மேலும் அறிய

பாமினி எக்ஸ்பிரஸ் ஆரணியில் நின்று செல்ல வேண்டும் - லோக்சபாவில் எம்பி தரணிவேந்தன் பேச்சு

திண்டிவனம் - நகரி இடையே ரயில் பாதை அமைக்க கூடுதலாக நிதி ஒதுக்கி அந்தப் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என லோக்சபாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் பேசியுள்ளார்.

திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ஆற்காடு வழியாக நகரி வரை ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2006-ஆம் ஆண்டில் அப்போதைய ரயில்வே துறை இணை அமைச்சராக இருந்த பாமகவை சேர்ந்த வேலு மூலமாக தொடங்கப்பட்டது. ரயில் பாதை அமைக்க நிலம்  70 சதவீதம் கையகப்படுத்தி முடிவடைந்த நிலையில் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதன் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரங்களில் ஆரணி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர்கள் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் திண்டிவனம் - நகரி இடையே ரயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிப்பேன் என வாக்குறுதி கொடுத்தனர். அதன்படி ஆரணி நாடாளுமன்ற உறுப்பினராக கிருஷ்ணசாமி, ஏழுமலை, விஷ்ணு பிரசாத் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்ட  காலகட்டங்களிலும் அந்த பணி நடக்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் லோக்சபாவில் பேசியதாவது; 

ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வந்தவாசி, செய்யாறு, ஆரணி வழியாக திண்டிவனத்தில் இருந்து ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி ஆமை வேகத்தில் நடக்கிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டு 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. சில இடத்தில் ஆறு அல்லது ஏழு பாலங்கள் மட்டும் கட்டி உள்ளனர். ஆனால் ரயில் பாதை அமைக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை, இதனால் ரயில் பாதை வரும். அதில் ரயில் ஓடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்கள் நிலத்தை கொடுத்துவிட்டு இப்போது ரயில் வரவில்லை, விவசாயத் தொழிலும் செய்ய முடியவில்லை, என்ற மனவேதனையில் உள்ளனர். எனவே திண்டிவனம் - நகரி இடையே ரயில் பாதை அமைக்க கூடுதலாக நிதி ஒதுக்கி அந்தப் பணியை விரைவில் முடிக்க வேண்டும். அதேபோல், ஆரணியில் அரிசி உற்பத்தி பட்டு நெசவுத்தொழில் புகழ்பெற்றது. ராமேஸ்வரத்திலிருந்து திருப்பதி, மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ் ரயில் ஆரணி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget