மேலும் அறிய

ஸ்ரீரங்கத்தில் தனியார் வங்கி ATM-யை உடைத்து கொள்ளை முயற்சி

ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலை ஏ.டி.எம். மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இருந்தபோதிலும் இந்த ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளி யாரும் நியமிக்கப்படவில்லை. இந்தநிலையில் இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு மர்ம நபர் ஒருவர் வந்தார். முகமூடி, குல்லா மற்றும் கையுறை அணிந்திருந்த அவர் கையில் கட்டிங் எந்திரம், வயர், உளி உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தார். கடுமையான பனிப்பொழிவு, அதிகாலை நேரம் என்பதால் சாலையில் ஆட்கள் நடமாட்டம் துளியும் இல்லை. முன்னதாக உள்ளேயிருந்த கண்காணிப்பு கேமரா மீது கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி தான் பதிவாவதில் இருந்து தப்பித்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த மர்ம நபர், ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று சாவகாசமாக தான் கொண்டு வந்திருந்த வயரை அந்த எந்திரத்திற்கு பின்னால் இணைத்து கட்டிங் எந்திரம் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தின் போல்ட்டுகளை கழற்றியுள்ளார். மேலும் பணம் வைக்கப்பட்டிருக்கும் கவச பெட்டியையும் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே மும்பையில் உள்ள இந்த வங்கியின் கட்டுப்பாட்டு அறையில் அலாரம் ஒலித்துள்ளது. உடனே உஷாரான அந்த அறையில் பணியில் இருந்த ஊழியர்கள் கேமராவை கண்காணித்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தினை உடைத்து கொண்டிருந்ததை பார்த்துவிட்டனர். உடனடியாக அவர்கள் திருச்சி நெம்பர் 1 டோல்கேட் தனியார் வங்கி கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.


ஸ்ரீரங்கத்தில் தனியார் வங்கி  ATM-யை உடைத்து கொள்ளை முயற்சி

அதன்பேரில் வங்கி மேலாளர் ஸ்ரீரங்கம் போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அடுத்த விநாடி மின்னல் வேகத்தில் செயல்பட்ட ஸ்ரீரங்கம் போலீசார், ரோந்து போலீசார் ஆகியோர் கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தை நோக்கி சென்றனர். அதற்குள் சுதாரித்துக்கொண்ட கொள்ளையன் அங்கிருந்த நைசாக தப்பிவிட்டார். போலீசார் வந்து பார்த்தபோது அங்கு வயர், கட்டிங் எந்திரம் மட்டும் கிடந்தது. போலீசார் விரைந்து வந்ததால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பல லட்சம் பணம் தப்பியது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை தொடங்கினர். இதில் ஏ.டி.எம். மையத்திற்குள் அந்த மர்ம நபர் நுழைவது, உள்ளே இருந்த கேமராவை கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பது, கொள்ளையனின் கண்கள் ஆகியவையும், அவசரம் அவசரமாக அந்த நபர் வெளியேறும் காட்சியும் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த ஏ.டி.எம். மையத்தை ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் பார்வையிட்டனர். இன்று அதிகாலை ஏ.டி.எம். மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget