மேலும் அறிய

கனமழை: இரண்டாவது முறை இடிந்த கமலாலயக் குளம் சுற்றுச்சுவர்!

நேற்று இரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் இரண்டாவது முறையாக திருவாரூர் நகராட்சிக்கு எதிர்புறமாக உள்ள கமலாலய குளத்தில் தென்கரை 100 மீட்டர் தூரம் முழுமையாக இடிந்து விழுந்துள்ளது.

கனமழையின் காரணமாக கமலாலயக் குளத்தின் சுற்றுச்சுவர் இரண்டாவது முறையாக 100 மீட்டர் இடிந்து விழுந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
திருவாரூரில் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் குளம் உள்ளது. இந்தக் கோயிலில் ராஜராஜசோழன் வந்து வழிபட்டுச் சென்றதாக வரலாறு உள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோயில் ஐந்து வேலியும், குளம் ஐந்து வேலியும் என்ற சம நிலப்பரப்புடன் இந்த குளம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த குளத்தின் தென்கரை, வடகரை, மேற்குக்கரை, உள்ளிட்ட நான்கு கரைகளிலும் இந்து சமய அறநிலை துறை சார்பில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்று கனமழையின் காரணமாக கமலாலயக் குளத்தின் வடகரையில் மேற்குக் கரையும் இடிந்து விழுந்தது. இதற்கு காரணம் இந்தப் பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதே என பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர். அதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் இந்தப் பகுதிகளில் கனரக வாகனம் செல்வதற்கு அனுமதி மறுத்தது. அதன் பின்னர் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய சுற்று சுவர் கட்டப்பட்டது.

கனமழை: இரண்டாவது முறை இடிந்த கமலாலயக் குளம் சுற்றுச்சுவர்!
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக கமலாலயக் குளத்தின் தென்கரையில் 500 மீட்டர் தூரம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது அதனையடுத்து சுற்று சுவர் இடிந்து விழுந்த இடத்தை இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனடியாக வந்து ஆய்வு செய்தனர் மேலும் புதியதாக சுற்றுச்சுவர் அமைக்க வல்லுநர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் தெரிவித்து அதற்கான நிதி பெறப்பட்டு சுற்றுசுவர் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் தேவர் பாபி தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் நேற்று இரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் இரண்டாவது முறையாக திருவாரூர் நகராட்சிக்கு எதிர்புறமாக உள்ள கமலாலய குளத்தில் தென்கரை 100 மீட்டர் தூரம் முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. அதுமட்டுமன்றி தென்கரையில் சாலைகள் முழுவதுமாக விரிசல் விடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து காவலர்கள் பேரிகார்டு அமைத்து போக்குவரத்தை துண்டித்து உள்ளனர். 

கனமழை: இரண்டாவது முறை இடிந்த கமலாலயக் குளம் சுற்றுச்சுவர்!
மேலும் காலை முதல் தொடர்ந்து திருவாரூரில் மழை பெய்து வருவதால் மழையையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் நகராட்சி ஊழியர்கள் சுற்றுச் சுவரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து தியாகராஜர் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா வந்த பொதுமக்கள் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் சுற்றுச் சுவரை ஒட்டி உள்ள சாலைகள் முழுவதுமாக விரிசல் அடைந்து வருகின்றன இதனால் இந்த பகுதியில் எந்த நேரத்திலும் சுற்றுச் சுவர் முழுவதும் இடிந்து விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் புதிய சுற்றுச்சுவர் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என திருவாரூர் மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்ட மக்களே கவனத்திற்கு: காரைமேடு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் வேலைவாய்ப்பு!
மயிலாடுதுறை மாவட்ட மக்களே கவனத்திற்கு: காரைமேடு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் வேலைவாய்ப்பு!
குலுங்கப்போகும் மதுரை.. நாளை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு - தூங்காநகரத்திற்கு போக இத்தனை பஸ்ஸா?
குலுங்கப்போகும் மதுரை.. நாளை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு - தூங்காநகரத்திற்கு போக இத்தனை பஸ்ஸா?
Iran Vs Saudi Vs America: ட்ரோன், ஏவுகணைகளால் சவுதியை புரட்டி எடுக்கும் ஈரான்.! பீதியில் அமெரிக்கா.! குடிமக்களுக்கு வார்னிங்
ட்ரோன், ஏவுகணைகளால் சவுதியை புரட்டி எடுக்கும் ஈரான்.! பீதியில் அமெரிக்கா.! குடிமக்களுக்கு வார்னிங்
கடைமடையில் காவிரி! கொண்டாட்டம் ஒரு பக்கம்... பெரும் கவலை மறுபக்கம்!
கடைமடையில் காவிரி! கொண்டாட்டம் ஒரு பக்கம்... பெரும் கவலை மறுபக்கம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
EPF New Rule: தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
TVK vs DMK:
TVK vs DMK: "காசுக்கு வர்ற கூட்டத்துக்கும், அன்பால வர்ற கூட்டத்துக்கும் வித்தியாசம் தெரியலயா?" திமுக-வுக்கு தவெக கேள்வி
குலுங்கப்போகும் மதுரை.. நாளை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு - தூங்காநகரத்திற்கு போக இத்தனை பஸ்ஸா?
குலுங்கப்போகும் மதுரை.. நாளை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு - தூங்காநகரத்திற்கு போக இத்தனை பஸ்ஸா?
Paranthaman DMK:
Paranthaman DMK: "நானும் விஜய் ரசிகன்தான்.." முதலமைச்சர் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்ட திமுக வேட்பாளர்! கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்!
Nexon New Gen. Launch: மாஸான லுக்குடன் களமிறங்கப் போகும் புதிய தலைமுறை டாடா நெக்ஸான்; மாற்றங்கள் என்ன.? அறிமுகம் எப்போ.?
மாஸான லுக்குடன் களமிறங்கப் போகும் புதிய தலைமுறை டாடா நெக்ஸான்; மாற்றங்கள் என்ன.? அறிமுகம் எப்போ.?
Vaaladi Karthik : ‘அன்பில் மகேஸின் வலதுகரம் - குறி வைத்த போலீஸ்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
‘குறி வைத்த போலீஸ் – அன்பில் மகேஸின் வலதுகரம்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
Anbil Mahesh Case : 'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட அறிக்கை..!
Embed widget