மேலும் அறிய

திருச்சி: கணவன் - மனைவி தற்கொலை! அநாதையாக நிற்கும் 8 வயது மகன்! - காரணத்தை விசாரிக்கும் காவல்துறை!

திருச்சி அருகே மரத்தில் குமாரசாமியும், அவரது மனைவி பரமேஸ்வரியும் தூக்கில் பிணமாக தொங்கினர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த மணமேடு சிவானந்தா பள்ளிக்கூடம் அருகே வசித்து வந்தவர் குமாரசாமி (வயது 39), டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி (35). இவர்களுக்கு 8 வயதில் மணிகண்டன் என்ற மகன் உள்ளார். குமாரசாமி, அப்பகுதியில் வாடகைக்கு வாகனங்களை இயக்கி வந்தார். காலையில் பணிக்கு செல்லும் குமாரசாமி, இரவில்தான் வீடு திரும்புவார். வழக்கம் போல் நேற்று முந்தினம் பணிக்கு சென்ற குமாரசாமி சற்று முன்னதாக மாலையிலேயே வீடு திரும்பினார். பின்னர் மகன் மணிகண்டனுடன் சிறிது நேரம் விளையாடிக்கொண்டு இருந்தார். இரவு குடும்பத்துடன் அழகரை அக்ரஹாரப் பகுதியில் வசித்து வரும் தன் தந்தை ஜெகதீசன் வீட்டுக்கு மனைவி, மகனுடன் சென்றுள்ளார். அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை முடித்த பிறகு அங்கேயே தூங்கி விட்டனர். 


திருச்சி: கணவன் - மனைவி தற்கொலை! அநாதையாக நிற்கும் 8 வயது மகன்! - காரணத்தை விசாரிக்கும் காவல்துறை!

இந்த நிலையில் நேற்று ஜெகதீசன் வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் குமாரசாமியும், அவரது மனைவி பரமேஸ்வரியும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தனர். இதைப்பார்த்த ஜெகதீசன் மகன், மருமகள் உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டு கதறி அழுதனர். பின்னர் அவர் தொட்டியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆசைத்தம்பி, நல்லதம்பி மற்றும் போலீசார் விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய கணவன், மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


திருச்சி: கணவன் - மனைவி தற்கொலை! அநாதையாக நிற்கும் 8 வயது மகன்! - காரணத்தை விசாரிக்கும் காவல்துறை!

குறிப்பாக மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்த தம்பதியினர் எதற்காக தற்கொலை செய்துகொண்டனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. குமாரசாமிக்கு தொழில் நஷ்டம் ஏதாவது ஏற்பட்டதா, பெண் தகராறில் தம்பதியினர் இந்த விபரீத முடிவை எடுத்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Embed widget