மேலும் அறிய

தஞ்சையில் இன்றும் விட்டு விட்டு பெய்த சாரல் மழை… அறுவடைப்பணிகள் பாதிப்பு

பலத்த மழையும், லேசான தூறலுமாக மழை பெய்து வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சை நேற்று மழை பெய்த நிலையில் இன்றும் பல பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்று காலை 6 மணி முதல் தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. அவ்வப்போது வேகமாகவும் மழை கொட்டி தீர்த்தது. மதியம் 3 மணி வரையிலும் இந்த மழை நீடித்தது. இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையும், லேசான தூறலுமாக மழை பெய்து வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை முதல் சாரல் மழை அவ்வப்போது பெய்தது. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். காலம் தாழ்த்தியும், கடந்த பருவமழையால் நாற்றுக்கள் பாதித்து மீண்டும் நாற்று நட்டு நடவு செய்த விவசாயிகளுக்கு இந்த மழை பயன் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன

தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் இடையூறாகச் சுற்றித் திரியும் கால்நடைகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பிடித்து காப்பகத்துக்குக் கொண்டு செல்லவும், அபராத தொகை விதிக்கவும் ஜனவரி 27 ஆம் தேதி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, மாநகரிலுள்ள சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடிக்கும் பணி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க. சரவணகுமார், மாநகர் நல அலுவலர் வீ.சி. சுபாஷ் காந்தி ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இதில், தஞ்சாவூர் தெற்கு வீதியிலும், பழைய பேருந்து நிலையத்திலும் சுற்றித் திரிந்த மாடுகளைப் பணியாளர்கள் பிடித்தனர்.

காப்பகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து மாநகர் நல அலுவலர் தெரிவித்தது:
இந்த மாடுகள் பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் தங்களுடைய கால்நடைகளைச் சாலைகளில் விடாமல் வீட்டில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறினால் மாநகராட்சியால் விதிக்கப்படும் அபராத தொகை மற்றும் கால்நடைகளை பேணி காப்பதற்காக ஏற்படும் செலவை கால்நடை உரிமையாளர்களிடம் இருந்து பெறப்படும்.

இதில், அபராத தொகையாக முதல் முறை பிடிபடும் மாடு ஒன்றுக்கு ரூ. 3,000}ம், கன்றுக்கு ரூ. 1,500}ம், வசூலிக்கப்படும். இரண்டாவது முறையாக அதே மாடு பிடிக்கப்படும் நிலையில், மாடு ஒன்றுக்கு ரூ. 4,000}ம், கன்றுக்கு ரூ. 2,000}ம், மூன்றாவது முறை அதே மாடு பிடிபட்டால் மாடு ஒன்றுக்கு ரூ. 5,000}ம், கன்றுக்கு ரூ. 2,500}ம் அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிடிபட்டு காப்பகத்தில் அடைக்கப்படும் கால்நடைகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே மாடு தொடர்ந்து பிடிபட்டால் மாநகராட்சி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்டு, ஏலத்தில் விடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
Tamilnadu Heat Wave : வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! 7 மாவட்டங்களுக்கு அலர்ட்- கொளுத்தப்போகுது வெயில்
வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! 7 மாவட்டங்களுக்கு அலர்ட்- கொளுத்தப்போகுது வெயில்
Embed widget