மேலும் அறிய

திருவாரூர்: குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் பயனில்லை - முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தல்

கூட்டுறவு கடன் சங்கங்களில் சென்று விவசாயிகள் உரம் கேட்டால் தற்பொழுது குறுவை தொகுப்பு திட்டத்திற்கு மட்டுமே உரம் உள்ளதாக தெரிவித்து விவசாயிகளை திருப்பி அனுப்புவதாக தெரிவிக்கின்றனர்

குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் பயனில்லை என்றும் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் திருவாரூர் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வதற்காக தமிழக முதல்வர் மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதன் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளை செய்வதற்கான இலக்கை வேளாண் துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 55 ஆயிரத்து 958 ஏக்கர் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் 33,400 ஏக்கர் நேரடி விதைப்பிலும் 22,558 ஏக்கர் நடவு பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


திருவாரூர்: குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் பயனில்லை - முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தல்

அதே நேரத்தில் காவிரி மற்றும் வெண்ணாறு பாசனத்தில் ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே தண்ணீர் திறந்து விடுவதால் பல்வேறு ஆறுகள் மற்றும் கிளை வாய்க்கால்களில் முழுமையாக தண்ணீர் வந்து சேராத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகையால் முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் விவசாயிகளுக்கு பலன் இல்லாத நிலை உருவாகியுள்ளது. ஆகவே முறை வைக்காமல் ஆறுகளில் முழுமையாக தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் டிஏபி யூரியா உள்ளிட்ட உரங்களின் விலை கடந்த ஆண்டை விட தற்பொழுது அதிகளவு உயர்ந்துள்ளது. மேலும் கூட்டுறவு கடன் சங்கங்களில் சென்று விவசாயிகள் உரம் கேட்டால் தற்பொழுது குறுவை தொகுப்பு திட்டத்திற்கு மட்டுமே உரம் உள்ளதாக தெரிவித்து விவசாயிகளை திருப்பி அனுப்புவதாக தெரிவிக்கின்றனர். ஆகையால் அனைத்து விவசாயிகளுக்கும் உரம் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


திருவாரூர்: குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் பயனில்லை - முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தல்

இதேபோன்று கடந்த ஆண்டு சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது மழையின் காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். ஆகையால் இந்த ஆண்டு அதனை தொடர்ந்து குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டுறவு கடன் சங்கங்களில் நிபந்தனை இல்லாமல் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும். மேலும் ஏற்கனவே உள்ள கடன்களை கட்டினால் மட்டுமே புதிய கடன் வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவிப்பதால் விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பு அடைகின்றனர் என வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் நிபந்தனை இல்லாமல் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலனை கருதி இதேபோன்று விஷயங்களை தங்கு தடை இன்றி விவசாயிகளுக்கு வழங்கினால் மட்டுமே இந்த ஆண்டு குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tamilnadu Power Outage: தமிழ்நாட்டில் நாளை(03-06-26) மின் தடை.. எந்தெந்த மாவட்டங்களில் முழு விவரம்
Tamilnadu Power Outage: தமிழ்நாட்டில் நாளை(03-06-26) மின் தடை.. எந்தெந்த மாவட்டங்களில் முழு விவரம்
EPS Statement: ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்
இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.! மாய உலகில் இருந்து வெளியே வாங்க விஜய் - இபிஎஸ் அதிரடி
கோயில்களில் முறைகேடு.. சாட்டையை சுழற்றும் அமைச்சர் ரமேஷ்.. அடுத்த நடவடிக்கை என்ன?
கோயில்களில் முறைகேடு.. சாட்டையை சுழற்றும் அமைச்சர் ரமேஷ்.. அடுத்த நடவடிக்கை என்ன?
நேபாளத்திற்கு தப்பியிருக்கலாம்.. கொலை வழக்கில் தேடப்படும் தம்பதியை பிடிக்க போலீஸ் தீவிரம்.
நேபாளத்திற்கு தப்பியிருக்கலாம்.. கொலை வழக்கில் தேடப்படும் தம்பதியை பிடிக்க போலீஸ் தீவிரம்.
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Statement: ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்
இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.! மாய உலகில் இருந்து வெளியே வாங்க- இபிஎஸ்
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
CM VIJAY CABINET LIST : விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
Annamalai Rajini: ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
Embed widget