மேலும் அறிய

திருச்சி - காரைக்கால் டெமு ரயில் சேவை: மீண்டும் வருமா? பயணிகளின் எதிர்பார்ப்பு! முக்கிய கோரிக்கை!

காரைக்கால்-திருச்சி DEMU ரயில் கொரோனா காலத்திற்கு முன்பு டெல்டா மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

திருச்சி: திருச்சி-காரைக்கால் இடையே மீண்டும் டெமு ரயில் சேவை இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது. பயணிகளும் இந்த டெமு ரயில் சேவையை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா காலத்தில் திருச்சியிலிருந்து காரைக்கால் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அந்த சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட மக்கள் மற்றும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்கள் வழியாக காலையில் இயங்கிய காரைக்கால்-திருச்சி டெமு ரயில் பயணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. அதேபோல் இந்த டெமு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. இதைதான் மீண்டும் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் ஆலோசனை குழுவின் (DRUCC) 11 உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை வைத்தனர். கோவிட்-19 தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட காரைக்கால்-திருச்சி டெமு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

இந்த ரயில் காலை 6.30 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு திருச்சியை அடையும். ஆனால், இந்த ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. காரைக்காலில் இருந்து திருச்சிக்கு காலை நேர ரயில் எதுவும் இல்லை என்று DRUCC உறுப்பினர் வி. ஆர். தனசீலன் கூறினார்.

பயணிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். கூடுதல் ரயில்கள், புதிய நிறுத்தங்கள், ரயில் நிலையங்களை மேம்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். முன்னதாக, DRM பாலக ராம் நேகி, கோட்டத்தில் நடந்து வரும் முக்கிய திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார்.

அதேபோல் திருச்சி எம்பி துரை வைகோ, DRM-க்கு தனி மனு அளித்தார். அதில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். திருச்சி வழியாக செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். மேலும், திருச்சி-தாம்பரம் சிறப்பு ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.

காரைக்கால்-திருச்சி DEMU ரயில் கொரோனா காலத்திற்கு முன்பு டெல்டா மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த ரயில் காலை நேரத்தில் காரைக்காலில் இருந்து திருச்சிக்கு செல்ல வசதியாக இருந்தது. தற்போது அந்த ரயில் நிறுத்தப்பட்டதால், மக்கள் சிரமப்படுகிறார்கள். அதனால், அந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனை குழு வலியுறுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget