மேலும் அறிய

திருச்சியில் அரசு பஸ்களை சாலையில் நிறுத்தி டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம்

திருச்சியில் அரசு பேருந்து படிக்கட்டில் நின்று பள்ளி மாணவர்கள் பயணம் செய்ததை கண்டித்து அரசு பேருந்துக்களை சாலையின் நடுவே நிறுத்தி டிரைவர்கள்- கண்டக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி தீரன் நகரில் இருந்து  மதியம் 3 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து பாரதியார் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் பேருந்தில் ஏறி படிக்கட்டில் நின்று கொண்டு சத்தம் போட்டுக்கொண்டே வந்தனர்.

இதனை பார்த்த கண்டக்டர் ராமச்சந்திரன் மாணவர்களை பேருந்தின் உள்ளே வரும்படி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன்பின் மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கினர். இதனையடுத்து அரசு பேருந்து அங்கிருந்து சிறிது தூரம் சென்றது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அந்த பள்ளி மாணவர்கள் ஓடிவந்து பேருந்தில் மீண்டும் ஏறினர். இதனை பார்த்த டிரைவர் மகேஷ் பஸ்சை நிறுத்தி மாணவர்களை கண்டித்துள்ளார். மேலும் கண்டக்டர் ராமச்சந்திரனுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மாணவர்கள் கண்டக்டரின் பெயர் சொல்லி தகாத வார்த்தையால் திட்டி அங்கிருந்து ஓடிவிட்டனர். 


திருச்சியில் அரசு பஸ்களை சாலையில் நிறுத்தி டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம்

இதையடுத்து அந்த அரசு பேருந்தை சாலையின் நடுவில் நிறுத்தி, கண்டக்டரை திட்டிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக எதிரே வந்த அரசு பேருந்துக்களையும்  சாலையின் நடுவே நிறுத்தி டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி ஜங்ஷன் பகுதியில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா தலைமையிலான போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பேருந்து கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் இதுதொடர்பாக அந்த பள்ளி நிர்வாகத்திடம் பேசுவதாகவும் தெரிவித்தனர்.

பின்னர் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்யாதவாறு நடவடிகைகளை காவல்துறை சாரபாக எடுக்கபடும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget