மேலும் அறிய

திருவையாறு: காவிரி ஆற்றில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ராஜாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஹரிபிரசாத் (16). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இதேபோல் திருவையாறு மேலவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பிரவீன் (12). இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் ஹரிபிரசாத், பிரவீன் மற்றும் அவரது  நண்பர்கள் சிலர் சேர்ந்து திருவையாறு 15-ம் மண்டபம் அய்யப்பன்கோவில் படித்துறை காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. அப்போது ஹரிபிரசாத், பிரவீன் ஆகிய 2 பேரும் தண்ணீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனால் இருவரும் அலறியுள்ளனர். 

இதை பார்த்த சக நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் ஆற்றில் தண்ணீரின் வேகம்  அதிகம் இருந்தால் அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனே கரைக்கு வந்து பொதுமக்களிடம் இதுகுறித்து கதறிக்கொண்டே தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தண்ணீரில் ஹரிபிரசாத், பிரவீன் ஆகிய இருவரும் ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கினர். தொடர்ந்து பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் குதித்து மாணவர்களை தேடினர்.

சற்று தொலைவில் இரு மாணவர்களையும் மயங்கிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள்  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget