மேலும் அறிய

நெல்லையின் வரலாற்று அடையாளமான ஈரடுக்கு மேம்பாலத்தின் பெருமையும்...! கோரிக்கையும்...!

50 ஆண்டுகளை கடந்து நிற்கும்  நெல்லையின் அடையாளமான இந்த பாலம் ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகிறது.

திருநெல்வேலி என்றதும் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது அல்வாவும் அரிவாளும்தான்.., அதே போல பல்வேறு அடையாளங்களை உள்ளடக்கியது நெல்லை மாவட்டம். குறிப்பாக நெல்லை மாநகரின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது ஈரடுக்கு மேம்பாலம். ஆசிய அளவில் புகழ்பெற்ற இந்த பாலம் நெல்லை நகரத்தையும், நெல்லை சந்திப்பையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பிரதான பாலமாக அமைந்துள்ளது. அதே போல சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து அமைக்கப்பட்டிருக்கும் ரயில்வே இருப்பு பாதைக்கு மேல் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசிய கண்டத்திலேயே இருப்புப் பாதைக்கு மேலாக கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையையும், இந்தியாவில் கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையையும் உடையது. குறிப்பாக 1969-ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதியால் பால வேலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் 1973 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் நாள் திறக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. சுமார் 47 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் 700 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்டது.  26 ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளதால் மேல் அடுக்கில் பேருந்துகள், கனரக வாகனங்கள் போன்ற பெரிய ரக வாகனங்களும், கீழ் அடுக்கில் சைக்கிள், இருசக்கர வாகனம், போன்ற இலகு ரக வாகனங்களும் செல்லும் வகையில் அமைந்துள்ளது.


நெல்லையின் வரலாற்று அடையாளமான ஈரடுக்கு மேம்பாலத்தின் பெருமையும்...! கோரிக்கையும்...!

திருக்குறளில் இரண்டு அடிகள் இருப்பது போல, இப்பாலத்தில் இரண்டு அடுக்குகள் இருப்பதால் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 'திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம்' என்று பெயரிடப்பட்டது. ஆனால் திருநெல்வேலி மக்கள் தங்கள் பேச்சு வழக்கில் 'ரெட்டை பாலம்' என்றே அழைத்தனர்.   அதனால் இன்றளவும் திருவள்ளுவர் ஈரடுக்கு பாலம் என்பதை விட ரெட்டை பாலம் என்றே அனைவராலும் அறியப்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளை கடந்து நிற்கும்  நெல்லையின் அடையாளமான இந்த பாலம் ஆங்காங்கே சிதலமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கீழ் பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமலும்  நடந்து செல்ல முடியாமலும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். அதோடு பாலத்தில் தண்ணீர் ஒழுகியும் காணப்படுகிறது. இதனால் அப்பாலத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதோடு விரைந்து புதுப்பித்து வரும் சந்ததியினருக்கு அதன் பெருமையை விளக்கும் வகையில் அடையாளப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக நெல்லையில் அடையாளமான பல்வேறு பகுதிகளின் ஓவியங்களை பாலத்தின் மீது வரைந்து அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


நெல்லையின் வரலாற்று அடையாளமான ஈரடுக்கு மேம்பாலத்தின் பெருமையும்...! கோரிக்கையும்...!


நெல்லையின் வரலாற்று அடையாளமான ஈரடுக்கு மேம்பாலத்தின் பெருமையும்...! கோரிக்கையும்...!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

பேஸ்புக் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget