மேலும் அறிய

கொள்ளையடிப்பது ஒன்லி போலீஸ் குவார்ட்டர்ஸ்- போலீஸில் சிக்கிய பலே திருடன்

விளாத்திகுளத்தில் காவலர் குடியிருப்பில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை:  ஒருவர் கைது 

விளாத்திகுளத்தில் காவலர் குடியிருப்புக்குள் புகுந்து வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த வழக்கில் ராமநாதபுரம் அருகே ரெட்டையூரணியை சேர்ந்த உமாபதி (32) என்பவரை விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர்.


கொள்ளையடிப்பது ஒன்லி போலீஸ் குவார்ட்டர்ஸ்-  போலீஸில் சிக்கிய பலே திருடன்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் -  வேம்பார் சாலையில் விளாத்திகுளம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் அடுத்தடுத்து அமைந்துள்ளது. இந்த காவல் நிலையங்களுக்கு பின்புறம் காவலர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.   காவலர்கள் குடியிருப்பில் நான்காவது மாடியில் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் காவலராக  பணிபுரிந்து வரும் செந்தில் முருகன் வசித்து வருகிறார். காவலர் செந்தில் முருகன் தனது மனைவி முத்துவுடன் ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தங்களது சொந்த ஊரான மேல கல்லூரணியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சாமி கும்பிட சென்றுள்ளார். இந்நிலையில் 17ஆம் தேதி காலையில் அதே காவலர் குடியிருப்பில் வசித்து வரும்காவலர் முத்து காமாட்சி என்பவர் பணிக்கு புறப்பட்டு வீட்டிலிருந்து வெளியே வரும்போது  எதிர் வீட்டில்  காவலர் செந்தில் முருகன் வீட்டில்  கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து செந்தில் முருகனை தொடர்பு கொண்டு  தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவலர் செந்தில் முருகன் போலீஸ் குடியிருப்புக்கு வந்து பார்த்தபோது  வீட்டின் கதவில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையன் படுக்கை அறையில் இருந்த பீரோவின் உள்புற லாக்கரை உடைத்து  அங்கிருந்த தங்கச் செயின்கள், மோதிரம்,  கம்மல், வளையல், பிரேஸ்லெட் என பத்து சவரன் தங்க நகைகளையும் வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. 


கொள்ளையடிப்பது ஒன்லி போலீஸ் குவார்ட்டர்ஸ்-  போலீஸில் சிக்கிய பலே திருடன்

அதேபோல் காவலர் குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசித்து வரும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண்  காவலர் கிருபா என்பவர் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு தங்க நகைகளும் பணமும் இல்லாததால் கொள்ளையன் வெறும் கையுடன் சென்றதும் தெரிய வந்தது. இது தொடர்பாக காவலர் செந்தில் முருகனின் மனைவி முத்து அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் ஜி. முருகன் வழக்குப்பதிந்தார். தனிப்படை போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.  இந்நிலையில் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த சந்தேகத்திற்குரிய நபர் ராமநாதபுரம் அருகே  ரெட்டையூரணியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் உமாபதி ( 32) என்பது தெரியவந்தது. அவரை தேடிச் சென்றபோது சாயல்குடியில் ஒரு சலூன் கடையில் வேலை பார்த்து வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து சாயல்குடிக்குச் சென்ற விளாத்திகுளம் தனிப்படை போலீசார் அங்கு சலூன் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த உமாபதியை கைது செய்து விளாத்திகுளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில்...

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலக ஊழியர்கள் குடியிருப்பில் தொடங்கி வரிசையாக தேவிப்பட்டினம், திருப்பூர், பல்லடம், கோவை ஆகிய ஊர்களில் போலீசார் குடியிருப்புகளை குறி வைத்து மட்டுமே தொடர்ந்து கொள்ளையடித்து வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 16ஆம் தேதி விளாத்திகுளத்துக்கு வந்த உமாபதி பகலில் காவலர் குடியிருப்பை நோட்டமிட்டுள்ளார். இரவு நேரத்தில் காவலர்கள் செந்தில் முருகன் மற்றும் கிருபா ஆகியோர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது. கைதான உமாபதியை கோவில்பட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 2  நீதிபதி பீட்டர் முன்பு ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை  சிறையில் போலீசார் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IndW vs SAW:  இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
IndW vs SAW: இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade
OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IndW vs SAW:  இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
IndW vs SAW: இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய்,  6 மாதங்களாக திட்டம்”  செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய், 6 மாதங்களாக திட்டம்” செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம்,  4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம், 4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
Embed widget