மேலும் அறிய

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 5 பேர் தேர்வு .

அரசு இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தேர்வாகிய புதுக்கோட்டை மாணவிகள் 5 பேருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் அரசு பள்ளிகளில் படித்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 'நீட்' தேர்வு மூலம் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர உள்ளனர். இதற்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி வைஷ்ணவிக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியிலும், மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கயல்விழிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியிலும், ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீநிதிக்கு மதுராந்தகம் தனியார் கல்லூரியிலும் இடம் கிடைத்தது. இதேபோல் கறம்பக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுபாஷினிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியிலும், இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த பார்வதிக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியிலும் படிக்க இடம் கிடைத்துள்ளது. 


புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 5 பேர் தேர்வு .

மேலும் கலந்தாய்வை முடித்துவிட்டு நேற்று 5 மாணவிகளும் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தேர்வு பெற்று கிராமத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவிகளுக்கு கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மருத்துவ மாணவிகளை வரவேற்று அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ள மாணவிகள் கூறுகையில், எங்கள் கிராம மக்கள் அளித்த வரவேற்பு பெருமையாக உள்ளது. மருத்துவ படிப்பு கிராம பகுதி மாணவர்களுக்கு எட்டாக்கனி என்ற நிலை மாறி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வாகி உள்ள 5 பேரும் பெண்கள் என்பது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தினால் கிராம பகுதி மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவர் என தெரிவித்தனர்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 5 பேர் தேர்வு .

இதுகுறித்து இலுப்பூரை சேர்ந்த மாணவி பார்வதி கூறுகையில், எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. நான் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியிலும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தேன். அரசு இடஒதுக்கீட்டில் என்னை போன்ற கிராம பகுதி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைத்தது மிகப்பெரிய வரம். மருத்துவ படிப்பை முடித்து விட்டு ஏழை, எளியோருக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பேன் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget