மேலும் அறிய

Thoothukudi: மதுபான திருத்த விதி, 12 மணி நேர வேலை கண்டித்து வெளிநடப்பு செய்ய முயன்ற அதிமுக மாமன்ற உறுப்பினர்- வெளியேற்ற உத்தரவிட்ட மேயர்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கிய போது, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி எழுந்து, மதுபான திருத்த விதிகளை கண்டித்தும், தொழிலாளர் வேலை சட்டத்தை திருத்தம், முத்திரை தாள் கட்டண உயர்வை கண்டிப்பதாகவும் கூறி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து கூட்ட அரங்கில் முன்பு வந்து கோஷம் எழுப்பினார். உடனடியாக மேயர் அவரை வெளியேற்றுமாறு கூறினார். அப்போது முன் வரிசையில் இருந்த தி.மு.க கவுன்சிலர்கள் மந்திர மூர்த்தியை சூழ்ந்து கொண்டு கூட்ட அரங்கில் இருந்து வெளியில் அனுப்பி விட்டனர். அப்போது அங்கு பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெற்றி செல்வன், பத்மாவதி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து கூட்டத்தில் 11 தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றப்பட்டன.



Thoothukudi: மதுபான திருத்த விதி, 12 மணி நேர வேலை கண்டித்து வெளிநடப்பு செய்ய முயன்ற அதிமுக மாமன்ற உறுப்பினர்- வெளியேற்ற உத்தரவிட்ட மேயர்

கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பேசும் போது, தூத்துக்குடி வி.எம்.எஸ்.நகரில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. அதனை விரைந்து முடிக்க வேண்டும். அந்த பகுதியில் கூடுதல் நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். மணிநகர் பகுதியில் வாகன நிறுத்தும் வசதி இல்லாத திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்யாநகர் பகுதியில் தெருகுழாயில் டியூப் போட்டு குடிநீர் பிடிப்பதால் சீரான குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினர்.

கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது, மாநகராட்சி பகுதியில் கோடைகாலத்திலும் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் புகார்கள் உள்ளன. அதனை ஆணையாளர் சரி செய்து வருகிறார். மாநகராட்சி பகுதியில் அனுமதி இன்றி இயங்கிய இரண்டு குடிநீர் நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளன. மாநகராட்சி பகுதிக்குள் எந்த இடத்திலும் குடிநீர் உறிஞ்சி எடுக்க அனுமதி கிடையாது. மாநகராட்சி பகுதிக்குள் மினரல் வாட்டர் நிறுவனம் அமைக்க அனுமதி இல்லை. அவ்வாறு செயல்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சாலை பணிகளும் நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ரூ.24 கோடி செலவில் சாலைகள் அமைப்பதற்கும் முதல்-அமைச்சர் அனுமதி அளித்துள்ளார். தூத்துக்குடி நகரை தூய்மையான நகரமாகவும், மாசில்லா நகரமாகவும் மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் பயன்பெறும் வகையில் சாலைகளை தேர்வு செய்து செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக கோவில்கள், பள்ளி மாணவர்கள் செல்லும் சாலைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு முதல்-அமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி நோக்கத்தின்படி கட்சி பாகுபாடு இன்றி அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது.



Thoothukudi: மதுபான திருத்த விதி, 12 மணி நேர வேலை கண்டித்து வெளிநடப்பு செய்ய முயன்ற அதிமுக மாமன்ற உறுப்பினர்- வெளியேற்ற உத்தரவிட்ட மேயர்


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளிக்கூடத்தை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போன்று பாண்டுரங்கன் தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 650 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தை அறிஞர் அண்ணா மண்டபம் அருகில் இடமாற்றம் செய்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த பள்ளிக்கூடம் முழுமையாக மாணவிகள் மட்டும் படிக்கும் வகையில் பெண்கள் பள்ளிக்கூடமாக மாற்றப்பட உள்ளது என்றார். கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில்  9ஆம்  நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி  உலா
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில்  9ஆம்  நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி  உலா
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
"இதை மட்டும் பண்ணாதீங்க சிந்தனை திறன் குறையும்" மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அட்வைஸ்!
Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Embed widget