மேலும் அறிய

நெல்லை தொகுதி நாடார் சமூகத்திற்கே..! நெல்லையில் காங்கிரஸ் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..!

2024 பாராளுமன்ற தேர்தலில்  நாடார்கள் அதிகம் வசிக்கும் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நாடார் சமுதாயத்திற்கே அளிக்க வேண்டும்.

2024 பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதற்கான அறிவிப்புகளும் இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். குறிப்பாக தேர்தல் வருவதற்கு முன்னே நெல்லையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் திருநெல்வேலி நாடார் சமுதாய மக்கள் என்ற பெயரில் நாடார்கள் அதிகம் வசிக்கும் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாடார் சமுதாயத்திற்கே அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மாநகர முழுவதும் இன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களுக்கு அன்பு வேண்டுகோள்,  2024 பாராளுமன்ற தேர்தலில்  நாடார்கள் அதிகம் வசிக்கும் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நாடார் சமுதாயத்திற்கே அளிக்கவும் என நாடார்  சமுதாய மக்கள் சார்பாக பொதுவாக  பெயர் எதுவும் இன்றி ஒட்டப்பட்டுள்ளது. இதனால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவுறாத நிலையில் உள்ளது. அதோடு கடந்த முறை திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் ஞானதிரவியம் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்பொழுது நாடார் சமுதாயம் சார்பில் காங்கிரசுக்கு இடம் ஒதுக்கக்கேட்டு ஒட்டப்பட்ட இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் கடந்த 29ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெள்ளாளர்கள் அதிகம் வசிக்கும் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் நிறுத்த வேண்டுமென பாரதிய ஜனதா கட்சிக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் மாநகர முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தன. ஆனால் முன்னதாகவே பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவரும், தற்போதைய நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நாகேந்திரன் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.  கட்சி தலைமையும் அவருக்கு வாய்ப்பு வழங்குவது உறுதியானதாகவும் அதன் காரணமாகவே சமீபத்தில் அவர் முதல் ஆளாக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் தான் இன்று நாடார் சமுதாயம் சார்பில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கும் பட்சத்தில் தான் இது போன்ற போஸ்டர் யுத்தம், கட்சியினரின் கோரிக்கை முடிவுக்கு வரும் என்று அதனை கடந்து செல்லும் மக்களால் பேசப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget