மேலும் அறிய

கொலை செய்யப்பட்டு 10 நாட்களாகியும் வாங்கப்படாத தாய், மகள் உடல்கள் - உடல் பாகங்கள் மரபணு சோதனைக்கு அனுப்பி வைப்பு

தாய்-மகள் இருவரது உடல்களும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வரும் போது கருகி எலும்புக்கூடாக இருந்ததால் தடய அறிவியல் சோதனைக்காக சில பாகங்கள் மதுரை ஆய்வகத்துக்கு அனுப்பி வைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் காளியம்மாள் (54) இவர் தனது 2-வது மகள் மணிமேகலையுடன் (34) ரெயில்வே காலனி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி இரவு காளியம்மாளும், அவரது மகள் மணிமேகலையும் வீட்டில் தீப்பிடித்து உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். இது குறித்து அவரது மூத்த மகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது இருவரும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதியான சசிகுமார் என்பவர் பணம், நகைக்காக இருவரையும் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு தாய்-மகள் இருவரது உடல்களையும் அவர்கள் உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். இந்த கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம். அவர்களை கைது செய்யும் வரை இருவரது உடல்களையும் வாங்க மாட்டோம் என தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தாய்-மகள் இருவரது உடல்களும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வரும் போது கருகி எலும்புக்கூடாக இருந்ததால் தடய அறிவியல் சோதனைக்காக சில பாகங்கள் மதுரை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


கொலை செய்யப்பட்டு 10 நாட்களாகியும் வாங்கப்படாத தாய், மகள் உடல்கள் - உடல் பாகங்கள் மரபணு சோதனைக்கு அனுப்பி வைப்பு

இதற்கிடையே இந்த கொலை  வழக்கில் முக்கிய நபரான சசிகுமார் போலீசாரிடம் இருந்து தப்பி செல்ல முயன்ற போது தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக சசிகுமாருக்கு அடைக்கலம் கொடுத்ததாக மண்டபம் ஏ.கே.எஸ். தோப்பு பகுதியில் தங்கியிருந்த திருவண்ணாமலை மாவட்ட அகதிகள் முகாமைச் சேர்ந்த சுப்பிரமணி (44) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.இது குறித்து மாவட்ட எஸ்பி கார்த்திக் கூறுகையில், உடல் பாகங்களில் எளிதில் தீப்பற்றும் வேதிப் பொருள்கள் உள்ளதா என்பதை அறிய தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், எரிந்தவர்களை அடையாளம் காணும் வகையில் மரபணு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் வசிக்கும் மற்றொரு மகள் சண்முகப்பிரியா மூலம் இதனை செய்ய இருக்கிறோம். மருத்துவ பரிசோதனையில் அடித்து கொல்லப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம், என கூறப்பட்டுள்ள நிலையில் தடயவியல் மற்றும் மரபணு பரிசோதனைகள் அவசியமானது, என தெரிவித்தார்.


கொலை செய்யப்பட்டு 10 நாட்களாகியும் வாங்கப்படாத தாய், மகள் உடல்கள் - உடல் பாகங்கள் மரபணு சோதனைக்கு அனுப்பி வைப்பு

பிறந்த நாடான இலங்கையில் உள்நாட்டு போர் காரணமாக, அங்கிருந்து அடைக்கலம் தேடி தமிழகத்திற்கு  அகதிகளாக வந்து முகாம்களுக்குள் அடைபட்டு  போதிய வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழர்களுக்கு, நட்பு ரீதியாக பழகியவர்களுக்கு  பணி கொடுத்து பாசக்கரம் நீட்டிய  காளியம்மாளை  கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி இலங்கை தமிழர்கள்  கொலை செய்துள்ள இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பகொலையில்  அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
Embed widget