மேலும் அறிய

திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் கைது

நில ஆக்கிரமிப்பை எதிர்த்தவர் அடித்து கொலை செய்யபட்ட வழக்கில் 2 பேர் கைது, திமுக ஒன்றிய செயலர் கதிர்வேல், மற்றும் தொழிலதிபர் ஆகியோர் தலைமறைவு..

திருச்சி மாவட்டம், சோமரசன்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட மல்லியம்பத்து பஞ்சாயத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மயானத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ரியல் எஸ்டேட்காரர்கள் ஆக்கிரமித்து விட்டதாக புகார் எழும்பியது. கொலை செய்யப்பட்ட சிவகுமார், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டதில், சம்பந்தப்பட்ட இடம் மல்லியம்பத்து ஊராட்சிக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள்  சம்பந்தப்பட்ட இடத்தை  அளந்து அளவு கற்கள் நாட்டினர். ஆனால் கற்கள் நடப்பட்ட அன்று இரவோடு இரவாக சில மர்ம நபர்கள் சிலர் கற்களைத் பிடுங்கி அப்புறப்படுத்தினர். இதுகுறித்து மல்லியம்பத்து தலைவர் விக்னேஸ்வரன், ரமேஷ், ஆகியோர் சோமரசன்பேட்டை காவல் நிலையத்தில் கிராம மக்கள் சார்பாக புகார் அளித்தனர்.


திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் கைது

மேலும்  எங்கள் கிராமத்தில் மிக அருகில் 100 மீட்டர் தூரம் உள்ள இடத்தில் எங்கள் மூதாதையர்கள் கிராம பொது பயன்பாட்டுக்காக சர்வே எண் 49-இன் பகுதியில் ஒழுங்கற்ற நான்கு எல்லைகளை கொண்ட சுமார் 5 சென்ட் பரப்பளவு உள்ள நிலம் எங்கள் கிராம கணக்கில் எங்கள் கிராம பெயரிலேயே மயானம் ஒன்று அமைத்திட நிலம் ஒதுக்கப்பட்டது. அது தற்போது தகுந்த பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாமல் பொதுமக்கள் காலப்போக்கில் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தியாதால் கிராமத்திற்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொலையாளி தீபக் எங்கள் கிராமத்தை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல், நாகராஜன், மணப்பாறை BDO ரமேஷ்குமார், செல்வராஜ் உள்ளிட்ட செங்கதிர் சோலையை சேர்ந்த சில முக்கிய நபர்கள், வாசன் ரியல் எஸ்டேட் நிறுவனர் ரவி முருகையாவிடம் பணம் பெற்று கொண்டு நிலத்தை தங்களது பெயரிலேயே கிரையம் செய்து கொண்டு அனுபவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சிவகுமார் புகார் அளித்திருந்தார்.


திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் கைது

இந்நிலையில் சோமரசன் பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, காரணம் எங்களை கைது செய்தால் கிராம பிரச்சினையை உருவாக்கி விடுவோம் என்று காவல் அதிகாரிகளையே சம்பந்தப்பட்ட நபர்கள் மிரட்டியதால் இப்பிரச்சனையை கண்டும் காணாதவாறு விட்டு விட்டனர். இந்நிலையில்தான் நேற்று செங்கதிர் சோலையை சேர்ந்த விக்னேஸ்வரன் ஆதரவாளர் சிவா என்கின்ற சிவகுமார் வீட்டில் இருந்தபோது உருட்டுக்கட்டையால் பிரபாகரன் மற்றும் தீபக் ஆகியோர் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சோமரசன்பேட்டை காவல்துறையினர் சிவகுமார் மனைவி மைதிலி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் செங்கதிர் சோலையை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் ஆதரவாளர் பிரபாகரன், தீபக் ஆகியோர் திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் மற்றும் வாசன் எஸ்டேட் நிறுவனர் ரவி முருகையா தூண்டுதலின் பேரில் சிவகுமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4 பேர் மீதும், வழக்கு பதிவு செய்த நிலையில் பிரபாகரன் மற்றும்  தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான கதிர்வேல் தலைமறைவாக உள்ளதாகவும், வாசன் ரியல் எஸ்டேட் அதிபர் ரவிமுருகையா கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget