மேலும் அறிய

திருச்சி : பதிவுச்சான்றிதழ் பெறாமல் இயங்கும் முதியோர் இல்லங்களுக்கு சீல்வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

திருச்சி மாவட்டத்தில் பதிவுச்சான்றிதழ் பெறாமல் இயங்கும் முதியோர் இல்லங்களுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருச்சி மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட முதியோர் இல்லம் இயங்கி வருகிறது. சில முதியோர் இல்லங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.மேலும் முதியோர் இல்லம் என்ற பெயரில் சிலர் தவறான செயல்பாட்டி ஈடுபட்டு வருவதாகவும் புகார் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கபட்டு முதியோர் இல்லங்களை ஆய்வு செய்தனர். இதன்படி சில இல்லங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமலும், முறையான பதிவு சான்று இல்லாமலும் இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில்  பதிவு செய்யாமல் நடத்தப்படும் முதியோர் இல்லங்களுக்கு சீல்வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.


திருச்சி : பதிவுச்சான்றிதழ் பெறாமல் இயங்கும் முதியோர் இல்லங்களுக்கு சீல்வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

தமிழகத்தில் முதியோர் இல்லம் நடத்தும் தொண்டு நிறுவனங்கள் அதை பதிவு செய்ததற்கான சான்றிதழை கட்டாயம் பெறவேண்டும். இதன்படி பெற்றோர் மற்றும மூத்த குடிமக்கள் பராமாரிப்புச் சட்டம் 2007-ஆம் ஆண்டின் கீழ் சம்பந்தபட்ட மாவட்ட சமூக நல அலுவலங்களில் பதிவு செய்து சான்றிதழ் பெறவேண்டும். இவ்வாறு பதிவு செய்யாமல் இல்லங்களை நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டது. இதன்படி திருச்சி மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்கள் அனைத்து உரிய சான்றிதழுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கடந்த மாதம் 19-ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த கால அவகாம் கடந்த 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த ஜூன் 30-ஆம் தேதி திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 27 இல்லங்கள் பதிவு சான்றிதழ் பெற்று இருந்தன. மேலும் 7 இல்லங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருந்தன.


திருச்சி : பதிவுச்சான்றிதழ் பெறாமல் இயங்கும் முதியோர் இல்லங்களுக்கு சீல்வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

திருச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து முதியோர் இல்லங்கள்  பதிவுச் சான்றிதழை முறையாக பெற்றிருக்க பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக  மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்து சான்றிதழ் புதுப்பித்து முறைப்படி நடத்தவேண்டும் எனவும்,  முறைகேடாக முதியோர் இல்லம் நடத்தப்பட்டு வந்தால்  அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மாவட்ட நிர்வாகம் எச்சரித்து இருந்தது. மேலும்  கடந்த  மாதம் 30-ஆம் தேதியுடன் பதிவு சான்று பெறுவது முடிந்த நிலையில் மாவட்டத்தில் முறைகேடாக நடைபெற்று வரும் முதியோர் இல்லங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை தொடர்ந்து 6 இல்லங்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருந்தன. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் இதன்பிறகு பதிவுச்சான்று பெறாமல் நடத்தப்படும் முதியோர்  இல்லங்களுக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Aadi Perukku holiday Bus : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
Dhanush : ‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Embed widget