மேலும் அறிய

திருச்சியில் 50,000 லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

’’தீபாவளி நெருங்கும் நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் சோதனையில் தாசில்தார் சிக்கிய நிலையில் அடுத்த வேட்டை தொடரும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்’’

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருகிறார்கள். அரசியல் தலைவர்கள் முதல் அரசு அதிகரிகள் என அனைத்து இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும், அரசாங்கள் மக்களுக்காக தான் செயல்பட்டு வருகிறது. ஆகையால் எந்த அலுவலங்களிலும் அரசு விதிமுறைகளை மீறி அதிகாரிகள் மட்டும் அல்லாமல் யாராக இருந்தாலும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில் உடனடியாக லஞ்ச ஒழிப்புதுரை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும். புகார்கள் உறுதி செய்யபடும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட ரீதியான நடைவடிக்கைகள் எடுக்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பண்டிகை நாட்களில் அரசு அலுவலங்களில் திடீர் சோதனையில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் திருச்சியில் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். 


திருச்சியில் 50,000 லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

திருச்சி மாவட்டம் முசிறியில் பெயர் மாற்ற ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற திருச்சி மேற்கு நிலவரி திட்ட செட்டில் மென்ட் சிறப்பு தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தனர். திருச்சி கே.கே.நகர் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சீனிவாசன் இவருக்கு ஏர்போர்ட் கொட்டப்பட்டு கிராமம் வயர்லெஸ் ரோட்டில் சர்வே எண் 150/2 என்ற எண்ணில் 1.11 ஏக்கர் நிலம் ஊராட்சி என்பவரின் அனுபவத்தில் உள்ளது. இந்த இடத்தினை தனது பாட்டனார் கருப்பண்ணன் பெயருக்கு மாற்றுவதற்காக முடிவு செய்த சீனிவாசன். திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் இதற்கென உள்ள நிலவரி திட்டம் செட்டில்மெண்ட் சிறப்பு தாசில்தார் கோகுல் (47) , என்பவரை அணுகி உரிமை கோரி தடை மனு விண்ணப்பம் வழங்கினார். விண்ணப்பத்தினை ஆய்வுசெய்த தாசில்தார் பெயர் மாற்ற ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.


திருச்சியில் 50,000 லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

இந்த புகாரை அடுத்து டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவல்துறையினர் நேற்று திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகம் சென்று மறைந்து இருந்தனர். ஏற்கனவே காவல்துறையின் அறிவுறுத்தல் படி சீனிவாசன் ரூபாய் 50 ஆயிரத்தை தாசில்தார் கோகுலிடம் வழங்கிய போது மறைந்திருந்த காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அறை கதவை பூட்டி விசாரணை நடத்தினர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள். தொடர்ந்து தாசில்தார் கோகுலிடம்  இருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் திருச்சி உறையூர் ராமலிங்க நகரில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர் இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தீபாவளி நெருங்கும் நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் சோதனையில் தாசில்தார் சிக்கிய நிலையில் அடுத்த வேட்டை தொடரும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எந்த துறைகளிலும் தவறுகள் நடக்கும்பட்சத்திலும், புகார்கள் வரும்பட்சத்தில் அதை உறுதி செய்யபட்டு லஞ்சம் வாங்கியவர்கள் மீது கடுமையான நடைவடிக்கைகள் எடுக்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
Trichy power cut: திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
Embed widget