மேலும் அறிய

நுங்குவெட்ட சென்ற 80 வயது உடுக்கை இசை கலைஞருக்கு உதவித் தொகை அளிக்க ஆட்சியர் நடவடிக்கை

போதிய வருமானம் இல்லமால் விவசாய வேலைக்கு செல்வது, நுங்கு விற்பது போன்ற வேலைகளை செய்து அதில் கிடைக்கும் வருவமானத்தில் தனது இறுதி காலத்தினை கழித்து வரும் உடுக்கை இசைக்கலைஞர் குருசாமி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மேலக்கரந்தை கிராமத்தினை சேர்ந்தவர் குருசாமி. 80 வயதான இவர், வில்லிசையில் உடுக்கை வாசிக்கும் கலைஞர். சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக உடுக்கை வசித்து வந்தார். தமிழகம் முழுவதும் பல்வேறு வில்லிசை கச்சேரிகளில் கலந்து கொண்டு உடுக்கை வாசித்துள்ள குருசாமி மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலையிலும் உடுக்கை வாசித்து பாராட்டு பெற்றுள்ளார். பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பல்வேறு விருதுகள், பாராட்டு சான்றிதழ்களும் பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைஞர்களுக்கான அடையாள அட்டையும் குருசாமி பெற்றுள்ளார்.
 
நுங்குவெட்ட சென்ற 80 வயது உடுக்கை இசை கலைஞருக்கு உதவித் தொகை அளிக்க ஆட்சியர் நடவடிக்கை
 
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழாக்கள் இல்லை என்பதால் நிகழ்ச்சிகள் நடக்கவில்லை என்பதால் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு எங்கும் செல்லமால் உள்ளார். நிகழ்ச்சிகள் இல்லை என்பதால் போதிய வருமானம் இல்லமால் விவசாய வேலைக்கு செல்வது, நுங்கு விற்பது போன்ற வேலைகளை செய்து அதில் கிடைக்கும் வருவமானத்தில் தனது இறுதி காலத்தினை குருசாமி கழித்து வருகிறார்.

நுங்குவெட்ட சென்ற 80 வயது உடுக்கை இசை கலைஞருக்கு உதவித் தொகை அளிக்க ஆட்சியர் நடவடிக்கை
 
உடுக்கை இசைக்கலைஞருக்கு உதவி தொகை கிடைக்கவில்லை என்ற செய்தி கிடைத்தவுடன் மேலக்கரந்தை நோக்கி புறப்பட்டோம், தூத்துக்குடி மாவட்ட எல்லை கிராமமான மேலக்கரந்தை சென்றடைந்த போது வெயில் சுள்ளென அடிக்க, அந்த வேகாத வெயிலில் வில்லிசையில் உடுக்கை இசைத்த முதியவர் குருசாமியின் கை தற்போது பனை நுங்குவை இலாவகமாக சீவி கொண்டிருந்தது. சுட்டெரிக்கும் வெயிலில் தனது சைக்கிளில் பனங்காயை ஏற்று கொண்டு மேலக்கரந்தை கிராமம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள கிராமத்திற்கும் சென்று விற்பனை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருவாயை கொண்டு பசியாற்றி வருகிறார் குருசாமி.
 
 
உடல் தளரும் வயதிலும் அயராது உழைக்கும் பெரியவர் குருசாமியிடம் பேச்சுக் கொடுத்தோம், உடுக்கை இசைன்னா என்னான்னு கொஞ்சம் இருய்யான்னு வியாபாரத்தை முடிச்சிட்டு வீட்டுக்கு கூப்பிட்டு போனார். தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம், உடுக்கை இசையை பாராட்டி தனக்கு தரப்பட்ட சான்றிதழ்களை காண்பித்து மகிழ்ந்த அவர் , தனது உயிருக்கு உயிரான உடுக்கையை தனது கைகளில் எடுத்து கொண்டு வாசிக்க துவங்க வாசிப்பிற்கு ஏற்ப உடுக்கையின் சுற்றியுள்ள பகுதிகளை தனது விரல்களை கொண்டு ஏற்றியும் இறக்கியும் பிடித்து உடுக்கை இசையை வாசித்தார்.

நுங்குவெட்ட சென்ற 80 வயது உடுக்கை இசை கலைஞருக்கு உதவித் தொகை அளிக்க ஆட்சியர் நடவடிக்கை
 
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நலிந்த கலைஞர்களுக்கான உதவி தொகை கேட்டு குருசாமி விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் தற்பொழுது வரை அவருக்கு உதவித்தொகை கிடைத்தபாடு இல்லை, பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்பதால் வேறு வழி இல்லமால் தள்ளாத வயதிலும் குருசாமி நுங்கு விற்பனை செய்து வந்தார். நுங்கு சீசனும் தற்பொழுது முடிந்து விட்டது, விவசாய வேலையும் இல்லை, குடும்பத்தினர் அரவணைப்பும் இல்லை என்ற சூழ்நிலையில் ரேஷனில் கொடுக்கும் அரிசியை வைத்து தனது வாழ்நாள்களை கழித்து வருகிறார். மற்றவர்கள் மன மகிழ உடுக்கை வாசித்த கலைஞர் தனது இறுதி நாள்களை கடும் வறுமையில் கழித்து வரும் சூழ்நிலை உள்ளது.

நுங்குவெட்ட சென்ற 80 வயது உடுக்கை இசை கலைஞருக்கு உதவித் தொகை அளிக்க ஆட்சியர் நடவடிக்கை
 
உடுகை இசைக்கலைஞர் குருசாமியின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜின் கவனத்திற்கு கொண்டு சென்றோம், உடுக்கை கலைஞர் குருசாமியின் மனு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நலிந்த கலைஞர்களுக்கான 3000 ரூபாய் உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் உடனடியாக அவருக்கு உதவி கிடைக்கும் வகையில் முதியோர் உதவி தொகையாக 1500 ரூபாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதற்கான ஆணை விரைவில் எனவும் ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!
ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!
ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
India Next T20 Captain: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
Paradise Movie Review: வீக்கெண்ட் கொண்டாட்டம்.. வெவ்வேறு பக்கங்களைக் கொண்ட ஒரே கதை... பாரடைஸ் திரைப்பட விமர்சனம்!
Paradise Movie Review: வீக்கெண்ட் கொண்டாட்டம்.. வெவ்வேறு பக்கங்களைக் கொண்ட ஒரே கதை... பாரடைஸ் திரைப்பட விமர்சனம்!
Breaking News LIVE: சென்னை மாநகராட்சி செயல்பாடின்றி முடங்கியுள்ளது - பிரேமலதா
Breaking News LIVE: சென்னை மாநகராட்சி செயல்பாடின்றி முடங்கியுள்ளது - பிரேமலதா
Vikravandi by election: ஒரு தலைமுறையை அழிக்கும் நபருக்கு ஆயுள் தண்டனை - செளமியா அன்புமணி அதிரடி
Vikravandi by election: ஒரு தலைமுறையை அழிக்கும் நபருக்கு ஆயுள் தண்டனை - செளமியா அன்புமணி அதிரடி
Embed widget