மேலும் அறிய

திருச்சியில் கடந்த மாதம் சிறையில் இருந்து வந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை...!

’’கொலை வழக்கு ஒன்றில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த நிஷாந்த கடந்த மாதம் வெளியே வந்தார்’’

திருச்சியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை - பலிக்கு பலி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பழைய பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த் (21) பிரபல ரவுடியான இவர் மீது காந்தி மார்க்கெட், தில்லை நகர் மற்றும் கோட்டை காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் இவருக்கும் வாமடம் பகுதியைச் சேர்ந்த வாழைக்காய் விஜய் என்பவருக்கும் கஞ்சா விற்பது தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. ஏற்கனவே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருச்சி தென்னூர் வாமடம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் என்கிற வாழைக்காய் விஜய் (20). நேற்று முன்தினம் மதியம் இவர் தனது வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடை அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது. இதனை தடுக்க வந்த விஜயின் தாயார் செல்விக்கும் (45) அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


திருச்சியில் கடந்த மாதம் சிறையில் இருந்து வந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை...!

விஜய் கொலை தொடர்பாக ஜீவாநகர் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் (40) , சோமரசம்பேட்டை நாடார் சத்திரத்தை சேர்ந்த பிரவீன் காந்த் (20) , ஜீவா நகரைச் சேர்ந்த பிரதீப் (22), தென்னூர் வாமடத்தை சேர்ந்த குணசேகரன் (25), ஜீவா நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த கார்த்தி (20), ஜீவா நகர் காமராஜர் நகரைச் சேர்ந்த நிஷாந்த் (21) , தென்னூர் வா மடத்தைச் சேர்ந்த சிவபிரசாத் (19) ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் ஜெயச்சந்திரன் தவிர மற்ற 6 பேரும் நேற்று முன்தினம் இரவோடு, இரவாக கைது செய்யப்பட்டனர். தலைமறைவான ஜெயச்சந்திரன் ஜீவா நகர் பகுதியில் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது திருச்சி கோட்டை, தில்லைநகர் போலீஸ் நிலையங்களில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, திருட்டு, வழிப்பறி தொடர்பான வழக்குகளும் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. அவரை போலீசார் தொடர்ந்து வலைவீசி தேடி வருகிறார்கள். ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயச்சந்திரனின் நண்பர் முருகேசன் என்பவருக்கும், விஜய்க்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது.

இதுதொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயை கைது செய்தனர். மேலும் விஜயும், அவரது நண்பர்கள் டோக்கியோ என்கிற நாகூர் அனிபா மற்றும் துரை ஆகியோர் ஜீவா நகருக்கு சென்றனர். அங்கு அவர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிஷாந்த் மற்றும் பிரவீன், மதியழகன் என்பவரை அவரது வீட்டில் இறக்கி விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தனர். இந்த நேரத்தில் விஜய் மதியழகனை தாக்கி அவர் வைத்திருந்த 6 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்தார். இதனை பிரவீனும், நிஷாந்தும் தட்டி கேட்டனர். அப்போது அவர்களையும் தாக்கிவிட்டு விஜய் தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே ஜெயச்சந்திரன் உள்பட 7 பேரும் சேர்ந்து விஜயை வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.


திருச்சியில் கடந்த மாதம் சிறையில் இருந்து வந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை...!

மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்த் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த  மாதம் சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்த சூழலில் இன்று அதிகாலை மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள கழிவறையில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்ற நிஷாந்தை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல்  அரிவாள், கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் நிஷாந்தை ஒட ஒட  வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பழிக்கு பழியாக நடைபெற்ற இந்த கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget