மேலும் அறிய

கரூர்: காவல்துறையை கண்டித்து பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்த காவல்துறை..!

’’ஐம்பதுக்கும் மேற்பட்ட பாஜகவினர் தமிழக அரசையும், கரூர் நகர காவல் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்’’

நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளோடு விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்தது. மேலும் வீட்டிலேயே கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. தடையை மீறி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தப்போவதாக பாஜக, இந்து முண்ணனி உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருந்ததன. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு கரூர் வாவுசி தெருவில் அரசின் உத்தரவை மீறி இந்து முன்னணியின் சார்பாக விநாயகர் சிலையை நிறுவி உள்ளனர் என்ற தகவல் கரூர் நகர் காவல்துறையினருக்கு கிடைத்தது. தகவல் கிடைத்த உடன் நகர போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர் அப்போது இந்து அமைப்பினரும் கரூர் நகர போலீசாருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு விநாயகர் சிலை உடைந்தது. இதனை கண்டிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். 


கரூர்: காவல்துறையை கண்டித்து பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்த காவல்துறை..!

இந்நிலையில் இன்றைய தினம் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 5 மணிக்கு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு விநாயகர் சிலை வைப்பதாக இந்து அமைப்பினர் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் குறித்த நேரத்தில் சிலை ஏதும் வைக்கப்படவில்லை காலை 10 மணி அளவில் 12 அடி உயரமுள்ள சிலை ஒன்று ஆலய வாசல் முன்பு நிறுவியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


கரூர்: காவல்துறையை கண்டித்து பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்த காவல்துறை..!

இது ஒருபுறமிருக்க கரூர் நகர காவல் ஆய்வாளரை கண்டித்து பாஜகவினர் திரண்டு வந்து கரூர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து காலையில் இருந்தே நகரப்பேருந்து சாலையை முற்றிலுமாக இரும்பு தடுப்புகளை கொண்டு போலீசார் அடைத்தனர் அதை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 


கரூர்: காவல்துறையை கண்டித்து பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்த காவல்துறை..!

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற விநாயகர் சிலை சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டி கரூர் மாவட்ட பாஜகவினர் பேருந்து நிலையம் முன்பு இருந்து ஊர்வலமாக காவல் நிலையம் வருவதாக தகவல் கிடைத்தது நிலையில் வரும் வழியில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இந்து முன்னணியின் சார்பாக நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலை வழிபாடு செய்த பிறகு ஊர்வலமாக வருவதென முடிவு செய்து பேருந்து நிலையம் வந்தனர்.

கரூர்: காவல்துறையை கண்டித்து பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்த காவல்துறை..!

50க்கும் மேற்பட்ட பாஜகவினர் தமிழக அரசையும், கரூர் நகர காவல் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமலும் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் சாலையோரம் நின்று போலீசார் பாதுகாப்பு கொடுத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் சிவசாமி இடம் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு காவல் துறை அலுவலகம் முற்றுகை கைவிட்டு வெறும் ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்த அனுமதி வழங்கியதாக பாஜக மாவட்ட தலைவர் சிவசாமி செய்தியாளரிடம் இதைப் பற்றிக் கூறினார். அப்போது அவர் பேசுகையில் கரூர் நகர காவல் ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்யாவிட்டால் கட்சித் தலைமையின் உத்தரவை பெற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget