மேலும் அறிய

திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை வரை 80 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கப்பட்ட ரயில் சேவை

குலசேகரபட்டினம் இலகு ரயில் வழித்தடத்தை அரசுடமையாக்காமல் விட்டு விட்டது. அரசுடமையாக்கப்பட்டிருந்தால் பொருளாதாரத்தில் பின் தங்கிய இந்த பகுதி நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும்.

சென்னையைத் தலைமையிடமாக கொண்ட பாரி அன் கோ நிறுவனம் குலசேகரன்பட்டினத்தில் ஒரு சர்க்கரை ஆலையைத் தொடங்கியது. குலசேகரன்பட்டினம் லைட் ரயில்வே (கே.எல்.ஆர்) என்ற பெயரில் இந்த ஆலைக்கு சரக்கு போக்குவரத்துக்காகவும், வேலையாட்கள் வந்து செல்வதற்கெனவும் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டது.


திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை வரை 80 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கப்பட்ட ரயில் சேவை

இந்தரயில் பாதை சர்க்கரை ஆலையின் சொந்த பயன்பாட்டுக்காக அந்நிறுவனத்தின் சொந்த செலவிலேயே அமைக்கப்பட்டது. சர்க்கரை மூலங்களான பதநீரையும், கருப்பட்டியையும் கொண்டுவரவே இந்த ரயில் இயக்கப்பட்டது. பதநீரை கொண்டு செல்ல திசையன்விளையில் இருந்து குலசேகரப்பட்டினம் வரைக்கும் குழாய் பதித்திருந்தனர். குழாயில் பதநீரை ஊற்றினால், அது ஆலைக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும். குலசேகரப்பட்டினத்தில் இருந்த சிறிய ஆலையில் பதநீர் காய்ச்சப்பட்டு, திரவமும் இல்லாமல், திடமும் இல்லாமல், 'பானி' எனப்படும் கூழ் போன்ற பதநிலையில்தான் ரயில்களில் அவை பெரிய ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை சர்க்கரையாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானதாக வரலாறு உண்டு.


திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை வரை 80 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கப்பட்ட ரயில் சேவை

இதன் அடிப்படையில் திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வழியாக திசையன்விளைக்கும், குலசேகரப்பட்டினத்திலிருந்து உடன்குடிக்கும் தனி ரயில்பாதை என மொத்தம் 46.671 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதை அமைப்பட்டுள்ளது.அப்போது இருந்த ஆங்கிலேயே அரசு அதிகாரிகள் வற்புறுத்தலின்பேரில் பொது மக்களின் போக்குவரத்துக்காகவும் இந்தரெயில் இயக்கப்பட்டது.திசையன்விளை, இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரப்பட்டினம் சென்ட்ரல் நிலையம், குலசேகரப்பட்டினம் கே.பி.என் துறைமுகம், குலசேகரப்பட்டினம் கே.பி.என் தொழிற்சாலை, ஆலந்தலை திருச்செந்தூர், உடன்குடி போன்ற இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 1914 முதல் 1940 வரை இப்பாதையில் ரெயில் இயக்கப்பட்டதாக ரயில்வே துறை ஆவணங்களில் உள்ளது. இது தவிர பிரிவு ரயில் பாதையாக குலசேகரப்பட்டினம் சென்ட்ரல் நிலையத்திலிருந்து காட்டான்காடு, வழியாக உடன்குடிக்கும் ரயில்பாதை அமைக்கப்பட்டது. 


திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை வரை 80 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கப்பட்ட ரயில் சேவை

அன்றைய காலத்தில், திசையன்விளை- திருச்செந்தூர் இடையிலான ரெயில் பயணக்கட்டணம் 13 அனாவாக இருந்தது. பயண நேரம் மூன்று மணி நேரம் ஆகும். இந்த காலகட்டங்களில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு மீட்டர் கேஜ் வழித்தடத்தில் தென் இந்திய ரயில்வே நிறுவனம் ரயில்களை இயக்கி வந்தது. இந்த வழித்தடம்தான் தற்போது அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.2-ம் உலகப் போரை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாகவும் குலசேகரபட்டினத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் காரணமாகவும் குலசேகரபட்டினம் கே.பி.என். தொழிற்சாலை அதன் உற்பத்தியை நிறுத்தி தொழிற்சாலையை மூடியது. இதைத்தொடர்ந்து இந்த ரயில் வழி திட்டத்தையும் படிப்படியாக நிறுத்துவது என நிறுவனம் முடிவெடுத்தது.


திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை வரை 80 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கப்பட்ட ரயில் சேவை

இவ்வாறு தொழிற்சாலையை மூடிய காரணத்தாலும் இந்த ரயில்வே திட்டத்தை பொறுப்பேற்று நடத்த யாரும் முன்வராத காரணத்தாலும் இந்த பகுதியில் இயக்கப்பட்ட ரயில் சேவை முற்றிலும் முடங்கிப்போனது. தற்போது இந்த பகுதியில் ரயில்கள் ஓடியதற்கான எந்த ஒரு அடையாளங்களும் இல்லை. இந்த ரயில்கள் இயக்கப்பட்ட வழி தடத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு எந்த சுவடும் இல்லாமல் அனைத்தும் அழிந்தும் விட்டது.குலசேகரபட்டினம் இலகு ரயில், தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டதால் இந்திய ரயில்வேதுறை இந்த வழித்தடத்தை அரசுடமையாக்காமல் விட்டு விட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. ஒருவேளை, அரசுடமையாக்கப்பட்டிருந்தால், பொருளாதாரத்தில் பின் தங்கிய, வறட்சி நிறைந்த இந்த பகுதி நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Embed widget