மேலும் அறிய

புதுக்கோட்டை : ஜல்லிக்கட்டு போட்டியில் 30 மாடுபிடி வீரர்கள் காயம்..

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பெரிய குரும்பப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் 30 வீரர்கள் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பெரிய குரும்பபட்டி காயாம்பு அய்யனார், பாப்பாத்தி அம்மன், கருப்பண்ணசாமி கோயில் ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. முன்னதாக காயாம்பு அய்யனார், பாப்பாத்தி அம்மன் கருப்பண்ணசாமி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
 
காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டை வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி தொடங்கி வைத்தார். பின்னர் கோவில் காளைகள் வாடிவாசலிலிருந்து அவிழ்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த காளைகள் அனுமதிக்கப்பட்டு வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்தன.
 
காளைகளை அடக்க 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து சீறிபாய்ந்த காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை மிரட்டி கெத்து காட்டின.
 

புதுக்கோட்டை : ஜல்லிக்கட்டு போட்டியில் 30 மாடுபிடி வீரர்கள் காயம்..
 
 
மேலும் காளைகளை போட்டிப்போட்டு அடக்கி வீரம் காட்டிய வீரர்களை காளைகள் முட்டி தள்ளியது. ஜல்லிக்கட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது டோக்கன் பெற்று வரிசையில் பல மணி நேரம் காத்திருந்த காளைகளை ஒதுக்கி விட்டு திடீரென சிலர் குறுக்குவழியில் காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து சென்றனர். இதனால் திடீர் சலசலப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது. பின்னர் தடுப்பு வேலிகளை கழட்டி வீசி சிலர் காளைகளை வாடி வாசலுக்கு அழைத்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
பிரச்சினையை காவல்துறையினர்  கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி ஜல்லிக்கட்டு நிறுத்தப்படுவதாக அறிவித்தார். ஆனால் ஜல்லிக்கட்டை நிறுத்த உத்தரவு பிறப்பித்த பின்னரும் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு தொடர்ந்தது. 
 

புதுக்கோட்டை : ஜல்லிக்கட்டு போட்டியில் 30 மாடுபிடி வீரர்கள் காயம்..
 
இதனை தொடர்ந்து விறுவிறுபாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என சுமார் 30 பேர் காயமடைந்தனர். இதில் புதுக்கோட்டை கிருஷ்ணகாந்த் (வயது 17), ராக்கத்தான்பட்டி ராஜா (16), குண்டூர் குட்டி (24), எழுவம்பட்டியை துரைசாமி (43), ஆச்சநாயக்கன்பட்டி ராஜகோபால் (31), ராசாம்பட்டி ராஜேந்திரன் (37), நாகமங்கலம் கோபால் (22) ஆகிய 7 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலுப்பூர் துணை சூப்பிரண்டு அருள்மொழிஅரசு தலைமையில் 300க்கும் மேற்பட்ட  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  பின்பு ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் வெள்ளி நாணயம், கட்டில், சில்வர் பாத்திரங்கள், அயன்பாக்ஸ், குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை திரளான ரசிகர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அரசு கூறிய விதிமுறைகளுக்கு உட்பட்டு விழாக்குழுவினர்கள் ஏற்பாடு  செய்திருந்தனர்.

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
தூண்கள் இல்லாத அதிநவீன வடிவமைப்பு; டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: என்ன தெரியுங்களா? 
தூண்கள் இல்லாத அதிநவீன வடிவமைப்பு; டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: என்ன தெரியுங்களா? 
90 ஆண்டு பாரம்பரிய பொன்மலை பணிமனையில் 'விஐபி' ரயில்: கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு புதுப்பொலிவு!
90 ஆண்டு பாரம்பரிய பொன்மலை பணிமனையில் 'விஐபி' ரயில்: கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு புதுப்பொலிவு!
அரியமங்கலம் குப்பைகளை கல் குவாரிகளுக்கு மாற்றும் திட்டம்: எம்.எல்.ஏ முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு!
அரியமங்கலம் குப்பைகளை கல் குவாரிகளுக்கு மாற்றும் திட்டம்: எம்.எல்.ஏ முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு!

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget