மேலும் அறிய

புதுக்கோட்டையில் 300 ஆண்டுகள் பழமையான தொண்டைமான் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

’’கல்வெட்டு பலகையானது, ஊரணியின் பழைய நீர்வரத்து பாலத்தில் வைத்து கட்டப்பட்டிருந்ததால்,  குளத்தினை வெட்டி நீர்வரத்து பாலம்  அமைத்ததற்க்கான கல்வெட்டு என கருதப்படுகிறது’’

புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே, தொடையூர் கிராமத்தில், குளத்தூர் பகுதியை ஆட்சி செய்த நமண தொண்டைமான் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தமிழ்துறை பேராசிரியர் முத்தழகன் தலைமையில், தொல்லியல் ஆர்வலர்களான, கீரனூர் முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல்பிரசாத் ஆகியோரால் அக்கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டது. இக்கல்வெட்டு குறித்து அவர்கள் கூறியதாவது, செவ்வக வடிவ கற்பலகையில், ஏழு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டில், இடையிடையே எழுத்துக்கள் மிகவும் சேதமடைந்துள்ளன. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தின், வடக்கு பகுதியை ஆட்சி செய்த, முதலாம் நமண தொண்டைமானின், வாசல் பிரதானி ஒருவர், நீர்வரத்து பாலம் அமைத்ததற்காக இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. நமண தொண்டைமானின், குளத்தூர், பேராம்பூர் மற்றும் விராலூர் கிராம கல்வெட்டுகளை போலவே, இக்கல்வெட்டிலும் "ஸ்ரீமது ரெங்க கிருஷ்ண முத்துவீர நமண  தொண்டைமானார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 


புதுக்கோட்டையில் 300 ஆண்டுகள் பழமையான தொண்டைமான் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

மேலும் கல்வெட்டின் தொடக்கத்தில், "பிரமாதி வருடம் "என பொறிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இக்கல்வெட்டானது, கி.பி 1699 – 1700 ஆம் ஆண்டை சேர்ந்தது என கருதப்படுகிறது. முதலாம் நமண தொண்டைமான், புதுக்கோட்டை அரசின் முதல் மன்னரான ரெகுநாதராய தொண்டைமானின் சகோதரர் என புதுக்கோட்டை அரசு ஆவணம் குறிப்பிடுகிறது. இவருடைய ஆட்சி காலத்தில் குளத்தூர் வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் அக்னி ஆற்றின் தொடக்கமான குளத்தூர் பெரியகுளத்தின் கலிங்கி மடை ஆகியன கட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள வாசல்பிரதானி என்பது பதவியை குறிப்பதாகும். அக்கா லத்தில், மன்னருக்கு அடுத்த அதிகாரமிக்கவராக இருந்த தளவாய் என்ற பொறுப்பிற்கு, அடுத்த முக்கியமான பதவி பிரதானி என்பதாகும். அதாவது, இப்பதவி, இக்கால நிதியமைச்சர் பதவியாகும். இந்த கல்வெட்டின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், பிரதானியின் பெயர் தெளிவாக தெரியவில்லை.


புதுக்கோட்டையில் 300 ஆண்டுகள் பழமையான தொண்டைமான் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

மேலும் செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்க: - ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தியது ஏற்கத்தக்கது அல்ல - மதுரை உயர்நீதிமன்றம்

இருப்பினும், கல்வெட்டு பலகையானது, ஊரணியின் பழைய நீர்வரத்து பாலத்தில் வைத்து கட்டப்பட்டிருந்ததால்,  குளத்தினை வெட்டி நீர்வரத்து பாலம்  அமைத்ததற்க்கான கல்வெட்டு என கருதப்படுகிறது. தொண்டைமான் வாரிசுகள், இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருப்பதால், இக்கல்வெட்டு அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பண்டைய கால சிறப்புமிக்க கல்வெட்டுகல் தொடர்ந்து கண்டெடுக்கபட்டு வருகிறது. மேலும் புதுக்கோடை மாவட்டத்தில் பண்டையகால மன்னர்கள் வாழ்ந்தத்ற்கு அடையாளமாய் பல சிறப்புகள் இன்றளவும் அழியாமல் உள்ளது எனவே அனைத்து கல்வெட்டுகளையும் பாதுக்காக்கும் பணியில்  தமிழக தொல்லியல்துறையினர் ஈடுபடவேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்க: - கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி வரும் 5ஆம் தேதி சட்டப்பேரவை முற்றுகை

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Operation Sindoor: 23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை... பழனிசாமிக்கு ஏன் தொடை நடுங்குது? அமைச்சர் ரகுபதி விளாசல்
இதை, அவரின் பேரன்கூட நம்பமாட்டான்.. ‘Cringe’ செய்யும் பழனிசாமி.. விளாசி தள்ளிய திமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்EPS Plan | Ponmudi vs Lakshmanan  | பொன்முடி இனி டம்மி!  பவருக்கு வந்த எ.வ.வேலு  லட்சுமணன் GAME STARTS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Operation Sindoor: 23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை... பழனிசாமிக்கு ஏன் தொடை நடுங்குது? அமைச்சர் ரகுபதி விளாசல்
இதை, அவரின் பேரன்கூட நம்பமாட்டான்.. ‘Cringe’ செய்யும் பழனிசாமி.. விளாசி தள்ளிய திமுக
'Bhargavastra' Anti Drone System: இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
Stalin's Plan for Senthil Balaji: செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
Cabinet Meeting Outcomes: ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
John Spencer on Operation Sindoor: அட இதுவல்லவோ பாராட்டு -  ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி சொல்வது என்ன?
அட இதுவல்லவோ பாராட்டு - ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி சொல்வது என்ன?
Embed widget