மேலும் அறிய

அடுத்த 10 நாட்களில் பூண்டு விலை கிலோ ரூ.500க்கு விற்பனையா? - வியாபாரிகள் செல்வது என்ன?

திருச்சி மாவட்டத்தில் பூண்டு ஒரு கிலோ ரூபாய் 300 ரூபாய்க்கு விற்பனை - மேலும் விலை உயரும் என்ற அச்சத்தில் இல்லத்தரசிகள் கவலை..

பூண்டின் மருத்துவ குணங்கள்,  நன்மைகள்.. 

பூண்டு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமாகும். பூண்டு உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, ஏனெனில் இது நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளுக்கு இடையில் சமநிலையை பராமரிக்கிறது.
 
இது பிளேக் உருவாவதைத் தடுக்கிறது மற்றும் இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது, இதன் மூலம் அதன் ஆக்ஸிஜனேற்ற பண்பு காரணமாக இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கிறது. பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடும் உடலின் திறனை அதிகரிக்கிறது. இது சளி மற்றும் இருமல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துகிறது, சுவாசக் குழாயிலிருந்து சளியின் வெளியீட்டை அதிகரிக்கிறது. இது அதிக கால்சியம் உள்ளடக்கம் காரணமாக எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 
பூண்டு அதன் ஆக்ஸிஜனேற்ற பண்பு காரணமாக ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் மூளை செல் சேதத்தைத் தடுப்பதன் மூலம் நினைவக சிக்கல்களை மேம்படுத்த உதவுகிறது. இது திசுக்கள் மற்றும் தசைகளுக்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் தடகள செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது. இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பொருள் என்றால் அது பூண்டு ஆகும்.

அடுத்த 10 நாட்களில் பூண்டு விலை கிலோ ரூ.500க்கு விற்பனையா? - வியாபாரிகள் செல்வது என்ன?

நாம் அனைவரும் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளாக பூண்டு உள்ளது. தமிழகத்தில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத்தில் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு அதிக அளவில் பூண்டு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் பூண்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. நாடு முழுவதும் பூண்டு தேவையை நிறைவு செய்வதில் இந்த 2 மாநிலங்கள் முக்கியத்துவம் வகிக்கின்றது. 

தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பூண்டு சந்தை உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பூண்டுக்கு, இந்த சந்தையில் வைத்துதான் விலை நிர்ணயம் செய்யப்படும்.

அதன் பிறகு மாநிலம் முழுவதும் மொத்தம், சில்லறை விற்பனைக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பப்படும். இந்நிலையில், மகாராஷ்டிரா ராஜஸ்தான் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூண்டின் வரத்து மிகவும் குறைந்துள்ளது இதன் காரணமாகவே தற்போது விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 


அடுத்த 10 நாட்களில் பூண்டு விலை கிலோ ரூ.500க்கு விற்பனையா? - வியாபாரிகள் செல்வது என்ன?

திருச்சி வியாபாரி சுரேஷ் கூறுகையில்.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 10 டன் பூண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூண்டு வரத்து தற்போது குறைந்துள்ளது. இருந்தாலும் ஏற்கனவே வந்த கூண்டுகளை வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்து வைத்துள்ளனர் ஆகையால் பூண்டிற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை தற்போது இல்லை என கூறினார். 

மேலும் வரத்து குறைந்ததால் இன்று ஒரு கிலோ பூண்டு ரூபாய் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்த நிலை நீடித்தால் அடுத்த 10 நாட்களில் ஒரு கிலோ பூண்டு ரூபாய் 500 ரூபாய்க்கு விற்பனை ஆகும் என தெரிவித்தார். 

பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கினால் மட்டுமே இந்த விலை குறையும் இல்லையென்றால் மென்மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget