மேலும் அறிய

பெரம்பலூர் : கூலித்தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய 3 பேருக்கு சிறை

பெரம்பலூர் அருகே கூலித்தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது

பெரம்பலூர் மாவட்டம் அருகே மருவத்தூர் காவல்துறை சரகம் கே.எறையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் (வயது55). இவர் தனது கரும்புத்தோட்டத்தில் 2007-ம் ஆண்டில் கரும்பு பயிரிட்டிருந்தார். விளைந்த கரும்பு பயிர்களை வெட்டுவதற்காக தனது நண்பர் தங்கராஜ் உதவியுடன் கள்ளக்குறிச்சியை அடுத்த க.அலம்பலம் பகுதியைச்சேர்ந்த சத்யா, அவரது கணவர் முருகேசன், உறவினர்கள் கலியன், மருவாயி, வெங்கடேசன் உள்பட விவசாய கூலித்தொழிலாளர்கள் சிலரை கே.எறையூர் கிராமத்திற்கு அழைத்து வந்து கரும்பு வெட்டுவதற்காக தங்கவைத்தனர். 
 
மேலும் அதற்காக முன்பணம் ரூ.50ஆயிரம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கரும்புகள் காய்ந்ததால் கரும்பு வெட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனால் விவசாயி முருகேசனுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடாகி தகராறு ஏற்பட்டது.  இந்த நிலையில் விவசாயி முருகேசன் மற்றும் அவரது தரப்பைச்சேர்ந்த விஜயகோவிந்தராஜ் என்கிற விஜயகுமார் (40), குமார் (65) ஆகிய 3பேரும் சத்யா, அவரது கணவர் முருகேசன், சத்யாவின் உறவினர்கள் கலியன், மருவாயி, வெங்கசேன் உள்பட 13 பேரை குதிருக்குள் 2 வாரங்கள் அடைத்துவைத்து கொத்தடிமையாக நடத்தி  உள்ளனர்.
 

பெரம்பலூர் : கூலித்தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய 3 பேருக்கு சிறை
 
மேலும் அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து சாதி பெயரை இழிவுபடுத்தும் விதமாக தகாதவார்த்தைகளால் திட்டி மிரட்டினர். இதில் பாதிக்கப்பட்ட வெங்கடேசன் தப்பிவந்து காவல்துறையிடம் நடந்ததை கூறினார். இதனை தொடர்ந்து சத்யா, கலியன் உள்பட13 கூலித்தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து சத்யா, மருவத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
 
அதன்பேரில் காவல்துறையினர் முருகேசன், விஜயகோவிந்தராஜ், குமார் ஆகிய 3பேர்மீதும் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து, பெரம்பலூர் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர். இந்த சம்பவத்தை அப்போது காவல்துறை துணை சூப்பிரண்டாக பணிபுரிந்து தற்போது ஓய்வுபெற்றுள்ள மனோகரன் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இருதரப்பிலும் விசாரணை செய்யப்பட்டு நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி மலர்விழி, விவசாயி முருகேசனுக்கு 2 ஆண்டு சிறைதண்டணையும், ரூ.15ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்களுக்கு சிறைதண்டணை அனுபவிக்கவேண்டும் என்றும், விஜயகோவிந்தராஜ் மற்றும் குமார் இருவருக்கும் தலா ஒரு ஆண்டு சிறைதண்டணையும், ரூ.5ஆயிரம் அபராதமும், இதனை கட்டதவறினால் மேலும் இருவரும் தலா 3 மாதங்களுக்கு சிறைதண்டனை அனுபவிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
 

பெரம்பலூர் : கூலித்தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய 3 பேருக்கு சிறை
 
இதனை தொடர்ந்து தொழிலாளர்களை கொத்தடிமையாக வைத்து வேலை வாங்குவது சட்டபடி குற்றம். வீட்டு வேலை, விவசாய வேலை, தொழில்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிறுதிய குழந்தைகள் மற்றும் தொழில் தேடி வருபவர்களை மிரட்டி கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கியதாக புகார்கல் வந்தால் உடனடியாக சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யாரும் இது போன்ற தவறான செயலில் ஈடுபட கூடாது என மக்களுக்கு அறிவுறைகளை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வழங்கினர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ”நான் இளைய காமராஜரா?.. 2026 பற்றி பேசாதீங்க!”  கல்வி விருது விழாவில் விஜயின் எச்சரிக்கை
TVK Vijay: ”நான் இளைய காமராஜரா?.. 2026 பற்றி பேசாதீங்க!” கல்வி விருது விழாவில் விஜயின் எச்சரிக்கை
Ahmedabad Plane Crash: 10 நிமிடம் தான்.. லண்டன் விமானத்தை தவறவிட்ட பெண்.. உயிர் தப்பியது எப்படி?
Ahmedabad Plane Crash: 10 நிமிடம் தான்.. லண்டன் விமானத்தை தவறவிட்ட பெண்.. உயிர் தப்பியது எப்படி?
Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Israel Strikes Iran: ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல் - ”தம்பி எங்களுக்கு சம்மந்தமில்லை” ஓடி வந்த அமெரிக்கா
Israel Strikes Iran: ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல் - ”தம்பி எங்களுக்கு சம்மந்தமில்லை” ஓடி வந்த அமெரிக்கா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Driving

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ”நான் இளைய காமராஜரா?.. 2026 பற்றி பேசாதீங்க!”  கல்வி விருது விழாவில் விஜயின் எச்சரிக்கை
TVK Vijay: ”நான் இளைய காமராஜரா?.. 2026 பற்றி பேசாதீங்க!” கல்வி விருது விழாவில் விஜயின் எச்சரிக்கை
Ahmedabad Plane Crash: 10 நிமிடம் தான்.. லண்டன் விமானத்தை தவறவிட்ட பெண்.. உயிர் தப்பியது எப்படி?
Ahmedabad Plane Crash: 10 நிமிடம் தான்.. லண்டன் விமானத்தை தவறவிட்ட பெண்.. உயிர் தப்பியது எப்படி?
Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Israel Strikes Iran: ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல் - ”தம்பி எங்களுக்கு சம்மந்தமில்லை” ஓடி வந்த அமெரிக்கா
Israel Strikes Iran: ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல் - ”தம்பி எங்களுக்கு சம்மந்தமில்லை” ஓடி வந்த அமெரிக்கா
Skoda Octavia RS: கிளாஸ் & மாஸ் ஸ்கோடா - குஷக், ஸ்லாவியா 2.0 ஆன் தி வே - ஆக்டேவியா கார் பந்தயம் அடிக்குமா?
Skoda Octavia RS: கிளாஸ் & மாஸ் ஸ்கோடா - குஷக், ஸ்லாவியா 2.0 ஆன் தி வே - ஆக்டேவியா கார் பந்தயம் அடிக்குமா?
Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
Embed widget