மேலும் அறிய

குறைந்தபட்ச ஆதாரவிலை அடிப்படையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் பணிகள் தொடக்கம்

தமிழ்நாட்டில் 4,35,621 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றிலிருந்து 47,064 இலட்சம் தேங்காய்கள் உற்பத்தியாகின்றன

தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. தற்போது, தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், விலை ஆதரவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
 
தமிழ்நாட்டில் 4,35,621 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றிலிருந்து 47,064 இலட்சம் தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. தேங்காய்களின் விலை குறையும் போது விவசாயிகள் அவற்றை மதிப்புக் கூட்டி தேங்காய் கொப்பரைகளாக விற்பனை செய்து வருகின்றனர். சமீப காலங்களாக, தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக இருந்து வருகின்றது.
 

குறைந்தபட்ச ஆதாரவிலை அடிப்படையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் பணிகள் தொடக்கம்
 
விலை ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளை பாதுகாத்து தேங்காய் கொப்பரைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், நாமக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருப்பூர், ஈரோடு, தேனி, தருமபுரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 51,000 மெட்ரிக் டன் கொப்பரை குறைந்தபட்ச ஆதாரவிலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள தென்னை விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொப்பரையை எளிதில் கொள்முதல் செய்வதற்காக, தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் 42 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 51,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படும்.
 

குறைந்தபட்ச ஆதாரவிலை அடிப்படையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் பணிகள் தொடக்கம்
 
பந்து கொப்பரை மற்றும் அரவைக் கொப்பரை என இரண்டு வகைகளாக தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். மத்திய அரசினால் 2022 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான பந்து கொப்பரைக்கு கிலோ ஒன்றிக்கு 110 ரூபாய் மற்றும் அரவைக் கொப்பரைக்கு  105.90 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் பணி அடுத்த ஆறு மாதங்கள் நடைபெறும். 1000 மெட்ரிக் டன் பந்து கொப்பரையும், 50,000 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரையும் கொள்முதல் செய்திட அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. வடசேரி மற்றும் திங்கள்சந்தை ஒழுங்குமுறை விற்னைக்கூடத்தின் மூலம் தலா 400 மெட்ரிக் டன் அரைவ கொப்ரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வடசேரி மற்றும் திங்கள்சந்தை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மேற்படி கொள்முதல் நடைபெற உள்ளதால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களை அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்திடலாம். பெயர்களை பதிவு செய்யும் போது நிலச்சிட்டா, அடங்கல், பட்டா, ஆதார் அட்டை, புகைப்படம் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

குறைந்தபட்ச ஆதாரவிலை அடிப்படையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் பணிகள் தொடக்கம்
 
மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான நாஃபெட் நிறுவனம் பரிந்துரைக்கும் குறைந்தபட்ச தரத்தில் கொப்பரை இருத்தல் அவசியமாகும். விவசாயிகள் இத்தரத்தினை உறுதி செய்து குறைந்தபட்ச ஆதார விலை பெற்றிடலாம். மேலும் விவரங்களுக்கு வடசேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் (9791834902) மற்றும் மேற்பார்வையாளர் (8015644640)இ திங்கள்சந்தை ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் (9092671255) மற்றும் மேற்பார்வையாளர் (8270038968) அவர்களின் அலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 

குறைந்தபட்ச ஆதாரவிலை அடிப்படையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் பணிகள் தொடக்கம்
 
தமிழகத்தில் கொப்பரை கொள்முதலுக்கு தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் மாநில முகமையாக செயல்படுகின்றது. கொப்பரைத் தேங்காய்க்கான தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. சேமிப்புக் கிடங்குகளில் கொப்பரைக் குவியல்கள் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் அதற்குரிய தொகை வழங்கப்படும். தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த கொப்பரைக் கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Embed widget