மேலும் அறிய

திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் கைது

நில ஆக்கிரமிப்பை எதிர்த்தவர் அடித்து கொலை செய்யபட்ட வழக்கில் 2 பேர் கைது, திமுக ஒன்றிய செயலர் கதிர்வேல், மற்றும் தொழிலதிபர் ஆகியோர் தலைமறைவு..

திருச்சி மாவட்டம், சோமரசன்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட மல்லியம்பத்து பஞ்சாயத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மயானத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ரியல் எஸ்டேட்காரர்கள் ஆக்கிரமித்து விட்டதாக புகார் எழும்பியது. கொலை செய்யப்பட்ட சிவகுமார், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டதில், சம்பந்தப்பட்ட இடம் மல்லியம்பத்து ஊராட்சிக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள்  சம்பந்தப்பட்ட இடத்தை  அளந்து அளவு கற்கள் நாட்டினர். ஆனால் கற்கள் நடப்பட்ட அன்று இரவோடு இரவாக சில மர்ம நபர்கள் சிலர் கற்களைத் பிடுங்கி அப்புறப்படுத்தினர். இதுகுறித்து மல்லியம்பத்து தலைவர் விக்னேஸ்வரன், ரமேஷ், ஆகியோர் சோமரசன்பேட்டை காவல் நிலையத்தில் கிராம மக்கள் சார்பாக புகார் அளித்தனர்.


திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் கைது

மேலும்  எங்கள் கிராமத்தில் மிக அருகில் 100 மீட்டர் தூரம் உள்ள இடத்தில் எங்கள் மூதாதையர்கள் கிராம பொது பயன்பாட்டுக்காக சர்வே எண் 49-இன் பகுதியில் ஒழுங்கற்ற நான்கு எல்லைகளை கொண்ட சுமார் 5 சென்ட் பரப்பளவு உள்ள நிலம் எங்கள் கிராம கணக்கில் எங்கள் கிராம பெயரிலேயே மயானம் ஒன்று அமைத்திட நிலம் ஒதுக்கப்பட்டது. அது தற்போது தகுந்த பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாமல் பொதுமக்கள் காலப்போக்கில் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தியாதால் கிராமத்திற்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொலையாளி தீபக் எங்கள் கிராமத்தை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல், நாகராஜன், மணப்பாறை BDO ரமேஷ்குமார், செல்வராஜ் உள்ளிட்ட செங்கதிர் சோலையை சேர்ந்த சில முக்கிய நபர்கள், வாசன் ரியல் எஸ்டேட் நிறுவனர் ரவி முருகையாவிடம் பணம் பெற்று கொண்டு நிலத்தை தங்களது பெயரிலேயே கிரையம் செய்து கொண்டு அனுபவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சிவகுமார் புகார் அளித்திருந்தார்.


திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் கைது

இந்நிலையில் சோமரசன் பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, காரணம் எங்களை கைது செய்தால் கிராம பிரச்சினையை உருவாக்கி விடுவோம் என்று காவல் அதிகாரிகளையே சம்பந்தப்பட்ட நபர்கள் மிரட்டியதால் இப்பிரச்சனையை கண்டும் காணாதவாறு விட்டு விட்டனர். இந்நிலையில்தான் நேற்று செங்கதிர் சோலையை சேர்ந்த விக்னேஸ்வரன் ஆதரவாளர் சிவா என்கின்ற சிவகுமார் வீட்டில் இருந்தபோது உருட்டுக்கட்டையால் பிரபாகரன் மற்றும் தீபக் ஆகியோர் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சோமரசன்பேட்டை காவல்துறையினர் சிவகுமார் மனைவி மைதிலி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் செங்கதிர் சோலையை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் ஆதரவாளர் பிரபாகரன், தீபக் ஆகியோர் திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் மற்றும் வாசன் எஸ்டேட் நிறுவனர் ரவி முருகையா தூண்டுதலின் பேரில் சிவகுமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4 பேர் மீதும், வழக்கு பதிவு செய்த நிலையில் பிரபாகரன் மற்றும்  தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான கதிர்வேல் தலைமறைவாக உள்ளதாகவும், வாசன் ரியல் எஸ்டேட் அதிபர் ரவிமுருகையா கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Embed widget