மேலும் அறிய

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு; தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவு செய்வதற்கு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவு செய்வதற்கு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பிறந்த நாளான செப். 15-ம் தேதி ஒரு கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. எனினும், திமுக அரசு பொறுப்பேற்ற உடனேயே திட்டம் தொடங்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. தரவுகள் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்ததே தாமதத்துக்குக் காரணம்.

நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், ஒரு கோடிமகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்க, ரூ.7 ஆயிரம்கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், செப். 15-ம் தேதி திட்டம் தொடங்கப்படும் எனவும் அறிவிப்பும் வெளியானது. இந்த திட்டத்தில் சிறு பிசகு ஏற்பட்டாலும், அரசின் மீதான மக்கள் நம்பிக்கை சிதைந்துவிடும் என்பதால், முதல்வர் ஸ்டாலின் முழு கவனத்துடன் இந்த திட்டத்தைக் கண்காணித்து வருகிறார்.

திட்டத்தின் பயனாளிகள், அவர்களுக்கான தகுதிகள் ஆகியவற்றை முடிவு செய்வதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், தகுதியானவர்களைக் கண்டறிய ஒரு கட்டமைப்பையும் அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக சேகரிக்கப்பட்ட தரவுகள், அடுத்தடுத்த அரசின் திட்டங்களுக்கு பெரிய அளவுக்குப் பயன்தரும். திட்டப் பயனாளி 21 வயதுக்கு மேற்பட்ட குடும்பத் தலைவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு; தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

ஒரு வீட்டில் 2, 3 பேர் இருந்தால், அவர்களே ஒரு பயனாளியை தேர்வு செய்யலாம். அதேபோல, திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகளை குடும்ப தலைவியாகக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை தமிழக அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதற்காக ரேஷன்கடைகள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அதனை முகாம் அமைத்து பதிவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 500 விண்ணப்பதாரர்களுக்கு ஒரு தன்னார்வலர், ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொறுப்பாளராக கிராம நிர்வாக அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். 

தஞ்சை தாலுகாவில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி தஞ்சை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட வருவாய் அதிகாரி (பொ) செந்தில்குமாரி தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் முன்னிலையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தாசில்தார் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ரேஷன் கடைகளில் பயனாளர்களுக்கு வழங்கப்படும் விண்ணப்பங்களை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

இதற்காக தன்னார்வலர்களுக்கு தனியாக செயலியும் அளிக்கப்பட்டு பதிவு செய்யப்பட உள்ளது. இந்த பயிற்சி கடந்த 3 நாட்களாக அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலையில் 100 தன்னார்வலர்களுக்கும், மாலையில் 100 தன்னார்வலர்களுக்கும் என 200 பேருக்கு தினமும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வரும் 24ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடைபெறுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
Embed widget