மேலும் அறிய

திருச்சியில் வங்கி ஊழியர்கள் டார்ச்சர் செய்ததால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை

’’வங்கி ஊழியர்கள் தவணை தொகையை கேட்டு தொடர்ந்து தொலைபேசி மூலமாக அவரிடம் தகாத வார்த்தைகள் பேசியதால் விவசாயி மருதமுத்து கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது’’

திருச்சியில் தவணை கட்ட சொல்லி டார்ச்சர் கொடுத்த வங்கி ஊழியர்கள் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தினால் தனியார் வங்கி ஊழியர்களை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் நடத்தினர். திருச்சி மாவட்டம் குழுமணி ரோடு பேரூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் மருதமுத்து வயது (73) விவசாயி இவரது மனைவி ஜெயலட்சுமி 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணமாகி கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இதில் கடந்த 2017 ஆம் ஆண்டில் விவசாய கடனாக தனியார் மகளிர் குழு வங்கி மூலம் மருதமுத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் வங்கி தவணை தொகையை கேட்டு வங்கி சார்பில் இரண்டு பேர் மருதமுத்து வீட்டிற்கு வந்தனர். இதனால் மனமுடைந்த மருதமுத்து வங்கி ஊழியர்களை வீட்டு வாசலில் உட்கார வைத்து விட்டு வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


திருச்சியில் வங்கி ஊழியர்கள் டார்ச்சர் செய்ததால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை

இதுகுறித்து புகாரின் பேரில் அங்கு வந்த ஜீயபுரம் காவல் ஆய்வாளர், காவல்துறையினர் மருதமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை என வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் வங்கி ஊழியர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல் (306) பிரிவில் வழக்கு பதிவு செய்தனர் காவல் துறையினர், வங்கி ஊழியர்கள் மீது விசாரணை நடத்தி அவர்களை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். உடனடியாக வங்கி ஊழியர்களை கைது செய்ய வேண்டுமென திருச்சி அரசு மருத்துவமனை முன்பு குடும்பத்தினர் உறவினர் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி ஜீயாபுரம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் வங்கி ஊழியர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி கொடுத்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது இதனைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை முடிந்து மருதமுத்துவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


திருச்சியில் வங்கி ஊழியர்கள் டார்ச்சர் செய்ததால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை

விவசாயம் செய்வதற்கு கடன் பெற்று மாதந்தோறும் உரிய தவணை செலுத்திவந்தார் மருதமுத்து. பின்பு கொரோனா  காலகட்டத்தில் வருமானம் இல்லாததால் சரியான நேரத்தில் தவணையை செலுத்த முடியவில்லை, இதை நேரில் சென்று வங்கி மேலாளரிடம் மருதமுத்து தெரிவித்துள்ளார். இருந்தாலும் வங்கி ஊழியர்கள் தவணை தொகையை கேட்டு தொடர்ந்து தொலைபேசி மூலமாக அவரிடம் தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயி மருதமுத்து கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் தவணை  தொகையை செலுத்துவதற்கு உரிய பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார் ,இந்த நிலையில் பணம் கிடைக்காத சூழ்நிலையில் வங்கி ஊழியர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து தவணை தொகையை செலுத்த வேண்டுமென தெரிவித்தனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவர் குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.வங்கி ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இது போன்ற ஒரு நிகழ்வு மற்ற விவசாயிகளுக்கு நடக்கக்கூடாது இவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Embed widget