மேலும் அறிய

இந்த அணையை சுற்றுலா தலமாக அறிவித்தால், வருமானம் அரசுக்கு கிடைக்கும் - பொதுமக்கள் வேண்டுகோள்

இந்த அணையை சுற்றுலா தலமாக அறிவித்தால், வருமானம் அரசுக்கு கிடைக்கும் என்பதோடு, இந்தப் பகுதி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது அடித்தளமாக அமையும்.  

காவிரி பாசனத்தின் கடைமடைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்ற சிறிய அணை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள மூனாற்றுத் தலைப்பு ஆகும். திருவாரூர், நாகை மாவட்டத்தை நோக்கி பாய்கின்ற வெண்ணாறானது, நீடாமங்கலம் அருகே வெண்ணாறு, கோரையாறு, பாமணி ஆறு என 3 ஆகப் பிரிகின்றது. இந்த ஆறுகள்தான் திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு கீழ் 9 பெரிய ஆறுகளாகவும்,  50க்கும் மேற்பட்ட சிறிய ஆறுகளாகவும் பிரிந்து, காவிரி டெல்டாவின் கடைமடையில் உள்ள சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு பாசனத்துக்கு தண்ணீர் கொண்டு சேர்க்கின்றது. எனவே இந்த மூனாற்றுத் தலைப்பு காவிரி கடைமடைக்கு முக்கியத்துவம் வாய்ந்த  அணை ஆகும். இந்த அணை, 1874ம் ஆண்டு கட்டப்பட்டது. இன்றும் அதன் உறுதித் தன்மை குறையாமல் உள்ளது. இந்த அணைதான் வெள்ள காலங்களில் தண்ணீரை தேவையான ஆறுகளின் வாயிலாக திருப்பி பெரும் வெள்ளச் சேதங்களை திருவாரூர், நாகை மாவட்டங்களில் தவிர்க்க இன்றளவும் உதவி செய்வதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 


இந்த அணையை சுற்றுலா தலமாக அறிவித்தால், வருமானம் அரசுக்கு கிடைக்கும் - பொதுமக்கள் வேண்டுகோள்

குறிப்பாக இந்த அணையின் அழகிய கட்டமைப்பு மற்றும் இயற்கையான சூழல் இவற்றை பார்த்து ரசிக்க, மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளிலிருந்து மட்டுமே மக்கள் வந்து செல்கின்றனர். இதற்கு காரணம் இப்படி ஒரு சிறிய அணை இருப்பதை பொதுப்பணித்துறை தற்போது நீர்வள ஆதாரத்துறை நீண்ட நாட்களாக வெளிப்படுத்த முயற்சிக்காமல் உள்ளது. குறிப்பாக இந்த மூனாற்றுத் தலைப்பு தஞ்சை மற்றும் நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால், தஞ்சையிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் ஏராளமான சுற்றலா பயணிகள், வேளாங்கண்ணி, நாகூர் பகுதிக்கு சென்று வருகின்ற கேரளா பகுதி பக்தர்கள் இளைப்பாறுவதற்கு தகுந்த இடம். இதனை பயன்படுத்தி இந்த அணையை சுற்றுலா தலமாக அறிவித்தால், வருமானம் அரசுக்கு கிடைக்கும் என்பதோடு, இந்தப் பகுதி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது அடித்தளமாக அமையும்.  


இந்த அணையை சுற்றுலா தலமாக அறிவித்தால், வருமானம் அரசுக்கு கிடைக்கும் - பொதுமக்கள் வேண்டுகோள்

இதுபற்றி மூனாற்றுத் தலைப்புக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்திருந்த பொதுமக்கள் கூறும்பொழுது, நாங்கள் மன்னார்குடி பகுதியிலிருந்து வருகின்றோம். ஆற்றில் தண்ணீர் வருகின்ற காலகட்டங்களில் இந்த அணைக்கு வந்து ஓய்வு எடுப்பதையும், ஆற்றில் குளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளோம். திருவாரூர் மாவட்டத்தில் கேளிக்கை சுற்றுலா என்பதே இல்லை. பார்த்து ரசிக்க 2 பறவைகள் சரணாலயங்கள் மட்டுமே உள்ளன. அவற்றுக்கும் இந்த அணையிலிருந்துதான் தண்ணீர் சென்றாக வேண்டும். இந்த சூழலில் மூனாற்றுத் தலைப்பை சுற்றுலா தலமாக அறிவித்து,  ஆறுகளில் மக்கள் குளிப்பதற்கு தடுப்பு கம்பிகள் அமைத்தல், படகு சவாரி விடுதல், குழந்தைகள் விளையாடுவதற்கு பார்க் வசதியை ஏற்படுத்தினால்  பொதுமக்களுக்கு நல்ல சுற்றுலா தலம் கிடைக்கும். இப்பகுதியில் படிக்கும் பள்ளி குழந்தைகளை சுற்றுலா அழைத்து வந்து இந்த 3 ஆறுகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்க முடியும் என்றனர். இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, மூனாறுத்தலைப்பு அணையை சுற்றுலாதலமாக அறிவிக்க ஏற்கனவே 7 முறை திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சுற்றுலா தலமாக  அறிவித்தால், அணைக்கு அருகில் பெரிய பாலம் கட்ட  வேண்டும், தற்போதைய நிலையில் போக்குவரத்துக்கு சாலை வசதி மிகவும் குறுகலாக உள்ளது. இதுபோன்ற இடர்பாடுகளை களைய அரசு, சுற்றுலாத்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்தால் மட்டுமே சாத்தியமாகும். இதனை சுற்றுலா தலமாக அறிவித்தால் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மூனாற்றுத் தலைப்பை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் என்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
ABP Premium

வீடியோ

Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Bigg Boss Tamil: ”பீடை பாரு, பொறுக்கி கம்ருதின்”.. வாயடைக்கச் செய்த திவ்யா - ஃபயர் விடும் நெட்டிசன்கள்.. வீடியோ
Bigg Boss Tamil: ”பீடை பாரு, பொறுக்கி கம்ருதின்”.. வாயடைக்கச் செய்த திவ்யா - ஃபயர் விடும் நெட்டிசன்கள்.. வீடியோ
Tamilnadu Roundup: திமுக மொபைல் செயலி இன்று அறிமுகம், வாக்காளர் சிறப்பு முகாம், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
திமுக மொபைல் செயலி இன்று அறிமுகம், வாக்காளர் சிறப்பு முகாம், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
Embed widget