மேலும் அறிய

தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

விவசாயிகளுக்கு நிவாரண நிதியை உயர்த்தி 20 ஆயிரமாக  தர வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தார். 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மதிமுக சார்பாக காவிரி பிரச்சனை, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய் என்ற கோரிக்கையை முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி கண்டன முழக்கம் எழுப்பினார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியது..  காவிரி ஆற்றில் இருந்து முறையாக தண்ணீர் திறந்து விடாமல் விவசாயிகளை பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.காவேரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை, அதே சமயம் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் சொல்வதையும் கர்நாடக அரசு பொருட்படுத்தவில்லை.  தஞ்சை மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாததால் கருகிவிட்டது. இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கடுகளவு கூட மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார். இந்த மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசை கண்டிக்கிறோம். 


தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

மேலும் பொருளாதார ஏற்ற தாழ்வை சமன் செய்ய கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு போதிய நிதியை வழங்காமல் ஏழை,  எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம். நமது நாட்டில் கிட்டத்தட்ட 16 கோடி ஏழை எளிய மக்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த 16 கோடி மக்களுக்கு 100 நாட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றால் ஆண்டுக்கு 2 லட்சம் 70 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். அவ்வாறு நிதியை ஒதுக்காமல் ஆண்டுக்கு ஆண்டு நிதியை குறைத்து வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். 


தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

தமிழ்நாட்டில் விவசாய நிலங்களில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் விவசாயத்தில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும்.  நம் நாட்டு மக்களை  முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். காவிரி விவகாரத்தில் மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் கர்நாடகா அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு மாநில அரசுக்கு பல்வேறு விதமான அழுத்தங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.  மேலும், விவசாயிகளுக்கு நிவாரண நிதியை உயர்த்தி 20 ஆயிரமாக  தர வேண்டும் என மாநில
அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தார்.  தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை முதன்முதலாக கையில் எடுத்தது வைகோ அவர்கள் தான்,  அந்தத் திட்டம் அப்போதே செயல்படுத்தப்பட்டு இருந்தால்,   இது போன்ற பிரச்சனைகள் எதுவும் தற்போது வந்திருக்காது என்றார். 


தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

வருகின்ற தேர்தலில் நான் போட்டியிட விருப்பமில்லை என  ஏற்கனவே தெரிவித்து விட்டேன். மேலும் வருகின்ற தேர்தலில் மதிமுகவிற்கு இடங்கள் ஒதுக்குவது குறித்து எங்கள் கட்சி மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள். அதேசமயம் தேர்தலில் எங்களது சின்னமான பம்பரம் சின்னத்தில் நிற்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம் அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என நிறைவேற்றுவார்  நம்பிக்கை உள்ளது. பாஜக - அதிமுக கூட்டணி இருந்து விலை கேட்டு அவர்களுடைய தனிப்பட்ட முடிவு. அதேசமயம் அதிமுக சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை பெற முயற்சி செய்து வருகிறது. ஆனால் மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று.  எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது வலுவாக உள்ளது. மற்ற கட்சிகளில் கூட்டணி பிரிவதற்கு,  எங்கள் கட்சியில் கூட்டணி பிரிவு ஏற்படும் என சந்தேகங்கள் தேவையில்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

ஸ்தம்பித்தது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை; மக்கள் மறியலால் போக்குவரத்து கடும் பாதிப்பு!
ஸ்தம்பித்தது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை; மக்கள் மறியலால் போக்குவரத்து கடும் பாதிப்பு!
பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டுங்க... வலுக்கும் கோரிக்கை எங்கு? எதற்கு தெரியுங்களா? 
பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டுங்க... வலுக்கும் கோரிக்கை எங்கு? எதற்கு தெரியுங்களா? 
சிவகங்கையில் பரவலாக மழை: வெப்பம் தணிந்து மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!
சிவகங்கையில் பரவலாக மழை: வெப்பம் தணிந்து மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!
திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலை: ₹3.6 கோடியில் புதிய விபத்தில்லா ஒளிவட்டம்! என்ன தெரியுங்களா?
திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலை: ₹3.6 கோடியில் புதிய விபத்தில்லா ஒளிவட்டம்! என்ன தெரியுங்களா?

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK MLA JOIN TVK : அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
CM Vijay: ”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
Ramadoss vs Arul : இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Financial Changes: ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
VAIKO MDMK : அய்யோ.. நான் அப்படி சொல்லவே இல்லை.. ஒரே நாளில் பல்டி அடித்த வைகோ - நடந்தது என்ன.?
அய்யோ.. நான் அப்படி சொல்லவே இல்லை.. ஒரே நாளில் பல்டி அடித்த வைகோ - நடந்தது என்ன.?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
Embed widget