மேலும் அறிய

கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் எதிர்ப்பு

கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடம் தொடர்பாக மீனவர்களின் கருத்துக்களை முழுமையாக அறிந்தே நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. 9 மாதங்களுக்கு பிறகு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், உதவி கலெக்டர் கவுரவ்குமார், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் எதிர்ப்பு

கூட்டத்தில் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் மற்றும் மீனவ கிராமங்களில் உள்ள ஆலயங்கள், மீன் ஏலகூடம் உள்ளிட்ட பொது இடங்கள் விடுபட்டு உள்ளன. பெரும் முதலாளிகள், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. மீனவர்களின் கருத்துக்களை கேட்காமல் இந்த வரைபடத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது. மேலும், கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடம் தொடர்பாக மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் பாரம்பரிய மீனவர்கள் தரப்பில் இடம் பெற்றுள்ள 3 பேரை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள். அவர்களை தேர்வு செய்தது குறித்து பகிரங்கமாக ஏன் அறிவிக்கவில்லை.


கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் எதிர்ப்பு

மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை மாதம் தோறும் முதல் வெள்ளிக்கிழமை தவறாமல் நடத்த வேண்டும். கடற்கரை பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.


கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் எதிர்ப்பு

இதற்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசும் போது, கடந்த மூன்று மாதங்களாக மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த முயற்சி செய்தும், பல்வேறு காரணங்களால் நடத்த முடியாமல் போய்விட்டது. இனிமேல் மாதம் தோறும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை தவறாமல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசியல் ரீதியான கருத்துக்களை யாரும் பேச வேண்டாம். யார் வேண்டுமானாலும் அரசியலில் இருக்கலாம். அதிகாரிகள் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள். கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடம் தொடர்பாக மீனவர்களின் கருத்துக்களை முழுமையாக அறிந்தே நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு காரணமாகவே அமலிநகரில் தூண்டில் வளைவு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அமலிநகரில் விரைவில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறது என்று கூறினார்.


கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் எதிர்ப்பு

மேலும் கூட்டத்தில் மீனவர்கள் கருத்துக்களை கேட்டறிவதற்காக பாரம்பரிய மீனவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி விளக்கம் அளித்தும் மீனவர்கள் தொடர்ந்து எழுந்து நின்று பேசினர். அப்போது மீனவர்களுக்கு இடையே சிறு வாக்குவாதமும் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் மீனவர்களை சமாதப்படுத்தினர். அப்போது, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எழுந்து, மீனவர்களின் குறைகளை கேட்டறிவதற்காக தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. மீனவர்கள் தங்கள் குறைகளை, கருத்துக்களை அமைதியான முறையில், சரியான வழியில் தெரிவித்தால் அதிகாரிகள் உரிய பதிலை அளிப்பார்கள். எனவே, மீனவர்கள் தங்கள் குறைகளை அமைதியாக தெரிவியுங்கள் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
Embed widget