மேலும் அறிய

தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

விவசாயிகளுக்கு நிவாரண நிதியை உயர்த்தி 20 ஆயிரமாக  தர வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தார். 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மதிமுக சார்பாக காவிரி பிரச்சனை, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய் என்ற கோரிக்கையை முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி கண்டன முழக்கம் எழுப்பினார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியது..  காவிரி ஆற்றில் இருந்து முறையாக தண்ணீர் திறந்து விடாமல் விவசாயிகளை பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.காவேரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை, அதே சமயம் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் சொல்வதையும் கர்நாடக அரசு பொருட்படுத்தவில்லை.  தஞ்சை மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாததால் கருகிவிட்டது. இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கடுகளவு கூட மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார். இந்த மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசை கண்டிக்கிறோம். 


தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

மேலும் பொருளாதார ஏற்ற தாழ்வை சமன் செய்ய கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு போதிய நிதியை வழங்காமல் ஏழை,  எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம். நமது நாட்டில் கிட்டத்தட்ட 16 கோடி ஏழை எளிய மக்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த 16 கோடி மக்களுக்கு 100 நாட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றால் ஆண்டுக்கு 2 லட்சம் 70 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். அவ்வாறு நிதியை ஒதுக்காமல் ஆண்டுக்கு ஆண்டு நிதியை குறைத்து வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். 


தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

தமிழ்நாட்டில் விவசாய நிலங்களில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் விவசாயத்தில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும்.  நம் நாட்டு மக்களை  முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். காவிரி விவகாரத்தில் மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் கர்நாடகா அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு மாநில அரசுக்கு பல்வேறு விதமான அழுத்தங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.  மேலும், விவசாயிகளுக்கு நிவாரண நிதியை உயர்த்தி 20 ஆயிரமாக  தர வேண்டும் என மாநில
அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தார்.  தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை முதன்முதலாக கையில் எடுத்தது வைகோ அவர்கள் தான்,  அந்தத் திட்டம் அப்போதே செயல்படுத்தப்பட்டு இருந்தால்,   இது போன்ற பிரச்சனைகள் எதுவும் தற்போது வந்திருக்காது என்றார். 


தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

வருகின்ற தேர்தலில் நான் போட்டியிட விருப்பமில்லை என  ஏற்கனவே தெரிவித்து விட்டேன். மேலும் வருகின்ற தேர்தலில் மதிமுகவிற்கு இடங்கள் ஒதுக்குவது குறித்து எங்கள் கட்சி மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள். அதேசமயம் தேர்தலில் எங்களது சின்னமான பம்பரம் சின்னத்தில் நிற்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம் அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என நிறைவேற்றுவார்  நம்பிக்கை உள்ளது. பாஜக - அதிமுக கூட்டணி இருந்து விலை கேட்டு அவர்களுடைய தனிப்பட்ட முடிவு. அதேசமயம் அதிமுக சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை பெற முயற்சி செய்து வருகிறது. ஆனால் மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று.  எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது வலுவாக உள்ளது. மற்ற கட்சிகளில் கூட்டணி பிரிவதற்கு,  எங்கள் கட்சியில் கூட்டணி பிரிவு ஏற்படும் என சந்தேகங்கள் தேவையில்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Embed widget