மேலும் அறிய

கர்ப்பிணிக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்ததால் குழந்தை மூளைச்சாவு அடைந்ததா? கொதிக்கும் உறவினர்கள்..

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு வயிற்றில் குழந்தைக்கு எவ்வித அசைவும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் தெரிவித்தும் அலட்சியமாக சிகிச்சை ஏதும் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது

கர்ப்பிணி பெண்ணிற்கு அலட்சியமாக சிகிச்சை அளித்ததால் குழந்தை மூளைச்சாவடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிறந்ததிலிருந்து குழந்தையை தனக்கு காட்டவில்லை என தந்தை புகார் தெரிவித்துள்ளார்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாண்டிக்கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர் மதன் வயது 26. இவரது மனைவி வினோதினி வயது 23. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று காலை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் காலை 10 மணியிலிருந்து தனது வயிற்றில் உள்ள குழந்தையிடமிருந்து எவ்வித அசைவும் இல்லை என்று மருத்துவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.  ஆனால் மருத்துவர்கள் உடனே பரிசோதிக்காமல் மாலை அலட்சியப்படுத்தி மாலை 3 மணிக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் 4.52 மணிக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், குழந்தையை உடனடியாக சிசு தீவிர சிகிச்சை பிரிவிற்கு கொண்டுசென்று செயற்கை சுவாசத்தில் வைத்துள்ளதாகவும் மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

என் குழந்தையை காட்ட வேண்டும் என்று உறவினர்கள் மருத்துவமனைக்கு எதிரில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது அதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். குழந்தையை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அவர்களிடம் உறுதியளித்தனர். 


கர்ப்பிணிக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்ததால் குழந்தை மூளைச்சாவு அடைந்ததா? கொதிக்கும் உறவினர்கள்..

மேலும் இது குறித்து உறவினர் ஒருவர் கூறுகையில், ”நேற்று முன்தினம் காலை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு வயிற்றில் குழந்தைக்கு எவ்வித அசைவும் ஏற்படவில்லை என்று பலமுறை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் தெரிவித்தும் அலட்சியமாக சிகிச்சை ஏதும் அளிக்காமல் இருந்ததார்கள். மேலும் அறுவை சிகிச்சைக்கான உடைகளை மாற்றிய பிறகும் வெகு நேரம் காத்திருக்க வைத்தார்கள்” என்றும் கூறினார்.

பிறகு மாலை 3 மணிக்கு மேல் அறுவை சிகிச்சை அரங்கிற்கு கொண்டு சென்று 5 மணிக்கு ஆண் குழந்தையும் பிறந்ததாக தெரிவித்தார்.இந்த குழந்தையை எங்கள் கண்ணில் காட்டாமல் நேராக எடுத்துச்சென்று சிகிச்சை அளித்தது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார். இதனையடுத்து இன்று இரவு மருத்துவர் ஒருவர் மதனின் அம்மா மஞ்சுளாவிடம் குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.மேலும் குழந்தையை பிறந்ததிலிருந்து தனக்கு காட்டவில்லை என்றும் மதன் புகார் தெரிவிக்கிறார். 


கர்ப்பிணிக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்ததால் குழந்தை மூளைச்சாவு அடைந்ததா? கொதிக்கும் உறவினர்கள்..

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி மன்னார்குடி நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஏற்படும் உயிரிழப்புகள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவர்களை குற்றம் சாட்டுகின்றனர். 

இது குறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் கேட்டபோது கர்ப்பிணி பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும்,ஏற்கனவே அவர்கள் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் நேற்று காலை தான் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget