சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திரகபூரின் வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது - ஐஜி தினகரன்
அமெரிக்காவில் 37 சிலைகளும், சிங்கப்பூரில் 15 சிலைகளும் சில சிலைகள் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ளது. இதனை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி தினகரன் நேற்று நெல்லை வந்தார். இங்கு மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து நெல்லை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையுடன் மாவட்டத்தில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நெல்லையின் வரலாற்று பழமை வாய்ந்த நெல்லையப்பர் கோயிலில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு செய்யப்பட்டுள்ள சிசிடிவி பாதுகாப்பு மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து சிலைகளை கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி.தினகரன் கூறுகையில்,

“பொருளாதார குற்றப்பிரிவில் இருந்து பிரிக்கப்பட்டு தற்போது சிலை கடத்தல் பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. காவலர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இந்த ஆண்டு இதுவரை 40 சிலை கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 43 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 199 சிலைகள் மற்றும் கலை அலங்கார பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் 60 க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளது. அமெரிக்காவில் 37 சிலைகளும், சிங்கப்பூரில் 15 சிலைகளும் சில சிலைகள் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ளது. இதனை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்கள் தோறும் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது. சிலை கடத்தல் முக்கிய குற்றவாளியான சுபாஷ் சந்திர கபூரின் வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் இரண்டு வாய்தாக்களில் வழக்குகள் முடிவுக்கு வருவதற்கான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















