மேலும் அறிய

Tirunelveli SP Arrest: கைதாகும் நெல்லை எஸ்.பி? - ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் அதிரடி உத்தரவு... எதனால்?

நெல்லை எஸ்.பி- ஐ கைது செய்ய ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்ட எஸ்.பி, ப. சரவணனை கைது செய்து ஆஜர்படுத்துமாறு,  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 


Tirunelveli SP Arrest: கைதாகும் நெல்லை எஸ்.பி? - ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் அதிரடி உத்தரவு... எதனால்?

மாவட்ட கண்காணிப்பாளருக்கு அறிவிக்கை:
 
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம்  சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மகள் பரமானந்தம் என்ற பட்டியல் வகுப்பை சேர்ந்தவரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, அவர்களின் பயண்பாட்டிற்கு செல்லும் வழியையே மறித்து நிலத்தைச் சுற்றி வேலியிட்டு, மனுதாரரையோ, அவர்தம் குடும்பத்தாரையோ போக விடாமலும் பயன்படுத்த விடாமலும், அந்நிலத்தின் ஒரு பகுதியை போலி ஆவணத்தின் மூலம் பெயர் மாற்றம் செய்தும் சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க செய்யப்பட்ட மனுதாரரது புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சம்பந்தமான அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்யுமாறு, திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளருக்கு அறிவிக்கை 10-06-2022 அன்று அறிவிக்கை அனுப்பப்பட்டது.
 
அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு:
 
அவ்வறிக்கையை அவர் பொருட்படுத்தாததால் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதை தெரியப்படுத்தும் அறிவிக்கையில், அறிவிக்கைக்கு பதில் தராவிட்டால் விளைவு என்ன என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
அந்த அறிவிக்கையைப் பெற்றுக் கொண்ட பின்னரும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இவ்வாணையத்தின் அறிவிக்கையை சட்டை செய்யாமல்  அறிக்கை அனுப்புவதை வேண்டுமென்றே தவிர்த்து வந்ததன் காரணமாக 27:10.2022 அன்று சம்பந்தப்பட்ட கோப்புகளுடன் இவ்வாணையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பானை (summons) அனுப்பப்பட்டது. அந்த அழைப்பாணையை பெற்றுக் கொண்ட 27-10-2022 அன்று ஆஜராகத் தவறிவிட்டார்.

காவல் கண்காணிப்பாளர் இவ்வாணையத்தின் அறிவிக்கையை சட்டை செய்யாமல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆணையத்தின் அழைப்பாணையில் குறிப்பிட்டுள்ளபடி, அப்போதே அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க கூடும் என்றாலும், மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி 30.11.2022 அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், ஆஜராகும் போது ஏன் அபராதம் விதிக்க கூடாது என்பதற்கான காரணம் காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரின் செயல் ஆணையத்தின் உத்தரவுகள் தம்மைக் கட்டுப்படுத்தாது என்ற அவரது கருத்திணை வெளிப்படுத்துவதாகவும், ஆணையத்தில் நேரில் ஆஜராவதை தம்முடைய தகுதிக்குக் குறைவானது என அவர் கருதுவதாகவும் அமைகிறது.

கைது செய்ய உத்தரவு:

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன்-க்கு ரூ500/. அபராதம் விதித்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

மேலும், திருநெல்வேலி மாவட்ட காவல் காணிப்பாளரை கைது செய்து, இவ்வாணையத்தின் முன் விசாரணைக்கு 28.12.2022 அன்று, ஆஜர்படுத்துமாறு பிணையில் விடக்கூடிய (Bailable warrant) பிடி ஆணை பிறப்பித்து  உத்தரவிடப்படுகிறது. பிடி ஆணையை நிறைவேற்றும் பொருட்டு அதை தென் மண்டல காவல் துறை தலைவருக்கு (Inspector General of Police, South Zone) அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

நெல்லை மாவட்ட எஸ்.பி. ப. சரவணனை கைது செய்து ஆஜர்படுத்துமாறு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Embed widget