மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் டெங்கு அதிகரிப்பா? - உண்மை நிலையை சொல்ல தயங்கும் அதிகாரிகள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதாக பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் டெங்கு காய்ச்சல் போன்ற மழைக்கால நோய்கள் அதிகரிக்கும். அவ்வாறு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவ சேவை துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 முறை கூட்டங்களை நடத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்களுக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். 


மயிலாடுதுறை மாவட்டத்தில் டெங்கு அதிகரிப்பா? - உண்மை நிலையை சொல்ல தயங்கும் அதிகாரிகள்!

இந்நிலையில் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று சென்னை வந்தது. இந்த குழு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் டெங்கு நோயாளிகளிடம் இன்று ஆய்வு நடத்துகிறது. டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் மத்திய சுகாதார குழு ஆய்வு நடத்த, மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, மண்டல இயக்குனர் டாக்டர் ரோஷிணி தலைமையில், டாக்டர் நிர்மல் ஜோ, டாக்டர் ஜான்சன் அமலா ஜஸ்வின் ஆகிய 3 பேர் கொண்ட மத்திய குழு நேற்று சென்னை வந்தது. இந்த குழுவினர் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தனர். 


மயிலாடுதுறை மாவட்டத்தில் டெங்கு அதிகரிப்பா? - உண்மை நிலையை சொல்ல தயங்கும் அதிகாரிகள்!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் தொடர்பாக அதிக நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெருமளவு குறைந்துள்ள சூழலில் தற்போது காய்ச்சல் என அதிக நபர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 


மயிலாடுதுறை மாவட்டத்தில் டெங்கு அதிகரிப்பா? - உண்மை நிலையை சொல்ல தயங்கும் அதிகாரிகள்!

டெங்கு காய்ச்சல் குறித்த உண்மை நிலையை மக்களுக்கு தெரிவித்து டெங்கு குறித்த உண்மை நிலையை வழங்க ஏபிபி செய்தி நிறுவனம் மயிலாடுதுறை மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் மருத்துவர் பிரதாப் குமாரிடம் கேட்டபோது டெங்கு காய்ச்சல் குறித்த விவரம் தங்களிடம் இல்லை என்றும், அதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மருத்துவர் லியாக்கத்அலி கேட்டு கொள்ள வேண்டுமென தெரிவித்தார். அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாக்கத் அலி தொடர்புகொண்டு கேட்டபோது நாகப்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறை தனியாக பிரிக்கப்பட்டு அதற்கென தனி சுகாதார இணை இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது இது குறித்த தகவலை அவர்கள் தான் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் டெங்கு அதிகரிப்பா? - உண்மை நிலையை சொல்ல தயங்கும் அதிகாரிகள்!

டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் குறித்த விவரம் தங்களிடம் இல்லை என பொறுப்பற்ற முறையில் அதிகாரிகள் கூறுவது மயிலாடுதுறை மாவட்டத்தில் பெருகி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார துறை தவறிவிட்டதாக ஐயம் மக்களிடையே எழுந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Embed widget