மேலும் அறிய

’’காவலர்கள் யாரும் அடிக்காமல் பாளையங்கோட்டை சிறையில் 20 ஆண்டுகளில் 133 கைதிகள் உயிரிழப்பு’’

’’பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 20 ஆண்டுகளில் எயிட்ஸ், கொரோனா உள்ளிட்ட நோயால் 133 கைதிகள் இறந்த நிலையில், சிறை அலுவலர்கள் தாக்கியதில் கைதிகள் உயிரிழந்ததாக பதிவேடுகள் இல்லை’’

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 20 ஆண்டுகளில் எய்ட்ஸ், கொரனோ உள்பட பல்வேறு நோய்களால் 133 கைதிகள் மரணம் அடைந்துள்ளதாகவும் சிறை அலுவலர்கள் தாக்கியதில் கைதிகள் உயிரிழந்ததாக பதிவேடுகள் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழக்கறிஞருக்கு கேட்ட கேள்விக்கு பாளையங்கோட்டை மத்திய சிறை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
 
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பலர் உடல்நலக்குறைவால் உயிரிழக்கு சம்பவம் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது அதேசமயம் சிறை அலுவலர்கள் தாக்குவதன் மூலம் பல கைதிகள் உயிரிழப்பதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் பாளையங்கோட்டை சிறையில் சாதி ரீதியான மோதல்கள் அதிகமாக நடைபெறுவதால் அதன் காரணமாகவும் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் வாகைக் குளத்தை சேர்ந்த கைதி முத்து மனோ என்பவர் சாதி மோதல் காரணமாக சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
 

’’காவலர்கள் யாரும் அடிக்காமல் பாளையங்கோட்டை சிறையில் 20 ஆண்டுகளில் 133 கைதிகள்  உயிரிழப்பு’’
 
இந்த சூழ்நிலையில், கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பாளையங்கோட்டை சிறையில் எத்தனை கைதிகள் உயிரிழந்துள்ளனர்? மேற்கண்ட ஆண்டுகளில் தற்கொலையில் ஈடுபட்ட கைதிகளின் விபரங்கள் என்ன?, கைதி ஒருவர் சோப் ஆயில் குடித்து தற்கொலை முயற்சி செய்தபோது அவர் கையில் விலங்கிட்டு கட்டிப்போட்டு துன்புறுத்திய சிறை அலுவலர் மற்றும் அவர்களின் பணி பொறுப்பு என்ன? என்பது உள்பட 5 கேள்விகளுக்கு பதில் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  வழக்கறிஞர் பிரம்மா மனு அளித்திருந்தார்.

’’காவலர்கள் யாரும் அடிக்காமல் பாளையங்கோட்டை சிறையில் 20 ஆண்டுகளில் 133 கைதிகள்  உயிரிழப்பு’’
 
தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை பொது தகவல் உதவி அலுவலர் வழக்கறிஞர் பிரம்மாவுக்கு தகவல் வழங்கியுள்ளார் அதில் கடந்த 2000 ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் மொத்தம் 133 கைதிகள் பல்வேறு நோய்களால்  உயிரிழந்துள்ளதாக அவர்களின் பெயர் மற்றும் உயிரிழந்த இடத்தின் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக இதில் எய்ட்ஸ் மற்றும் கொரனௌ போன்ற கொடிய நோய்களாலும் கைதிகள் இறந்திருப்பதாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இதில் 90 சதவீதம் பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் உயிரிழந்திருப்பதாக தகவல் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் கடந்த 03.11.2020 அன்று விசாரணைக் கைதியான கருத்தபாண்டி என்பவர் சோப்பு ஆயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரைச் சிறைப் பணியாளர்கள் துன்புறுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர் .
 
மேலும் 2000 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் சிறை அலுவலர்களால் தாக்கப்பட்டு சிறைவாசிகள் இறந்ததாக பதிவேடுகளில் குறிப்புகள் எதுவுமில்லை என்றும் தற்கொலைக்கு முயற்சி செய்த சிறை வாசிகள் தொடர்பாக எதுவும் பதிவேடுகள் தனியாக பராமரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் மேற்கண்ட ஆண்டுகளில் சிறைவாசிகள் தற்கொலைக்கு முயற்சி செய்வதை தடுக்க தனியாக அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் சிறையில் சிறைவாசிகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு மன நல அலுவலர் மற்றும் மனநல ஆலோசகராக நியமிக்கப்பட்டு கைதிகளுக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதற்கிடையில் இந்த தகவலில் பல உண்மைச் சம்பவங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாகவும் இதில் பல கைதிகள் சிறை அலுவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாகவும் வழக்கறிஞர் பிரம்மா குற்றம்சாட்டியுள்ளார்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget