மேலும் அறிய

திருவாரூர்: குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் பயனில்லை - முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தல்

கூட்டுறவு கடன் சங்கங்களில் சென்று விவசாயிகள் உரம் கேட்டால் தற்பொழுது குறுவை தொகுப்பு திட்டத்திற்கு மட்டுமே உரம் உள்ளதாக தெரிவித்து விவசாயிகளை திருப்பி அனுப்புவதாக தெரிவிக்கின்றனர்

குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் பயனில்லை என்றும் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் திருவாரூர் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வதற்காக தமிழக முதல்வர் மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதன் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளை செய்வதற்கான இலக்கை வேளாண் துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 55 ஆயிரத்து 958 ஏக்கர் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் 33,400 ஏக்கர் நேரடி விதைப்பிலும் 22,558 ஏக்கர் நடவு பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


திருவாரூர்: குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் பயனில்லை - முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தல்

அதே நேரத்தில் காவிரி மற்றும் வெண்ணாறு பாசனத்தில் ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே தண்ணீர் திறந்து விடுவதால் பல்வேறு ஆறுகள் மற்றும் கிளை வாய்க்கால்களில் முழுமையாக தண்ணீர் வந்து சேராத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகையால் முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் விவசாயிகளுக்கு பலன் இல்லாத நிலை உருவாகியுள்ளது. ஆகவே முறை வைக்காமல் ஆறுகளில் முழுமையாக தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் டிஏபி யூரியா உள்ளிட்ட உரங்களின் விலை கடந்த ஆண்டை விட தற்பொழுது அதிகளவு உயர்ந்துள்ளது. மேலும் கூட்டுறவு கடன் சங்கங்களில் சென்று விவசாயிகள் உரம் கேட்டால் தற்பொழுது குறுவை தொகுப்பு திட்டத்திற்கு மட்டுமே உரம் உள்ளதாக தெரிவித்து விவசாயிகளை திருப்பி அனுப்புவதாக தெரிவிக்கின்றனர். ஆகையால் அனைத்து விவசாயிகளுக்கும் உரம் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


திருவாரூர்: குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் பயனில்லை - முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தல்

இதேபோன்று கடந்த ஆண்டு சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது மழையின் காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். ஆகையால் இந்த ஆண்டு அதனை தொடர்ந்து குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டுறவு கடன் சங்கங்களில் நிபந்தனை இல்லாமல் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும். மேலும் ஏற்கனவே உள்ள கடன்களை கட்டினால் மட்டுமே புதிய கடன் வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவிப்பதால் விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பு அடைகின்றனர் என வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் நிபந்தனை இல்லாமல் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலனை கருதி இதேபோன்று விஷயங்களை தங்கு தடை இன்றி விவசாயிகளுக்கு வழங்கினால் மட்டுமே இந்த ஆண்டு குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மண்ணையும் காத்து, மனிதர்களையும் காக்கும் உயிர்ம வேளாண்மை! கலெக்டர் சொன்ன முக்கிய அட்வைஸ்!
மண்ணையும் காத்து, மனிதர்களையும் காக்கும் உயிர்ம வேளாண்மை! கலெக்டர் சொன்ன முக்கிய அட்வைஸ்!
Madurai ; சாலை போடாமல் 30 லட்சத்திற்கு மதிப்பீட்டில் கல்வெட்டு.. கொந்தளித்த உசிலம்பட்டி கிராம மக்கள் !
Madurai ; சாலை போடாமல் 30 லட்சத்திற்கு மதிப்பீட்டில் கல்வெட்டு.. கொந்தளித்த உசிலம்பட்டி கிராம மக்கள் !
TN Bypolls: இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
C. Vijayabasker : ’இது ட்ரெய்லர்தான்’ இணைப்பு விழாவில் மாஸாக பேசிய சி.விஜயபாஸ்கர்..!
’இது ட்ரெய்லர்தான்’ சி.விஜயபாஸ்கர் மாஸ் பேச்சு..!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
C. Vijayabasker : ’இது ட்ரெய்லர்தான்’ இணைப்பு விழாவில் மாஸாக பேசிய சி.விஜயபாஸ்கர்..!
’இது ட்ரெய்லர்தான்’ சி.விஜயபாஸ்கர் மாஸ் பேச்சு..!
பொண்டாட்டியுடன் மல்லுகட்டும் புருஷன்! நாளை ரிலீசாகிறது கட்டா குஸ்தி 2 - கொடி கட்டுமா குஸ்தி?
பொண்டாட்டியுடன் மல்லுகட்டும் புருஷன்! நாளை ரிலீசாகிறது கட்டா குஸ்தி 2 - கொடி கட்டுமா குஸ்தி?
EV Two Wheeler Sales: எகிறிய இ ஸ்கூட்டர் விற்பனை! TVSதான் டாப்பு... ஜுன் மாதத்தில் மத்தவங்க எப்படி?
எகிறிய இ ஸ்கூட்டர் விற்பனை! TVSதான் டாப்பு... ஜுன் மாதத்தில் மத்தவங்க எப்படி?
JanaNayagan Censor: மீண்டும் ஜனநாயகன்..! சென்சாரில் கிடைத்த A சர்டிஃபிகேட்? ஜுலையில் CM விஜய் படம் ரிலீஸ்?
மீண்டும் ஜனநாயகன்..! சென்சாரில் கிடைத்த A சர்டிஃபிகேட்? ஜுலையில் CM விஜய் படம் ரிலீஸ்?
TN Bypolls: இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
Senthil Balaji: செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
481 கி.மீட்டர் மைலேஜ்! இளசுகளின் பல்சை ஏத்தும் Hero Xpulse 210 - விலை எவ்ளோ?
481 கி.மீட்டர் மைலேஜ்! இளசுகளின் பல்சை ஏத்தும் Hero Xpulse 210 - விலை எவ்ளோ?
Embed widget