மேலும் அறிய

திருச்சியில் அகதிகள் முகாமில் கைதிகள் தொடர் போராட்டத்தால் பரபரப்பு

திருச்சி மத்திய சிறை அகதிகள் சிறப்பு முகாமில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை வழங்க கோரி கைதிகள் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் வழக்கு முடிவதற்கு முன்பாக வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த முகாமில் இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா, தெற்கு சூடான் உள்பட பல நாடுகளை சேர்ந்த 156 பேர் உள்ளனர். இவர்கள் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருவது உண்டு. கடந்த மாதம் 20-ந்தேதி திருச்சி சிறப்பு முகாமில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். கேரளாவில் போதைப்பொருள் சிக்கிய வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது முகாமில் இருந்து தங்க நகைகள், பணம், செல்போன்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் சிறப்பு முகாமில் சோதனை நடத்தினர். இதில் குறிப்பிட்ட 11 அகதிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி அகதிகளுக்கான சிறப்பு முகாமில் திருச்சி மாநகர போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 155 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 


திருச்சியில் அகதிகள் முகாமில் கைதிகள் தொடர் போராட்டத்தால் பரபரப்பு

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று அகதிகள் முகாமில் கைதிகள், அங்குள்ள மரத்தின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  "தண்டனை காலம் முடிந்த பின்னரும் எங்களை சிறையில் வைத்துள்ளனர். எங்களை காப்பாற்றுங்கள்,  பறிமுதல் செய்த செல்போனை கொடுங்கள்" என கையில் பதாகைகளை தூக்கிப் பிடித்தபடி அவர்கள் கோஷம் போட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மாலை 5.30 மணிக்கு பிறகு அவர்கள் மரத்தில் இருந்து இறங்கினர். இந்த சம்பவத்தால் முகாம் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து அகதிகள் முகாமில் இருக்கும் கைதிகள் அவ்வபோது இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது. 


திருச்சியில் அகதிகள் முகாமில் கைதிகள் தொடர் போராட்டத்தால் பரபரப்பு

மேலும் இதன் காரணமாக முகாம் கைதிகளை பார்க்க வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  காலையில் முகாம் கைதிகளை பார்ப்பதற்காக, அவர்களது உறவினர்கள் வந்து இருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை பார்க்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் சிறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை சிறை போலீசார் கலைந்து போக செய்தனர். இதனிடையே முகாமில் உள்ள கைதிகள் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் முகாம் சிறையின் சுற்றுச்சுவரில் ஏறி கோஷமிட்டனர். தங்களை பார்க்க வரும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் முகாம் சிறையில் பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Embed widget