மேலும் அறிய

கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் எதிர்ப்பு

கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடம் தொடர்பாக மீனவர்களின் கருத்துக்களை முழுமையாக அறிந்தே நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. 9 மாதங்களுக்கு பிறகு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், உதவி கலெக்டர் கவுரவ்குமார், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் எதிர்ப்பு

கூட்டத்தில் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் மற்றும் மீனவ கிராமங்களில் உள்ள ஆலயங்கள், மீன் ஏலகூடம் உள்ளிட்ட பொது இடங்கள் விடுபட்டு உள்ளன. பெரும் முதலாளிகள், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. மீனவர்களின் கருத்துக்களை கேட்காமல் இந்த வரைபடத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது. மேலும், கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடம் தொடர்பாக மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் பாரம்பரிய மீனவர்கள் தரப்பில் இடம் பெற்றுள்ள 3 பேரை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள். அவர்களை தேர்வு செய்தது குறித்து பகிரங்கமாக ஏன் அறிவிக்கவில்லை.


கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் எதிர்ப்பு

மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை மாதம் தோறும் முதல் வெள்ளிக்கிழமை தவறாமல் நடத்த வேண்டும். கடற்கரை பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.


கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் எதிர்ப்பு

இதற்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசும் போது, கடந்த மூன்று மாதங்களாக மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த முயற்சி செய்தும், பல்வேறு காரணங்களால் நடத்த முடியாமல் போய்விட்டது. இனிமேல் மாதம் தோறும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை தவறாமல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசியல் ரீதியான கருத்துக்களை யாரும் பேச வேண்டாம். யார் வேண்டுமானாலும் அரசியலில் இருக்கலாம். அதிகாரிகள் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள். கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடம் தொடர்பாக மீனவர்களின் கருத்துக்களை முழுமையாக அறிந்தே நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு காரணமாகவே அமலிநகரில் தூண்டில் வளைவு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அமலிநகரில் விரைவில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறது என்று கூறினார்.


கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் எதிர்ப்பு

மேலும் கூட்டத்தில் மீனவர்கள் கருத்துக்களை கேட்டறிவதற்காக பாரம்பரிய மீனவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி விளக்கம் அளித்தும் மீனவர்கள் தொடர்ந்து எழுந்து நின்று பேசினர். அப்போது மீனவர்களுக்கு இடையே சிறு வாக்குவாதமும் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் மீனவர்களை சமாதப்படுத்தினர். அப்போது, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எழுந்து, மீனவர்களின் குறைகளை கேட்டறிவதற்காக தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. மீனவர்கள் தங்கள் குறைகளை, கருத்துக்களை அமைதியான முறையில், சரியான வழியில் தெரிவித்தால் அதிகாரிகள் உரிய பதிலை அளிப்பார்கள். எனவே, மீனவர்கள் தங்கள் குறைகளை அமைதியாக தெரிவியுங்கள் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget