மேலும் அறிய

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.. 2026ல் அதிமுக ஆட்சி அமைக்கும்: எம்எல்ஏ வைத்திலிங்கம் சூளுரை

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆனால், அ.தி.மு.க., இணைய கூடாது என நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் தானாகவே அ.தி.மு.க.,வை விட்டு வெளியேறி விடுவார்கள்.

தஞ்சாவூர்: எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வரும் 2025ம் ஆண்டு டிசம்பருக்குள் அ.தி.மு.க., ஒற்றுமையாகும். 2026ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என்று தஞ்சாவூரில் ஓ.பி.எஸ்., ஆதரவாளரும், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.,வுமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.

அதிமுக ஒன்றாக இணைய வேண்டும்

இதுகுறித்து அவர் தஞ்சையில் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:  அ.தி.மு.க., தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் கட்சி ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகின்றனர். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலிலதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என நினைக்கின்றனர். அந்த எண்ணத்தை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆத்மாக்கள் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா?

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆனால், அ.தி.மு.க., இணைய கூடாது என நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் தானாகவே அ.தி.மு.க.,வை விட்டு வெளியேறி விடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். ஒற்றை தலைமையா?, இரட்டை தலைமையா? என்பது அ.தி.மு.க., இணையும் போது முடிவுக்கு வரும்.

2025ம் ஆண்டு டிசம்பருக்குள் அ.தி.மு.க., ஒற்றுமையாகும். 2026ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். கடந்த நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை கொண்டு தான், அவர் அ.தி.மு.கவை அழித்து விடுவார் என டிடிவி. தினகரன் கருத்து தெரிவித்தார். உண்மையும் அதுதான்.

150 இடங்களில் வெற்றி பெறும் என ஏமாற்றினார்

கடந்த 2021ம் ஆண்டில் அ.ம.மு.க., தே.மு.தி.க.வை அ.தி.மு.க., கூட்டணியில் சேர்க்க வேண்டும் என நானும், நத்தம் விசுவநாதனும் வற்புறுத்தினோம். அன்றைக்கு அ.தி.மு.க., தனித்து நின்றே 150 இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என எடப்பாடி பழனிசாமி கூறி எல்லோரையும் ஏமாற்றினர். லோக்சபா தேர்தலிலும் பெரிய மகா கூட்டணி உருவாகும் நாம் 40 சதவீதம் வெற்றி பெற்று விடலாம் என கூறினார். ஆனால் 20 சதவீதம் அளவுக்கு இன்றைக்கு மோசமான நிலைக்கு அ.தி.மு.க.,வை பழனிசாமி கொண்டு வந்துள்ளதை நினைத்து தினகரன் கருத்து தெரிவித்து இருப்பார்.

அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செய்கிறார். சசிகலா  எடப்பாடி பழனிசாமி, தினகரன், ஓபிஎஸ் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வீட்டைப் பெறும்போதுதான் சுயமரியாதை உயர்கிறது" எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
"நம்பர் 1 பயங்கரவாதி" ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவுDMK VS PMK | ’’உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தா?’’கடுப்பாகி கத்திய பாமக MLA! திமுக vs பாமகManimegalai Priyanka Fight | மூக்கை நுழைத்த பிரியங்கா? GOOD BYE சொன்ன மணிமேகலை” நீ அவ்ளோ பெரிய ஆளா”Cuddalore News | ”டேய் பஸ்ஸ நிறுத்துடா”போதை ஆசாமி ரகளைசாலையில் அடித்த லூட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வீட்டைப் பெறும்போதுதான் சுயமரியாதை உயர்கிறது" எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
"நம்பர் 1 பயங்கரவாதி" ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Thalapathy Vijay: ஷாருக்கானை ஓரம் கட்டிய தளபதி விஜய் - இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் - எவ்வளவு தெரியுமா?
Thalapathy Vijay: ஷாருக்கானை ஓரம் கட்டிய தளபதி விஜய் - இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் - எவ்வளவு தெரியுமா?
Job Fair: அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: எங்கே? எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
Job Fair: அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: எங்கே? எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
Vidamuyarchi : விடாமுயற்சி வேண்டாம்...குட் பேட் அக்லி போதும்... பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள்
Vidamuyarchi : விடாமுயற்சி வேண்டாம்...குட் பேட் அக்லி போதும்... பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள்
Embed widget