மேலும் அறிய

திருச்சியில் முன்னாள் வங்கி மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

திருச்சியில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடந்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

திருச்சி காஜாமலை இ.பி. காலனி பிச்சையம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் கலைமணி (வயது 75). இவர் வங்கி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் ஆர்த்தி, வேலூர் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஆர்த்தியின் கணவர் ஆனந்தமூர்த்தி சென்னையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆனந்தமூர்த்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பிச்சையம்மாள் நகர் பகுதியில் உள்ள ஆர்த்தியின் தந்தை கலைமணி வீட்டில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மதியம் 3 மணி வரை நடைபெற்றது. இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளுக்கு உரிய ஆவணம் கேட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

 

மேலும் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆர்த்தி வீட்டில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு வெளியே இருந்து யாரும் உள்ளே வராதபடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை மாலை 5 மணி வரை நீடித்தது. சோதனை முடிவில் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது. அந்த ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தர்மபுரி நார்தம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டென்மார்க் சென்ற அமைச்சர் அன்பில்: புதுமைப்பெண், காலை உணவுத் திட்டங்களை விளக்கி பெருமிதம்!
டென்மார்க் சென்ற அமைச்சர் அன்பில்: புதுமைப்பெண், காலை உணவுத் திட்டங்களை விளக்கி பெருமிதம்!
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆகும் ஆர்.மகாதேவன்: யார் இவர்?
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆகும் ஆர்.மகாதேவன்: யார் இவர்?
Breaking News LIVE: அதி கனமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
Breaking News LIVE: அதி கனமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
Virat Kohli: வெறும் 29 ரன்கள் எடுத்தால் போதும்..! ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டும் விராட் கோலி!
வெறும் 29 ரன்கள் எடுத்தால் போதும்..! ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டும் விராட் கோலி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Amitshah on VK Pandian :  ”ஒடிசாவை தமிழர் ஆளலாமா? மோடி பாணியில் அமித்ஷா! VK பாண்டியனுக்கு ஸ்கெட்ச்Congress Master Plan  : இன்னும் 35 சீட் தான் பாஜகவின் அஸ்திவாரம் காலி காங்கிரஸின் ரகசிய ரிப்போர்ட்Palanivel Thiyagarajan  : PTR தான் வேணும்..ஸ்டாலின் அதிரடி!மீண்டும் FINANCE மினிஸ்டர்?Manickam Tagore Thanks Sellur raju : ராகுலை புகழ்ந்த செல்லூர் ராஜூ! நன்றி சொன்ன தாகூர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டென்மார்க் சென்ற அமைச்சர் அன்பில்: புதுமைப்பெண், காலை உணவுத் திட்டங்களை விளக்கி பெருமிதம்!
டென்மார்க் சென்ற அமைச்சர் அன்பில்: புதுமைப்பெண், காலை உணவுத் திட்டங்களை விளக்கி பெருமிதம்!
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆகும் ஆர்.மகாதேவன்: யார் இவர்?
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆகும் ஆர்.மகாதேவன்: யார் இவர்?
Breaking News LIVE: அதி கனமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
Breaking News LIVE: அதி கனமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
Virat Kohli: வெறும் 29 ரன்கள் எடுத்தால் போதும்..! ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டும் விராட் கோலி!
வெறும் 29 ரன்கள் எடுத்தால் போதும்..! ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டும் விராட் கோலி!
PM Modi: நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
Youtuber Irfan: ”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
Rahul Gandhi: ”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!
”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!
Amit Shah: ஒடிசாவை தமிழன் ஆள்வதா? டார்கெட் செய்த அமித்ஷா.. பாஜகவை அலறவைக்கும் விகே பாண்டியன்!
ஒடிசாவை தமிழன் ஆள்வதா? டார்கெட் செய்த அமித்ஷா.. பாஜகவை அலறவைக்கும் விகே பாண்டியன்!
Embed widget