மேலும் அறிய

புதுக்கோட்டை மாவட்டத்தில் தாய்-மகன் கொலை - போலீஸ் விசாரணை

தாய் மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொன்னமராவதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சிகப்பி (வயது 75). ஆறுமுகம் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களது மகன் பழனியப்பன் (55). என்ஜினீயரான இவர் வீடு கட்டுமான தொழில் மற்றும் சொந்தமாக மரப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி உஷா ஈரோட்டில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பழனியப்பன் நேற்று தனது பிறந்த நாளை தாய் மற்றும் தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். இதை அடுத்து வழக்கம்போல் இரவில் தனது தாயாருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக சென்றவர் பின்னர் மீண்டும் அவர் வெளியே வரவில்லை. மேலும் நேற்று காலை வழக்கம் போல் கட்டிட வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பழனியப்பன் வீட்டின் கதவை தட்டினர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது அங்கு மரப்பட்டரையின் விளக்குகள் அனைத்தும் எரிந்து கொண்டு இருந்தன. பின்னர் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்தபோது அங்கு கண்டகாட்சி அவர்களை உறைய வைத்தது. பழனியப்பன் மற்றும் அவரது தாய் சிகப்பி இருவரும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தனர்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் தாய்-மகன் கொலை - போலீஸ் விசாரணை

இதை அடுத்து அவர்கள் உடனடியாக பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலிஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது தாய், மகன் இருவரும் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்கள். மேலும் வீட்டின் வெளியே பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவின் வயர்கள் அனைத்தும் அறுக்கப்பட்டு கிடந்தது. வீட்டின் உள்அறையில் இருந்த சிசிடிவி கேமராவும் திருடு போயிருந்தது. ஆனால் வீட்டில் நகைகள் ஏதும் இருந்ததா? அவை கொள்ளை போய் உள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணையை போலீசார் உடனடியாக தொடங்கினர். அதேபோல் நகை பணத்திற்காக இந்த கொடூர கொலை சம்பவம் நடந்ததா அல்லது முன் விரோதம் காரணமா மற்றும் தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாய் மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொன்னமராவதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Embed widget