மேலும் அறிய

நெல்லையின் வரலாற்று அடையாளமான ஈரடுக்கு மேம்பாலத்தின் பெருமையும்...! கோரிக்கையும்...!

50 ஆண்டுகளை கடந்து நிற்கும்  நெல்லையின் அடையாளமான இந்த பாலம் ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகிறது.

திருநெல்வேலி என்றதும் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது அல்வாவும் அரிவாளும்தான்.., அதே போல பல்வேறு அடையாளங்களை உள்ளடக்கியது நெல்லை மாவட்டம். குறிப்பாக நெல்லை மாநகரின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது ஈரடுக்கு மேம்பாலம். ஆசிய அளவில் புகழ்பெற்ற இந்த பாலம் நெல்லை நகரத்தையும், நெல்லை சந்திப்பையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பிரதான பாலமாக அமைந்துள்ளது. அதே போல சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து அமைக்கப்பட்டிருக்கும் ரயில்வே இருப்பு பாதைக்கு மேல் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசிய கண்டத்திலேயே இருப்புப் பாதைக்கு மேலாக கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையையும், இந்தியாவில் கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையையும் உடையது. குறிப்பாக 1969-ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதியால் பால வேலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் 1973 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் நாள் திறக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. சுமார் 47 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் 700 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்டது.  26 ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளதால் மேல் அடுக்கில் பேருந்துகள், கனரக வாகனங்கள் போன்ற பெரிய ரக வாகனங்களும், கீழ் அடுக்கில் சைக்கிள், இருசக்கர வாகனம், போன்ற இலகு ரக வாகனங்களும் செல்லும் வகையில் அமைந்துள்ளது.


நெல்லையின் வரலாற்று அடையாளமான ஈரடுக்கு மேம்பாலத்தின் பெருமையும்...! கோரிக்கையும்...!

திருக்குறளில் இரண்டு அடிகள் இருப்பது போல, இப்பாலத்தில் இரண்டு அடுக்குகள் இருப்பதால் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 'திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம்' என்று பெயரிடப்பட்டது. ஆனால் திருநெல்வேலி மக்கள் தங்கள் பேச்சு வழக்கில் 'ரெட்டை பாலம்' என்றே அழைத்தனர்.   அதனால் இன்றளவும் திருவள்ளுவர் ஈரடுக்கு பாலம் என்பதை விட ரெட்டை பாலம் என்றே அனைவராலும் அறியப்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளை கடந்து நிற்கும்  நெல்லையின் அடையாளமான இந்த பாலம் ஆங்காங்கே சிதலமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கீழ் பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமலும்  நடந்து செல்ல முடியாமலும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். அதோடு பாலத்தில் தண்ணீர் ஒழுகியும் காணப்படுகிறது. இதனால் அப்பாலத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதோடு விரைந்து புதுப்பித்து வரும் சந்ததியினருக்கு அதன் பெருமையை விளக்கும் வகையில் அடையாளப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக நெல்லையில் அடையாளமான பல்வேறு பகுதிகளின் ஓவியங்களை பாலத்தின் மீது வரைந்து அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


நெல்லையின் வரலாற்று அடையாளமான ஈரடுக்கு மேம்பாலத்தின் பெருமையும்...! கோரிக்கையும்...!


நெல்லையின் வரலாற்று அடையாளமான ஈரடுக்கு மேம்பாலத்தின் பெருமையும்...! கோரிக்கையும்...!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

பேஸ்புக் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

நான் முதல்வன் திட்டத்தில் வேலை வாய்ப்பு இருக்குங்க... அருமையான சம்பளம்: உடனே அப்ளை பண்ணுங்க
நான் முதல்வன் திட்டத்தில் வேலை வாய்ப்பு இருக்குங்க... அருமையான சம்பளம்: உடனே அப்ளை பண்ணுங்க
Chennai Power Shutdown: சென்னையில ஆகஸ்ட் 5-ம் தேதி செவ்வாயன்று இவ்ளோ இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுதா.? முழு விவரம்
சென்னையில ஆகஸ்ட் 5-ம் தேதி செவ்வாயன்று இவ்ளோ இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுதா.? முழு விவரம்
Shibu Soren: மூன்று முறை முதலமைச்சராகி, 308 நாட்கள் பதவி வகித்த ஷிபு சோரன் காலமானார் - என்ன காரணம்?
Shibu Soren: மூன்று முறை முதலமைச்சராகி, 308 நாட்கள் பதவி வகித்த ஷிபு சோரன் காலமானார் - என்ன காரணம்?
வரலாற்றில் முதல்முறை; 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடம் அறிமுகம்- எதற்கு தெரியுமா?
வரலாற்றில் முதல்முறை; 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடம் அறிமுகம்- எதற்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்
திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru
”பாமக தலைவர் அன்புமணி தான்”தேர்தல் ஆணையம் அதிரடி!கதறும் ராமதாஸ் ஆதரவாளர்கள்! | Anbumani Vs Ramadoss
பாலியல் குற்றச்சாட்டு வாய் திறந்த விஜய் சேதுபதி சைபர் க்ரைமில் புகார் | Vijay Sethupathi Sexual Harassment

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் முதல்வன் திட்டத்தில் வேலை வாய்ப்பு இருக்குங்க... அருமையான சம்பளம்: உடனே அப்ளை பண்ணுங்க
நான் முதல்வன் திட்டத்தில் வேலை வாய்ப்பு இருக்குங்க... அருமையான சம்பளம்: உடனே அப்ளை பண்ணுங்க
Chennai Power Shutdown: சென்னையில ஆகஸ்ட் 5-ம் தேதி செவ்வாயன்று இவ்ளோ இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுதா.? முழு விவரம்
சென்னையில ஆகஸ்ட் 5-ம் தேதி செவ்வாயன்று இவ்ளோ இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுதா.? முழு விவரம்
Shibu Soren: மூன்று முறை முதலமைச்சராகி, 308 நாட்கள் பதவி வகித்த ஷிபு சோரன் காலமானார் - என்ன காரணம்?
Shibu Soren: மூன்று முறை முதலமைச்சராகி, 308 நாட்கள் பதவி வகித்த ஷிபு சோரன் காலமானார் - என்ன காரணம்?
வரலாற்றில் முதல்முறை; 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடம் அறிமுகம்- எதற்கு தெரியுமா?
வரலாற்றில் முதல்முறை; 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடம் அறிமுகம்- எதற்கு தெரியுமா?
O Panneerselvam: ஓபிஎஸ்-ஐ எப்படியாவது சமாதானப்படுத்துங்க.. அதிமுக - பாஜக கூட்டணி துடிப்பது ஏன்?
O Panneerselvam: ஓபிஎஸ்-ஐ எப்படியாவது சமாதானப்படுத்துங்க.. அதிமுக - பாஜக கூட்டணி துடிப்பது ஏன்?
Mahindra Upcoming Cars: 2 புதிய மின்சார எஸ்யுவிக்கள், 2 பெரிய ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்கள் - மஹிந்திரா ஸ்கெட்ச்
Mahindra Upcoming Cars: 2 புதிய மின்சார எஸ்யுவிக்கள், 2 பெரிய ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்கள் - மஹிந்திரா ஸ்கெட்ச்
கேரளாவில் கனமழை எச்சரிக்கை: அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! பாதுகாப்பாக இருங்கள்!
கேரளாவில் கனமழை எச்சரிக்கை: அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! பாதுகாப்பாக இருங்கள்!
India Post: தபால் துறையின் 50 வருட சேவைக்கு முற்றுப்புள்ளி, செப்.1 முதல் கட் - இனிமே இப்படி தான், விலை?
India Post: தபால் துறையின் 50 வருட சேவைக்கு முற்றுப்புள்ளி, செப்.1 முதல் கட் - இனிமே இப்படி தான், விலை?
Embed widget