தார். மற்ற 4 பேர் ஆஜர் ஆகவில்லை.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை 17-ந்தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்த மாஜிஸ்திரேட்டு, மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். அதன்படி நேற்று காலை மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் முன்னிலையில் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, 14-ந் தேதி ஆஜர் ஆகாத 4 பேரும் நேற்று மாஜிஸ்திரேட்டு முன் ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து தென்கோவன் என்ற சண்முகம் தவிர உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அதற்கான அறிக்கை மற்றும் சான்றிதழை வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) கோர்ட்டில் சமர்ப்பிக்க உத்தரவிட்டர்.


ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை... முதல் கட்டமாக 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை

இந்நிலையில் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இன்று முதல் கட்டமாக சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர், நாராயணன் உள்ளிட்ட 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை காலை 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. மேலும், கடலூரை சேர்ந்த ரவுடி செந்திலுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்படும் என சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும் வருகிற 21-ந் தேதி உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்தவுடன், டெல்லியில் சிறப்பு அனுமதி பெறப்பட்டு, 12 பேருக்கும் சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும் என்று சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை துப்பு துலங்காத நிலையில், இந்த உண்மை கண்டறியும் சோதனையிலாவது துப்பு கிடைக்குமா? என்று பொதுமக்களும், போலீசாரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Embed widget