மேலும் அறிய

திருச்சி : பதிவுச்சான்றிதழ் பெறாமல் இயங்கும் முதியோர் இல்லங்களுக்கு சீல்வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

திருச்சி மாவட்டத்தில் பதிவுச்சான்றிதழ் பெறாமல் இயங்கும் முதியோர் இல்லங்களுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருச்சி மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட முதியோர் இல்லம் இயங்கி வருகிறது. சில முதியோர் இல்லங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.மேலும் முதியோர் இல்லம் என்ற பெயரில் சிலர் தவறான செயல்பாட்டி ஈடுபட்டு வருவதாகவும் புகார் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கபட்டு முதியோர் இல்லங்களை ஆய்வு செய்தனர். இதன்படி சில இல்லங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமலும், முறையான பதிவு சான்று இல்லாமலும் இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில்  பதிவு செய்யாமல் நடத்தப்படும் முதியோர் இல்லங்களுக்கு சீல்வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.


திருச்சி : பதிவுச்சான்றிதழ் பெறாமல் இயங்கும் முதியோர் இல்லங்களுக்கு சீல்வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

தமிழகத்தில் முதியோர் இல்லம் நடத்தும் தொண்டு நிறுவனங்கள் அதை பதிவு செய்ததற்கான சான்றிதழை கட்டாயம் பெறவேண்டும். இதன்படி பெற்றோர் மற்றும மூத்த குடிமக்கள் பராமாரிப்புச் சட்டம் 2007-ஆம் ஆண்டின் கீழ் சம்பந்தபட்ட மாவட்ட சமூக நல அலுவலங்களில் பதிவு செய்து சான்றிதழ் பெறவேண்டும். இவ்வாறு பதிவு செய்யாமல் இல்லங்களை நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டது. இதன்படி திருச்சி மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்கள் அனைத்து உரிய சான்றிதழுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கடந்த மாதம் 19-ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த கால அவகாம் கடந்த 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த ஜூன் 30-ஆம் தேதி திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 27 இல்லங்கள் பதிவு சான்றிதழ் பெற்று இருந்தன. மேலும் 7 இல்லங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருந்தன.


திருச்சி : பதிவுச்சான்றிதழ் பெறாமல் இயங்கும் முதியோர் இல்லங்களுக்கு சீல்வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

திருச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து முதியோர் இல்லங்கள்  பதிவுச் சான்றிதழை முறையாக பெற்றிருக்க பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக  மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்து சான்றிதழ் புதுப்பித்து முறைப்படி நடத்தவேண்டும் எனவும்,  முறைகேடாக முதியோர் இல்லம் நடத்தப்பட்டு வந்தால்  அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மாவட்ட நிர்வாகம் எச்சரித்து இருந்தது. மேலும்  கடந்த  மாதம் 30-ஆம் தேதியுடன் பதிவு சான்று பெறுவது முடிந்த நிலையில் மாவட்டத்தில் முறைகேடாக நடைபெற்று வரும் முதியோர் இல்லங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை தொடர்ந்து 6 இல்லங்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருந்தன. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் இதன்பிறகு பதிவுச்சான்று பெறாமல் நடத்தப்படும் முதியோர்  இல்லங்களுக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Trichy power cut: திருச்சியில் நாளை (06-06-2026) எங்கெல்லாம் மின் தடை? - ஏரியாக்களின் லிஸ்ட் இதோ
திருச்சியில் நாளை எங்கெல்லாம் மின் தடை? - ஏரியாக்களின் லிஸ்ட் இதோ
மக்களின் வரிப்பணம் வீணாகிறதா? திருச்சி உறையூரில் முடங்கிக்கிடக்கும் நவீன சந்தை வளாகம்
மக்களின் வரிப்பணம் வீணாகிறதா? திருச்சி உறையூரில் முடங்கிக்கிடக்கும் நவீன சந்தை வளாகம்
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
தூண்கள் இல்லாத அதிநவீன வடிவமைப்பு; டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: என்ன தெரியுங்களா? 
தூண்கள் இல்லாத அதிநவீன வடிவமைப்பு; டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: என்ன தெரியுங்களா? 

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
Embed widget