மேலும் அறிய

தஞ்சையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 1,11,400 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டம்

’’15-18 வயதினர் படிக்கும் 441 பள்ளிகளில் அமைக்கப்பட்டு 1,11,400 பயனாளிகளுக்கு பள்ளி நலவாழ்வு திட்டம் மற்றும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு'’

தஞ்சாவூர் மாநகராட்சி அரசர் மேல் நிலைப்பள்ளி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 15-18 வயதினருக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசுகையில், தஞ்சாவூர்  மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 19,27,100 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு, இதுவரை முதல் தவணை 16,42,758 (85 சதவீதம்) நபர்களுக்கும் இரண்டாம் தவணை 10,10,703 (52.4 சதவீதம்) நபர்களுக்கும் தடுப்பூசி முகாம்கள் மற்றும் மெகா தடுப்பூசி முகாம்கள்  மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு உத்தரவின் படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 15  வயது முதல்  18 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது.


தஞ்சையில் 15 முதல்  18 வயதுக்கு உட்பட்ட 1,11,400 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டம்
மேலும், இம்முகாம்கள் 15-18 வயதினர் படிக்கும் 441 பள்ளிகளில் அமைக்கப்பட்டு 1,11,400 பயனாளிகளுக்கு பள்ளி நலவாழ்வு திட்டம் மற்றும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஊரக பகுதிகளில் 42 மருத்துவக்குழுக்கள் நகரப்புற பகுதிகளில் 8 மருத்துவக்குழுக்கள் என மாவட்ட அளவில் மொத்தம் 50 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 8ஆம் தேதி வரை தஞ்சாவூர்  மாவட்டத்தில் உள்ள 441 அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் இம்முகாம்கள் அமைக்கவும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் படிக்காத 15-18 வயதினருக்கு மருத்துவக் குழுக்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி வழங்கிட பொதுசுகாதாரதுறை, கல்வித்துறை, வருவாய்துறை, உள்ளாட்சித்துறை, சமூகநலத்துறை, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இதர அரசுத்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

தஞ்சையில் 15 முதல்  18 வயதுக்கு உட்பட்ட 1,11,400 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டம்

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 15 முதல் 18 வயதுடைய தங்களது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தவறாது செலுத்திக்கொண்டு கொரோனா தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும். அனைவரும் வெளியில் வரும் போதும், பள்ளிளுக்குள் வரும் போதும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும்  என்றார். தொடர்ந்து, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் தலைமையில், திருவிடைமருதூர் ஒன்றியம், நாச்சியார்கோவில் ஊராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியில் 15-18 வயதினருக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்கள். இதில் அனைத்து பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.

கள் போதை பொருள் அல்ல என்பது முதல்வருக்கு தெரியும் - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Embed widget