மேலும் அறிய

பெரம்பலூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை கொள்ளை

பெரம்பலூரில் பட்டப்பகலில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கலத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 46). இவர் தனது மனைவி அமுதா(39), மகள் பவ்யா (15) ஆகியோருடன் பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு நேரு நகர், அகத்தியர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கோவிந்தராஜ் அரியலூரில் டிராக்டர் விற்பனை நிலையத்தில் (ஷோரூம்) விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். பவ்யா அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் கோவிந்தராஜ் வசிக்கும் பகுதியின் அருகே புதிதாக வீடு ஒன்றும் கட்டி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கோவிந்தராஜ் வேலைக்கும், பவ்யா பள்ளிக்கும் சென்று விட்டனர். இந்த நிலையில் காலை 11.30 மணியளவில் அமுதா வசிக்கும் வீட்டை பூட்டி விட்டு, புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை பார்க்க சென்று விட்டார். பின்னர் அவர் மதியம் 2.30 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கேட்டின் பூட்டும், கதவின் தாழ்ப்பாளும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அமுதா வீட்டினுள் சென்று பார்த்தபோது, படுக்கையறையில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த மொத்தம் 17 பவுன் தங்க நகைகளும் மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்கமும் திருடு போயிருந்தது. இதையடுத்து அவர் இது தொடர்பாக தனது கணவர் கோவிந்தராஜூக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அரியலூரில் இருந்து விரைந்து வந்து பார்த்த கோவிந்தராஜ் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.


பெரம்பலூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை கொள்ளை

இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் `நிஞ்சா' வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் துணிகரமாக நடந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கூறியது.. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, வழிப்பறி, போன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். ஆகையால் காவல்துறையினர் மக்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடைபெறும் 4 ஆம் கட்ட மக்களவை தேர்தல்..!
விறுவிறுப்பாக நடைபெறும் 4 ஆம் கட்ட மக்களவை தேர்தல்..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vetrimaaran on Ilayaraja Vairamuthu : இளையராஜா VS வைரமுத்து “பாடல் யாருக்கு சொந்தம்?”- வெற்றிமாறன்Priyanka Gandhi on Amit shah : ”என்ன பண்ணீங்க அமித்ஷா? லிஸ்ட் சொல்லுங்க பார்ப்போம்” பிரியங்கா சவால்Vetrimaaran Pressmeet : ”சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா? நீங்கலாம் எங்க வாழ்றீங்க?” வெற்றிமாறன் பதிலடிNellai Jayakumar : மர்மம் விலக்குமா டார்ச் லைட்? ஜெயக்குமார் மரணத்தில் திருப்பம்! வலுக்கும் சந்தேகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடைபெறும் 4 ஆம் கட்ட மக்களவை தேர்தல்..!
விறுவிறுப்பாக நடைபெறும் 4 ஆம் கட்ட மக்களவை தேர்தல்..!
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Today Movies in TV, May 13:  லீவு போட ரெடியா இருங்க - டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?
Today Movies in TV, May 13: லீவு போட ரெடியா இருங்க - டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?
Embed widget