விதிமுறை மீறல்... பாஜக சுவர் விளம்பரத்தை அழித்த தேர்தல் பறக்கும் படை
தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை மேலத்தெரு பகுதியில் சுவர் முழுவதும் நேற்று அதிகாலையில் பாஜகவின் சின்னமாக தாமரை வரையப்பட்டு இருந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை மேலத்தெரு பகுதியில் இரவோடு இரவாக சுவர்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி வரையப்பட்ட பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தை அழிக்கும் பணியில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டனர்.
உங்களுக்கு ஒரு நியாயம்... ஊருக்கு ஒரு நியாயமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன. இதனால் தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

இதன்படி தஞ்சாவூா் கீழ் பாலம், சிவகங்கை பூங்கா, தற்காலிக மீன் சந்தை, தெற்கு வீதி, கீழ வீதி, பழைய பேருந்து நிலையம், ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை பணியாளா்கள் மூலம் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களை கொண்டு அகற்றப்பட்டது. இதேபோல, அரசியல் கட்சி சுவா் விளம்பரங்களும் முழுமையாக அழிக்கப்பட்டது.
இதேபோல் தஞ்சாவூா் ரயிலடியிலுள்ள எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகளில் இரட்டை விரல்களை உயா்த்தியபடி உள்ளதால், அது சின்னத்தின் அறிகுறி எனக் கூறி, அதை மட்டும் அதிகாரிகள் மறைத்தனா். மேலும் தனியாா் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ், விளம்பரங்கள் போன்றவையும் அகற்றப்பட்டன. இவ்வாறு தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை மேலத்தெரு பகுதியில் சுவர் முழுவதும் நேற்று அதிகாலையில் பாஜகவின் சின்னமாக தாமரை வரையப்பட்டு இருந்தது. இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடன் அப்பகுதிக்கு விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சுவர் முழுவதும் வரையப்பட்டு இருந்த பாஜகவின் சின்னத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், நேற்று முன்தினம் இரவு வரை இந்த சுவரில் பாஜகவின் தாமரை சின்னம் இல்லை. ஆனால் இன்று அதிகாலை வேளையில் சுவர் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறி யாரோ தாமரைச்சின்னத்தை வரைந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த தேர்தல் பறக்கும்படையினர் இதை அழித்தனர். ஊருக்கெல்லாம் ஒரு நியாயம்... உங்களுக்கு மட்டும் ஒரு நியாயமா என்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















