மேலும் அறிய

வாக்களித்த மக்களுக்கு இந்த ஆட்சி நல்லது செய்யவில்லை - பிரேமலதா விஜயகாந்த்

காலையிலிருந்து இங்கு ஒரு திமுக காரர்கள் கூட இல்லை. இதே தேர்தல் நேரம் என்றால் ஒரு தெருவிற்கு 50 பேர் வந்து நிற்பார்கள்.

நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட  பகுதிகளை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டு மக்களின் பாதிப்புகளை கேட்டறிந்து நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் பொழுது, "பெரியார் பேருந்து நிலையம் முக்கியமான பகுதி. இங்கு கடந்த 5 வருடமாக பணி நடந்து வருகிறது. ஆனால் இதுவரை பணி முடியவில்லை. இங்குள்ள வியாபாரிகள் அத்தனை பேரும் கோடிக்கணக்கான ரூபாயை இழந்து உள்ளனர். எல்லா பகுதியையும் பார்த்துக்கொண்டு தான் வருகிறேன். 180 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சுலோச்சன முதலியார் பாலம் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. ஆனால் 25 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட பாலம் முற்றிலுமாக சிதலமைடைந்து முழுவதும் சேதமடைந்து உள்ளது. மக்களிடம் கேட்டால் தாமிரபரணி ஆறு நிரம்பி ஊருக்குள் வந்ததாக சொல்கின்றனர். இதை யாரு முன்னெச்சரிக்கையாக அறிவிக்க வேண்டும். முன்னதாக  அறிவித்து எல்லோரையும்  இடமாற்றம் செய்திருக்க வேண்டும், ஆனால் மக்கள் கூறும் பொழுது, எங்களுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை, நள்ளிரவில் தண்ணீர் திறந்து விட்டுள்ளனர், அதனால் எங்களால் எதையும் எடுக்கமுடியவில்லை என்று கூறுகின்றனர்,இன்று அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கின்றனர். 

எங்களால் முடிந்த நிவாரணப்பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். ஒட்டுமொத்த நிர்வாகிகளும் உதவி செய்ய வந்துள்ளோம், ஆனால் ஆட்சியில் இருக்கும் திமுகவினர் என்ன செய்கின்றனர் என ஒட்டு மொத்த மக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.  ஆட்சியில் இருப்பவர்கள் வேலை என்ன? மின்சாரம், குடிநீர், சுகாதாரம் என அனைத்தையும் சீரமைக்க வேண்டும். இதையெல்லாம் கேட்க வேண்டிய முதல்வர் கூட்டணி தான் முக்கியம் என நேற்று டெல்லி சென்று அங்கிருந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஒட்டு மொத்த வாக்களித்த மக்களுக்கு தான் முதல் வேலைக்காரன் என டயலாக் மட்டும் பேசுகிறார். மக்கள் பாதித்திருக்கும் போது அவர் தான் முன்னாள் வந்து நிற்க வேண்டும்,  ஆட்சியில் இருப்பவர்கள் தான் வர வேண்டும், நானே ஆட்சியில் இருந்தால் ஒரு தெரு விடாமல் இறங்குவேன். ஆனால் திமுகவினர் ஆட்சியில் இருந்தும் மக்களை வந்து ஏன் சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர்,  அடுத்த தேர்தலுக்கான வியூகத்தை தான் திமுக செய்கிறதே தவிர வாக்களித்த மக்களுக்கு இந்த ஆட்சி நல்லது செய்யவில்லை என தெளிவாக புரிகிறது. 

நெல்லை மேயர் வந்தாரா? அவர்களுக்குள்ளே சண்டை. இது தான் ஓடுது. ஓட்டுக்காகவும், லஞ்ச ஊழல் செய்வதற்கும் தான் ஆட்சியாளர்களே தவிர மக்களுக்கு நல்லது செய்ய யாரும் இல்லை என்பதை மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  கஷ்டம் வரும் போது மட்டும் முறையிடுகிறீர்களே தவிர பின்  இதை மறந்துவிட்டு ஓட்டுக்கு காசு கொடுத்தால் அவர்கள் பின்னால் ஓடுகிறீர்கள். நீங்கள் ஒரு மாற்றத்தை கொடுத்தால் ஒரு புரட்சியையே ஏற்படுத்த முடியும். உடனடியாக அரசு இந்த பணிகளில் இரும்பு கரம் கொண்டு போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.  சென்னையில் 6 ஆயிரம் கொடுத்தது போல இங்கு பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு 5 லட்சம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இன்று ஆளுநர் ஒரு கருத்து சொல்கிறார், முதலமைச்சர் ஒரு கருத்து சொல்கிறார். முப்படைகளையும் அனுப்ப  தயாராக இருக்கிறோம் என ஆ ளுநர் சொல்கிறார், ஆனால் அவர் உதவி செய்யவில்லை என இவர்கள் முறையிடுகின்றனர். காலையிலிருந்து இங்கு ஒரு திமுக காரர்கள் கூட இல்லை. இதே தேர்தல் நேரம் என்றால் ஒரு தெருவிற்கு 50 பேர் வந்து நிற்பார்கள்" என விமர்சித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Embed widget