மேலும் அறிய

Manimuthar falls: 4 மாதங்களுக்கு பிறகு நாளை முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

மணிமுத்தாறு அருவியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நின்று குளிக்கும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் உள்ளது  மணிமுத்தாறு  அருவி. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாகவும் மணிமுத்தாறு அருவி உள்ளது. குறிப்பாக இந்த அருவியில் குளிப்பதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வருகை புரிவார்கள்..  மேலும் இந்த அருவியில் குளிக்க நபர் ஒருவருக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவி மூடப்பட்டது. வெள்ளத்தில் அருவியில் இருந்த தடுப்பு கம்பிகள் சேதமாகின. எனவே அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. குறிப்பாக ஆண்கள் பெண்களுக்கு தனி தனி தடுப்பு கம்பிகள், தரையில் காங்கீரிட் பணி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் அருவி கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டது.

இந்த சூழலில் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்கவும், கோடை வெயிலுக்கு சுற்றுலா வரும் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதியளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதோடு அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்லும் சூழல் இருந்தது.  அதே நேரம் அருகில் உள்ள குற்றாலம் போன்ற பிற அருவிகளில் கோடை காரணமாக தண்ணீர் வரத்து இல்லாத நிலை உள்ளது. ஆனால் மணிமுத்தாறு அருவியில் கோடை காலத்திலும் மிதமான தண்ணீர் வரும். எனவே  மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து மக்கள் குளிக்க உடனே அனுமதி கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. 

இந்த நிலையில் வனத்துறை சார்பில் இன்று அறிவிப்பானது வெளியானது. அதில் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திலுள்ள சூழல் சுற்றுலாப்பகுதியான மணிமுத்தாறு அருவிப்பகுதியில் டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் பொதுமக்கள் நின்று குளிக்கக்கூடிய இடங்கள் முழுவதுமாக சேதம் அடைந்திருந்தது. பொதுமக்கள் நலன் கருதி பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நின்று குளிக்கும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் வருகிற 26.04.24 நாளை முதல் பொதுமக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை வனவிதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget