மேலும் அறிய

திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் கைது

நில ஆக்கிரமிப்பை எதிர்த்தவர் அடித்து கொலை செய்யபட்ட வழக்கில் 2 பேர் கைது, திமுக ஒன்றிய செயலர் கதிர்வேல், மற்றும் தொழிலதிபர் ஆகியோர் தலைமறைவு..

திருச்சி மாவட்டம், சோமரசன்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட மல்லியம்பத்து பஞ்சாயத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மயானத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ரியல் எஸ்டேட்காரர்கள் ஆக்கிரமித்து விட்டதாக புகார் எழும்பியது. கொலை செய்யப்பட்ட சிவகுமார், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டதில், சம்பந்தப்பட்ட இடம் மல்லியம்பத்து ஊராட்சிக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள்  சம்பந்தப்பட்ட இடத்தை  அளந்து அளவு கற்கள் நாட்டினர். ஆனால் கற்கள் நடப்பட்ட அன்று இரவோடு இரவாக சில மர்ம நபர்கள் சிலர் கற்களைத் பிடுங்கி அப்புறப்படுத்தினர். இதுகுறித்து மல்லியம்பத்து தலைவர் விக்னேஸ்வரன், ரமேஷ், ஆகியோர் சோமரசன்பேட்டை காவல் நிலையத்தில் கிராம மக்கள் சார்பாக புகார் அளித்தனர்.


திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் கைது

மேலும்  எங்கள் கிராமத்தில் மிக அருகில் 100 மீட்டர் தூரம் உள்ள இடத்தில் எங்கள் மூதாதையர்கள் கிராம பொது பயன்பாட்டுக்காக சர்வே எண் 49-இன் பகுதியில் ஒழுங்கற்ற நான்கு எல்லைகளை கொண்ட சுமார் 5 சென்ட் பரப்பளவு உள்ள நிலம் எங்கள் கிராம கணக்கில் எங்கள் கிராம பெயரிலேயே மயானம் ஒன்று அமைத்திட நிலம் ஒதுக்கப்பட்டது. அது தற்போது தகுந்த பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாமல் பொதுமக்கள் காலப்போக்கில் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தியாதால் கிராமத்திற்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொலையாளி தீபக் எங்கள் கிராமத்தை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல், நாகராஜன், மணப்பாறை BDO ரமேஷ்குமார், செல்வராஜ் உள்ளிட்ட செங்கதிர் சோலையை சேர்ந்த சில முக்கிய நபர்கள், வாசன் ரியல் எஸ்டேட் நிறுவனர் ரவி முருகையாவிடம் பணம் பெற்று கொண்டு நிலத்தை தங்களது பெயரிலேயே கிரையம் செய்து கொண்டு அனுபவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சிவகுமார் புகார் அளித்திருந்தார்.


திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் கைது

இந்நிலையில் சோமரசன் பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, காரணம் எங்களை கைது செய்தால் கிராம பிரச்சினையை உருவாக்கி விடுவோம் என்று காவல் அதிகாரிகளையே சம்பந்தப்பட்ட நபர்கள் மிரட்டியதால் இப்பிரச்சனையை கண்டும் காணாதவாறு விட்டு விட்டனர். இந்நிலையில்தான் நேற்று செங்கதிர் சோலையை சேர்ந்த விக்னேஸ்வரன் ஆதரவாளர் சிவா என்கின்ற சிவகுமார் வீட்டில் இருந்தபோது உருட்டுக்கட்டையால் பிரபாகரன் மற்றும் தீபக் ஆகியோர் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சோமரசன்பேட்டை காவல்துறையினர் சிவகுமார் மனைவி மைதிலி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் செங்கதிர் சோலையை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் ஆதரவாளர் பிரபாகரன், தீபக் ஆகியோர் திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் மற்றும் வாசன் எஸ்டேட் நிறுவனர் ரவி முருகையா தூண்டுதலின் பேரில் சிவகுமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4 பேர் மீதும், வழக்கு பதிவு செய்த நிலையில் பிரபாகரன் மற்றும்  தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான கதிர்வேல் தலைமறைவாக உள்ளதாகவும், வாசன் ரியல் எஸ்டேட் அதிபர் ரவிமுருகையா கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai's BJP Posting: அண்ணாமலைக்கு அம்சமான பதவி.. பாஜகவின் சூப்பர் ஆஃபர்.. இனி கலக்கல் தான்...
அண்ணாமலைக்கு அம்சமான பதவி.. பாஜகவின் சூப்பர் ஆஃபர்.. இனி கலக்கல் தான்...
Chennai Weather: சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை தொடரும்; வானிலை மையம் அறிவிப்பு!- எங்கே?
Chennai Weather: சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை தொடரும்; வானிலை மையம் அறிவிப்பு!- எங்கே?
Ilaiyaraaja : பணத்திற்கு ஆசைப்படுகிறாரா இளையராஜா..? பாஸ் எதுவா இருந்தாலும் தெரிஞ்சிட்டு பேசுங்க...
Ilaiyaraaja : பணத்திற்கு ஆசைப்படுகிறாரா இளையராஜா..? பாஸ் எதுவா இருந்தாலும் தெரிஞ்சிட்டு பேசுங்க...
JEE Main: ஜேஇஇ மெயின் தேர்வில் குளறுபடியா? பரபரப்பு விளக்கம் அளித்த என்டிஏ
JEE Main: ஜேஇஇ மெயின் தேர்வில் குளறுபடியா? பரபரப்பு விளக்கம் அளித்த என்டிஏ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Wife Porkodi: எரிமலையாய் வெடித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி ”என்ன தூக்க நீ யாரு?”Ayush Mhatre: 17 வயது மும்பை புயல்.. தட்டித்தூக்கிய தோனி! யார் இந்த ஆயுஷ் மாத்ரே?  CSK | IPL 2025Ambur Ambedkar Statue Fight: ’ஏய் நீ பேசாத..’’பாஜக vs திமுக மோதிக்கொண்ட பெண்கள் | BJP Vs DMKEPS vs Vijay: வழிக்கு வந்த சீமான்! முரண்டு பிடிக்கும் விஜய்! விடாமல் போராடும் EPS | Seeman | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai's BJP Posting: அண்ணாமலைக்கு அம்சமான பதவி.. பாஜகவின் சூப்பர் ஆஃபர்.. இனி கலக்கல் தான்...
அண்ணாமலைக்கு அம்சமான பதவி.. பாஜகவின் சூப்பர் ஆஃபர்.. இனி கலக்கல் தான்...
Chennai Weather: சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை தொடரும்; வானிலை மையம் அறிவிப்பு!- எங்கே?
Chennai Weather: சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை தொடரும்; வானிலை மையம் அறிவிப்பு!- எங்கே?
Ilaiyaraaja : பணத்திற்கு ஆசைப்படுகிறாரா இளையராஜா..? பாஸ் எதுவா இருந்தாலும் தெரிஞ்சிட்டு பேசுங்க...
Ilaiyaraaja : பணத்திற்கு ஆசைப்படுகிறாரா இளையராஜா..? பாஸ் எதுவா இருந்தாலும் தெரிஞ்சிட்டு பேசுங்க...
JEE Main: ஜேஇஇ மெயின் தேர்வில் குளறுபடியா? பரபரப்பு விளக்கம் அளித்த என்டிஏ
JEE Main: ஜேஇஇ மெயின் தேர்வில் குளறுபடியா? பரபரப்பு விளக்கம் அளித்த என்டிஏ
Heavy Rain: திடீரென சூழ்ந்த கார்மேகங்கள்! சென்னையை வெளுத்து வாங்கும் கனமழை! எங்கெல்லாம்?
Heavy Rain: திடீரென சூழ்ந்த கார்மேகங்கள்! சென்னையை வெளுத்து வாங்கும் கனமழை! எங்கெல்லாம்?
TN Infrastructure: தமிழ்நாடு - 50 திட்டங்கள் , ரூ.45 ஆயிரம் கோடி - ஒரே ஊரில் ரூ.20,000 கோடி எங்கு? எதற்கு தெரியுமா?
TN Infrastructure: தமிழ்நாடு - 50 திட்டங்கள் , ரூ.45 ஆயிரம் கோடி - ஒரே ஊரில் ரூ.20,000 கோடி எங்கு? எதற்கு தெரியுமா?
Xi Jinping Tour: ட்ரம்ப்புக்கு டாட்டா.. சீனா பலே பிளான்.. தென்கிழக்கு ஆசிய நாடுகளை வளைக்கும் ஷி ஜின்பிங்...
ட்ரம்ப்புக்கு டாட்டா.. சீனா பலே பிளான்.. தென்கிழக்கு ஆசிய நாடுகளை வளைக்கும் ஷி ஜின்பிங்...
EPS ADMK: ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது - எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்
EPS ADMK: ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது - எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்
Embed widget