மேலும் அறிய

தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள் - கனிமொழி எம்.பி.,

எல்லோராலும் சாதிக்க முடியும். முடியாது என்ற எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். முடியாது என கூறுவோரை பக்கத்தில் வைக்காதீர்கள் - அமைச்சர் கீதாஜீவன்

தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'கல்லூரிக் கனவு' எனும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேசும்போது, மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி சிறப்பான திட்டமாகும். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் கிடையாது. வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய நமது பின்புலம் முக்கியம் அல்ல. அதற்கு நானே எடுத்துக் காட்டு. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நான் நாட்டின் மிக உன்னதமான நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ளேன். அரசு பள்ளியில் படிப்பது, தமிழ் மொழியில் படிப்பது போன்றவை நமது உயர்வுக்கு எந்த தடையும் இல்லை. தளராத மனமும், கடின உழைப்பும் தான் முக்கியம்.


தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள் - கனிமொழி எம்.பி.,

என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. உங்களது திறமை மீது நம்பிக்கை கொள்ளுங்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முடிவெடுக்க தைரியமாக அனுமதிக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டுவிட வேண்டும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். முன்மாதிரியாக யாரையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு நீங்கள் தான் முன்மாதிரி. என்ன படிக்க வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள். யாரையும் தேர்வு செய்ய அனுமதிக்காதீர்கள். ஒரே எண்ணம் கொண்டவர்களாக இருக்காதீர்கள். பொறியியல் படித்தால் தான் இஸ்ரோவில் வேலைக்கு வரமுடியும் என நினைக்காதீர்கள். என்ன படித்தாலும் இஸ்ரோவில் வேலை இருக்கு. நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். புதுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள் - கனிமொழி எம்.பி.,

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி பேசும்போது, கல்லூரி கனவு என்பது உங்களுடைய கனவுகளாக மட்டுமே இருக்க வேண்டும். அது வேறு யாருடைய கனவாகவும் இருக்கக்கூடாது. இன்னொருவருடைய ஆசைகளை நாம் நிறைவேற்ற முடியாது. நம்முடைய திறமை, ஆர்வம் எதில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கு, ஆர்வம் இருக்கு. ஒவ்வொருவருக்கும் தனித்தனி இயல்பு இருக்கிறது. அதற்கு எதிராக எதையும் திணிக்க முடியாது. பள்ளி படிப்பை முடித்த உங்கள் முன்பு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பல துறைகள் உள்ளன. எல்லா துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு நிச்சயமாக அதில் இருக்கிறது. ஆனால் அதற்கான சிறிய தேடல் அவசியம். தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல் நம்பிக்கையோடு முன்னேற வேண்டும் என்றார்.


தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள் - கனிமொழி எம்.பி.,

அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, மாணவர்கள் என்னால் முடியும் என முதலில் நம்ப வேண்டும். இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி தன்னம்பிக்கையோடு முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். எல்லோருக்கும் திறமைகள் இருக்கின்றன. எனவே, எல்லோராலும் சாதிக்க முடியும். முடியாது என்ற எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். முடியாது என கூறுவோரை பக்கத்தில் வைக்காதீர்கள். எதையும் ஈடுபாட்டோடு தன்னம்பிக்கையோடு செய்யுங்கள் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்றார் .

நிகழ்ச்சியில் ஐஎப்எஸ் தேர்வில் வெற்றிபெற்ற தேசிய அளவில் 57-வது ரேங்க் பெற்ற தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வனவராக பணியாற்றி வரும் சுப்புராஜை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.


தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள் - கனிமொழி எம்.பி.,

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, தமிழகத்தின் தனித்துவத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், ஸ்பிக் நிறுவனமும் இணைந்து நெய்தல் தூத்துக்குடி கலை விழா' என்ற விழாவை நடத்துகிறது. இந்த விழா அடுத்த மாதம் (ஜூலை) 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 4 நாட்கள் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் வைத்து நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கலை விழா நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 300 கிராமிய கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு குழுக்களாக கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்த கலை விழாவில் உணவுத்திருவிழாவும் நடத்தப்படுகிறது. இதற்காக சுமார் 20 உணவு சார்ந்த அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வகையிலான அரங்குகளும் அமைக்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Embed widget